"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Friday, July 11, 2014

வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு ராமதாஸ் மரியாதை



விடுதலை போராட்டத்துக்கு முதல் வித்திட்ட வீரன் அழகுமுத்துக்கோனின் 276–வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை, கோகுல மக்கள் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சிறப்பு விருந்தினராக சமூக ஜனநாயக கூட்டணி தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு மாலை அணிவித்தார். கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, தேசிய பார்வர்டு பிளாக் நிறுவனர் பி.டி.அரசகுமார், கொங்குநாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ், தெலுங்கு மக்கள் கட்சி தலைவர் ராஜ்குமார், வேளாளர், பிள்ளைமார், செங்குந்த முதலியார் கூட்ட மைப்பு தலைவர் கே.ராஜன், கொங்குநாடு மேட்டுவ கவுண்டர் முன்னேற்ற சங்க தலைவர் முனுசாமி ஆகியோரும் மாலை அணி வித்தனர்.

பின்னர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

சுதந்திர போராட்டத்திற்காக முதன் முதலில் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீரர் அழகு முத்துகோனுக்கு அவர் போரிட்டு உயிர்நீத்த இடமான தூத்துக்குடி மாவட்டம் காட்டாங்குளமேட்டில் அவருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும்.அவரது வாழ்க்கை வரலாற்றை பாடபுத்தகத்தில் சேர்க்க வேண்டும். இது அந்த சமுதாய மக்களின் கோரிக்கை மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையாக ஏற்று அரசு செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar