"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Wednesday, July 2, 2014

இடையர் என பெயர் வரக் காரணம் என்ன


          முல்லை நில மக்கள் இடையர் என்றும் அழைக்கப்பெறுவர். ‘இடையர்’ என்னும் பெயர் ஏற்ப்பட்டதற்கானக் காரணத்தைச் சொல்லவந்த மு.அருணாசலம்பிள்ளை. “முல்லைநிலம்,பாலை குறிஞ்சி என்னும் நிலங்களைப் போல வன்னியமாதலும், மருதம், நெய்தல் என்னும்  நிலங்களைப் போல் மென்னியமாதலும் அன்றி, இடைப்பட்ட நீர்மையதாகலின், அந்நிலத்து வாழும் மக்கள் இடையர்,பொதுவர் எனப்பட்டனர் மு.அருணாசலம்பிள்ளை தொல்காப்பியம், அகத்திணையியல் உரைவளம், பக்கம்.240 என்கின்றார்.
            இடையர் என்பதற்கு விளக்கம் கூறவந்த நந்தமண்டசதகம்,             “இடை-மடி, மடியில் உண்டான பாலால் ஜீவிப்பவர்” (நந்தமண்டலசதகம்,ப.68) என்றும்,
       “இடை-ஐவகை நிலத்து நடுவிலுள்ள முல்லை நிலம்,இடையிலான
        முல்லைநிலத்துள்ளோர்”(நந்தமண்டலசதகம்,பக்கம்.69) என்றும் கூறுகின்றது. இடையர் என்பதற்கு “இடைச்சாதியார்” என்று விளக்கம் கூறுகின்றது செந்தமிழ் அகராதி(பக்கம்.60).

        குறிஞ்சி நிலத்துக்கும் மருத நிலத்துக்கும் இடைப்பட்ட முல்லை நிலத்தில் வாழ்ந்தவர் இடையராவர் என்கின்றார் சக்திதாசன் சுப்பிரமணியன் (குறுந்தொகைக் காட்சிகள் பக்கம்.239). எனவே, மேற்காணும் சான்றுகளின் மூலம் இடையர் என்ற பெயர் அவர்கள் வாழ்ந்த இடத்தால் பெற்ற பெயராகும் என்பதை அறிய முடிகின்றது

TYPING WORK
    M.MANI YADAV

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar