"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Friday, February 27, 2015

சிவகங்கை மாவட்டம் காளக்கண்மாய் கண்ணன் கோவில் கட்டுமான பணி நன்கொடை...

சிவகங்கை மாவட்டம் காளக்கண்மாய் கண்ணன் கோவில் கட்டுமான பணி நடைபெற்று  வருவதால்  நன்கொடை வழங்க விறுப்பமுள்ளவர்கள் வழங்கலாம்




தமிழ்நாடு யாதவா மகா சபை கூட்டம்


இன்று(27-02-2015)மாலை 5 மணியளவில் சென்னையில் COSMOPOLITAN CLUB-ல் அய்யா கோபால கிருஷ்ணன் தலைமையில் "தமிழ்நாடு யாதவா மகா சபை" கூட்டம் நடைபெற்றது, சிறப்பாக நடந்து முடிந்த "யாதவ எழுச்சி மாநாடு" குறித்து கலந்துரையாடல் நடந்தது அதனை தொடர்ந்து தொழிலதிபர் திரு.தர்மலிங்கம் அவர்களை "தமிழ்நாடு யாதவ மகா சபை" இணைந்து சமுக பணியில் செயல்பட விருப்புவதாக திரு.செல்வம் அவர்கள் எடுத்துரைத்தார், அய்யா அவர்களும் திரு.தர்மலிங்கம் அவர்களை குறிபிடும் பொழுது நல்ல மனிதர் பல்வேறு உதவிகளை சமுக மக்களுக்கு செய்து வருகிறார் அவரை "இணை தலைவராக" நியமித்தால் சமுக நல்ல பாதைக்கு போகும் என்று கூறினார், அதன் பின் பெரியவர்கள் அனைவரும் பல்வேறு கருத்துகளை எடுத்து கூறினர், அதன் பின் கூட்டம் இனிதாக நிறைவு பெற்றது.

நன்றி !!! "தமிழ்நாடு யாதவ மகா சபை" செய்தி, சென்னை





Thursday, February 26, 2015

நெல்லை பொன்னையா யாதவை படுகொலை செய்தவர்களை கைது செய்ய கோரி யாதவ மகாசபை முதல்வருக்கு கடிதம்

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் தேநீர்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த பொன்னையா யாதவ் வயது 25, த.பெ.செல்லையா. 25.2.2015 அன்று காலை நெல்லை வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ்சாலை தனியார் மருத்துவமனை அருகே வந்த பொன்னையாவை 4 பேர் கொண்ட கும்பல் வாகனத்தில் வந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், படுகொலை செய்யப்பட்ட ஏழை ஆட்டோ ஓட்டுனர் பொன்னையாவின் குடும்பத்தினருக்கு 50 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க கோரியும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு ஆயர்குலத் தலைவன் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் கடிதம் எழுதியுள்ளார்.




நெல்லை ஆட்டோ டிரைவர் கொலை: உடலை வாங்க மறுத்து போராட்டம்

நெல்லை தச்சநல்லூர் தேனீர்குளத்தை சேர்ந்தவர் பொன்னையா யாதவ் (வயது 24). இவர் தச்சநல்லூர் சந்திமறிச்சம்மன் கோவில் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். இங்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த அண்ணன்–தம்பியான சக்திவேல், குமார் ஆகியோரும் ஆட்டோ ஓட்டி வந்தனர். இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று பொன்னையா, மாணவ–மாணவிகளை ஆட்டோவில் ஏற்றி பாளையில் உள்ள பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு திரும்பி வந்தார். வண்ணார்பேட்டை வடக்குபைபாஸ் ரோட்டில் வந்த போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. பொன்னையா ஆட்டோவை விட்டு இறங்கவும் அந்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. பலத்த காயம் அடைந்த பொன்னையா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் தச்சநல்லூரில் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் திரண்டு சந்திமறிச்சம்மன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 அரசு பஸ்கள் மற்றும் ஒரு லாரி ஆகியவை கல்வீசி தாக்கி கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. ஒரு ஆட்டோவும் தீ வைத்து எரிக்கப்பட்டது. கொலையாளிகள் வசித்த வீடும் கல்வீசி உடைத்து சூறையாடப்பட்டது.

இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சுரேஷ்குமார், உதவி கமிஷனர் கந்தசாமி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள், போலீசார்கள் குவிக்கப்பட்டனர். அசம்பாவிதம் ஏற்படாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கொலையாளிகளை கைது செய்ய பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாரிடம் பொன்னையா கொலை குறித்து தச்சநல்லூர் ஆட்டோ சங்க நிர்வாகி நெல்லையப்பன் புகார் கொடுத்தார். அதன்பேரில் இசக்கி என்பவரது மகன்களான சக்திவேல், குமார் என்ற முத்துகுமார், மாரியப்பன் என்ற மாரி, சின்னத்துரை, ஆகிய 4 பேர்களை போலீசார் தேடி வந்தனர்.

கொலை நடந்த இடத்துக்கு சற்று தூரத்தில் அவர்கள் வந்த ஒரு மொபட் அனாதையாக கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர்.

கொலையாளிகள் பொன்னையாவை கொலை செய்ய முன்கூட்டியே திட்டமிட்டு, அவர்கள் தேனீர்குளத்தில் வசித்த வீடுகளை காலி செய்து உக்கிரன்கோட்டை அருகே உள்ள சொந்த ஊருக்கு தப்பி சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.உடனடியாக போலீசார் விரைந்து செயல்பட்டு வெளியூருக்கு தப்பி ஓட முயன்ற சக்திவேல், குமார், மாரி ஆகிய 3பேர்களையும் இன்று கைது செய்தனர். சின்னத்துரையை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இது போல ஆட்டோ டிரைவர் பொன்னையா கொலையை கண்டித்து நடந்த மறியல், பஸ்கள் உடைப்பு, ஆட்டோ எரிப்பு, வீடுகள் உடைப்பு தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் 6 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

இதில் மறியல், பஸ்கள் உடைப்பு தொடர்பாக ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொன்னையாவின் உறவினர்கள் வெங்கடேஷ், ஆனந்த், முருகன், சங்கரநாராயணன், சிதம்பரம், சுப்பிரமணியன், இசக்கியம்மாள், பார்வதி, அங்கம்மாள், ராஜேஷ், மகராஜன், சுடலைமுத்து உள்பட 20 பேர்களை தச்சநல்லூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இன்று 2–வது நாளாகவும் தச்சநல்லூர் பகுதியில் பதற்றம் தொடர்கிறது. அங்கு அதிரடிபடை போலீஸ் உள்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஒரு சில கடைகள் இன்றும் அடைக்கப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்புடன் அந்த வழியாக பஸ்கள் இயக்கப்படுகிறது.

கொலையாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆட்டோ டிரைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும், மறியலில் கைதானவர்களை விடுவிக்க வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கொலை செய்யப்பட்ட பொன்னையாவின் உடலை வாங்க மறுத்து இன்று 2–வது நாளாகவும் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் போலீஸ் உயர்அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசே தமிழக அரசே நடவடிக்கை எடு ஆட்டோ ஓட்டுநர் பொன்னையாவை கொலை செய்த அனைவரையும் உடனே கைது செய்

தமிழக அரசே தமிழக அரசே நடவடிக்கை எடு!
பெரும்பான்மையாக உள்ள யாதவர் சமுதாயத்தில் ஒரு பிரச்சனை என்றால் அது தமிழகம் முழுவதும் பரவும் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் இதனை உடனே தவிர்க்க நெல்லை ஆட்டோ ஓட்டுனர் பொன்னையாவை கொலை செய்த அனைவரையும் உடனே கைது செய்யவேண்டும்.

ஆட்டோ ஸ்டாண்டு பிரச்சினையால் பொன்னையா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. உடனே கொலை செய்த ஆட்டோ ஓட்டுனர்களை கைது செய்யவேண்டும்.
இல்லையேல் நெல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டம் தமிழகம் முழுவதும் பரவும். நேற்றைய தினமே கொலைசெய்தவர் மற்றும் அவர் உறவினர் வீடு செதபடுதபட்டு அவர்களுக்கு சொந்தமான ஆட்டோ தீயிடப்பட்டு உள்ளது. மேலும் மூன்று அரசு பேருந்து மற்றும் லாரி தாக்காப்ட்டு உள்ளது.

யாதவர்களிடம் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை கட்டுபடுத்த கொலைசெய்தவர்களை உடனே கைது செய்யவேண்டும். இது பெரும்பான்மையாக உள்ள யாதவர் சமுதாயத்தின் கோரிக்கை.


இப்படிக்கு

நெல்லையில் யாதவர்களை குறிவைத்து தொடர்கொலைகள்

தென் மாவட்டங்களில் தொடரும் கொலைகள் கடந்த 3 மாமாதங்களில் மட்டும் 61 சம்பவங்கள் நடந்துள்ளன அதில் 16 யாதவர்கள்.நெல்லை மாவட்டத்தில் யாதவ சமுதாயத்தை சேர்ந்த பொன்னையா என்ற நபரை மர்ம ஆசாமிகள் சில பேர் வெட்டிக் கொலை செய்தனர். 

வீதிக்கு ஒரு அமைப்பு என்று விளம்பர உலகத்தில் பயணித்துக் 
கொண்டிருக்கும் நம் யாதவ அமைப்புகள்...நெல்லையில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் தொடர்கொலைகளை கண்டிக்கவும்,குற்றவாளிகளை தண்டிக்கவும் வீதியில் இறங்கி போராட நம் யாதவ அமைப்புகள் முன் வருவதில்லை என்ற ஆழமான கருத்தை இங்கே பதிவு செய்வதோடு(பகிர்வதோடு)...இந்த கொலைச் சம்பவத்தையும், குற்றவாளிகளை பிடிக்க மெத்தனம் காட்டும் போக்கையும் வண்மையாக கண்டிக்கிறோம்.





Via
தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை &
யாதவ சொந்தங்கள் - சவுதி அரேபியா

Sunday, February 22, 2015

இளையான்குடியில் ஆடு வளர்ப்போர் சங்க கூட்டம்

இளையான்குடி அருகே உள்ளது கொங்காம்பட்டி கிராமம். இங்கு யாதவர் சமுதாயம் சார்பில் ஆடு வளர்ப்போர் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதன் தலைவர் கிங் கருப்பையா தலைமை தாங்கி னார். செயலாளர் பழனி முன்னிலை வகித்தார். கூட்டத் தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் படி யாதவர் கள் சமுதாயத்தி னரை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஆடு வளர்ப்போர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். கொங்காம் பட்டி- இளையான் குடி சாலையை சீரமைக்க வேண்டும். யாதவர் சமுதாயத் தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வேண்டும். வீரன் அழகுமுத்துகோன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என் பது உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது .

Thursday, February 12, 2015

யாதவர் தொழில் வணிகக் கூடம்/ Yadava Chamber of Commerce

மத்திய அரசின் Ministry of Corporate Affairs துறையில் Public Limited Company வரிசையில் "Non Profitable Organisation" - ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

"வாழ்வை மேன்மைப்படுத்துதல்" என்ற "பொன்மொழியுடன்" இயங்கி வரும் "யாதவர் தொழில் வணிகக் கூடம்" மதுரை மண்டலம், மிகச் சிறப்பாக மூன்று கூட்டங்களை முடிந்துள்ளது, தென்மாவட்டங்களில் இருந்து 400-க்கும் அதிகமான வியாபாரிகள் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொண்டுள்ளனர். தொழில் வணிகக கூடத்தின் மூலம் இனக்கம்மான சூழல் தொழில் புரிபவர்களுக்கு கிடைத்துள்ளது என்று உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக கூறுகிறார்கள் என்பது குறிபிடத்தக்கது.

மிக விரைவில் "கோவை - மண்டலம்" உருவாக்கப்பட உள்ளது அதனை தொடர்ந்து சென்னையிலும் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

தென் மாவட்டத்தில் தொழில் புரியும் உறவுகள் தங்களுடைய தொழிலை மேம்படுத்த மதுரை மண்டலத்தில் உறுப்பினராக வேண்டும் என்று விருப்பம் மற்றும் ஆர்வமும் இருந்தால் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் !!!


திரு.மருதுபாண்டி - அலுவலர்,மதுரை மண்டலம்.
"யாதவர் தொழில் வணிகக் கூடம் / Yadava Chamber of Commerce"
தொலைபேசி எண் : 0452 4354343

Tuesday, February 10, 2015

மறைக்கபடும் வரலாறு பகுதி 2(ஆயர்களின் வீரம்)

மறைக்கபடும் ஆயர்களின் வீரம்(ஏறு தழுவல்)

(ஒரு குறிப்பிட்ட இனத்தின் வரலாறு மறைக்கபடுவதின் வெளிப்பாடு)
முந்தய பதிவில் மறைக்கபடும் வரலாறு பகுதி 1-தமிழின மூத்த குடி யார் என்ற ஆய்வும், உண்மை பின்னணியும்

ஏறு தழுவுதல் என்றால் என்ன என்று கூட பலருக்கு தெரியாது.ஏறுதழுவுதல் தான் இன்றைய ஜல்லிகட்டு பழந்தமிழ் நூல்களில் ஏறு தழுவுதல் காணப்படும் ஜல்லிகட்டு காணப்படாது.

கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின் அடையாளமாக மட்டுமின்றி, திருமணத்துக்கான முன்முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. 

ஆயர் குலத்தவர்கள் தான்  ஏறு தழுவுதலுக்கு சொந்தகாரர்கள்.

தமிழ் ஆயர்களுக்கு மட்டும் சொந்தமான  ஜல்லிகட்டு ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தின் விளையாட்டாக முன்னிருத்துவது ஏற்புடையதா?

முல்லை நிலத்திற்க்கு மட்டும் சொந்தமான ஏறு தழுவுதல் எப்படி அனைத்து தமிழ் நிலங்களுக்கும்  ஏற்புடையது ஆகும்?

காளையை அடக்கி திருமணம் செய்யும் வழக்கம் தமிழ் இடையர்களை தவிர வேரு எந்த சமுகத்திற்க்கும் சொந்தம் இல்லை.அப்படி என்னும் போது அது எப்படி ஒட்டு மொத்த தமிழ் சமுகத்தின் அடையாளம் ஆகும்?

நாங்கள் ஒட்டு மொத்த தமிழ் சமுகத்தின் விளையாட்டாக ஜல்லிகட்டை முன்னிருடத்துவதை எதிர்க்கவில்லை அதில் ஆயர்குலத்தின் பெயர் வரக்கூடாது என சிலர் முயர்சிக்கின்றனர்.அதை தான் ஏன் என்று கேட்கிறோம்.
சினிமாக்களிலும் இணையதலத்திலும் தாம் மற்றவர்களால் ஜல்லிகட்டின் வரலாற்றை மறைக்க இயலும் வரலாற்றில் மறைக்க இயலாது.

இந்த விக்கிபீடியாவில்(http://en.wikipedia.org/wiki/Jallikattu) முல்லை நிலம் என்று குறிப்பிட்டவர். ஏன் இடையர்கள்(ஆயர்) என்று குறிப்பிடவில்லை, திட்டமிட்டு சாமர்த்தயமாக மறைக்க முயல்கிறார்.

தமிழ் சினிமா துறையில் ஆயர்களின் ஆதிக்கம் இல்லை.
மற்ற சமுகத்தினரின் ஆதிக்கமே அதிக அளவில் உள்ளது. இதை பயன் படுத்தி மற்ற சமுகத்தினர் ஜல்லிகட்டை தங்களுடையதாக்க பலர் பலவிதமாக முயல்கின்றனர்.ஒரு சில குறிப்பிட்ட சமுகங்கள் சினிமா துறையில் வளர்ந்து மற்ற சமுகங்களின் வரலாற்றை தன்னுடையதாக்கும் முயர்ச்சியில் ஈடுபடுகின்றன.

"இன்னும் கொஞ்ச காலம் போனால் அந்த சில சமுகங்கள் தங்களை ஆயர்கள் என்றும் முல்லை நிலத்தவர்கள் என்றும் கூட கூற வாய்ப்புகள் உள்ளது"

கடந்த காலங்களில் கல்வெட்டு அல்லது பண்டைய நூல்களில் அவர் அவர் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் தேடுவார்கள்.ஆனால் எதிர் வரும் சந்ததியர்கள் திரைப்படத்திலும் இணையத்திலும் தான் தன் முன்னோர்களின் வரலாற்றை தேடுவார்கள் அல்லது பார்க்க இயலும். யாரும் கல்வெட்டுகளை தேடி போக போவதில்லை.

நான் இதுவரை பார்த்த எந்த ஜல்லிகட்டு தொடர்பான எந்த திரைப்படங்களிலும் நம் சமுகத்தை பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை.அவர்கள் அவர்களின் சமுகம் ஜல்லிகட்டு விளையாடியதாக தான் கூற முயல்கின்றனர்.

நாங்கள் தமிழ் சமுகத்தின் வீரமாக முன்னிருத்துவதை எதிர்க்கவில்லை.
நீங்கள் என் இனத்தின் வரலாற்றை மறைத்து என் இனத்தின் வீரத்தை உங்களுடையதாக்க முயல்வதை தான் நாங்கள் நாங்கள் எதிர்க்கிறோம்.

பல்வேறு சமுக இணையதலங்களில் பல்வேறு சமுகத்தினர் ஜல்லிகட்டு தன் சமுக விளையாட்டாக போடுகின்றனர். அவர்களால் ஒரே ஒரு வரி வரலாற்றில் தன் சமுகம் ஜல்லிகட்டு விளையாடியதாக காட்டமுடியுமா?

என் சமுகத்தின் வரலாற்றை உங்களுடையதாக்க முயலும் அனைவரும் முதலில் தங்கள் முன்னோர்கள் ஜல்லிகட்டை விளையாடியதை நிருபிக்க முயடியுமா?

தமிழர்களின் வீரமாக முன்னிருத்தும் சில மீடியாக்கள் ஒட்டுமொத்த தமிழ்சமுகமும் ஜல்லிகட்டு விளையாட்டை விளையாடியதாக நிருபிக்க இயலுமா?

மற்ற சமுகத்தின் அடையாளத்தை அவர் அவர் சமுகத்தினர் அடையாளமாக முன்னிருத்துபவர்கள் ஏன் இடையர்களின் வீரத்தை மட்டும் இடையர்களின் வீரமாக முன்னிருத்த தயங்குவது ஏன்?

என்றாவது யாதவர்கள் மற்ற சமுகத்தின் அடையாளத்தை தனதாக்க முயர்ச்சி செய்தார்களா?

இனியாவது தமிழ் ஆயர்களின் விளையாட்டு என முன்னிருத்துங்கள்.
எது எப்படியோ எக்குலத்தவரும் போற்றும் ஆயர் குலத்தின் வீரம்.
எக்குலத்தவரும் போற்றும் அளவுக்கு ஆயர்குலத்தின் விரம் உள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது


எங்கள் சமுகத்தினர் தான் ஜல்லிகட்டு விளையாடினார்கள் என்பதற்க்கு ஒரு சிரு ஆதாரம்.

ஜல்லிகட்டு பற்றி கலித்தொகையில் உள்ள சிறு வரிகள்

சங்க நூல்களில் ஏறு தழுவுதல்:
ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்பதை,

ஓஓ! இவள்இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால்,
திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,
எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்
சொல்லால் தரப்பட் டவள்.2

என்னும் வரிகள் விளக்குகின்றன. பசுத்திரளை உடைய ஆயர் மகனுக்கு தலைவியை மணம் முடிக்க பெற்றோர் எண்ணினர். தான் விரும்பிய தலைவனோ செங்காhpக் கொம்பிடையில் புகுந்து தழுவி வெற்றி கொண்டுவிட்டான். தலைவியின் மணம் உறுதியாகிவிட்டதை,

இன்று எவன், என்னை எமர் கொடுப்பது-அன்று, அவன் 
மிக்குத்தன் மேற்சென்ற செங்காரிக் கோட்டிடைப் 
புக்கக்கால் புக்கது, என் நெஞ்சு!.3

என்ற பாடல் வரிகள் உணா;த்துகின்றன. ‘ஏறுகொள்ள வல்லார் என்னைப் போன்றவர் எவரும் இலர் என வீரம் பேசும் பொதுவன் தலைவிக்கு ஒருநாள் உறவினன் ஆகாமற் போவதில்லை. அத்தலைவனைக் கண்டு கண்களும் காதற் பயிhpனை வளர்க்கிறதாம் தலைவிக்கு. இதை,

‘கோளாளா என்ஒப்பார் இல்’ என நம்மானுள், 
தாளாண்மை கூறும் பொதுவன், நமக்கு ஒருநாள், 
கோளாளன் ஆகாமை இல்லை; அவற்கண்டு
வேளாண்மை செய்தன கண்இ4

என்னும் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன.

மெல்லிணா;க் கொன்றையூம், மென்மலர்க் காயாவூம்,
புல்லிலை வெட்சியூம், பிடவூம், தளவூம், 
குல்லையூம், குருந்தும், கோடலும், பாங்கரும்-
கல்லவூம், கடத்தவூம்- கமழ் கண்ணி மலைந்தனர்.5

இவ்வாறு பல மலர்களைச் சூடி ஆயா; இளைஞர்கள் விரைந்து வந்து ஏறு தழுவூதலைக் காண விரும்பிய ஆயமகளிர் பலரும் பரண்களில் முற்படவே வந்து அமர்ந்தனர்.

முல்லை முகையூம் முருந்தும் நிறைத்தன்ன
பல்லா, பெருமழைக் கண்ணா, மடம் சேர்ந்த
சொல்லா, சுடரும் கனங்குழைக் காதினர்.6

இவ்வாறு ஆய மகளிரும் ஏறுதழுவலைக் காண ஆர்வம் காட்டியூள்ளனர். ஏறுதழுவி வென்ற வீரனையே மணக்கவூம் விரும்பினர்.கெல்லேற்றுக்கு அஞ்சுகின்றவனை ஆயமகள் தழுவ விரும்பவில்லை உயிருக்குப் பயந்து ஏறுதழுவாதிருக்கும் ஆயர் இளைஞரை யாரும் விரும்புவதில்லை. தாம் காதலிக்கும் பெண்ணின் முலையிடை போலக் கருதி, ஆர்வமுடன் வீழ்ந்து தழுவி வெற்றியடைபவர்களையே பெற்றோர் தம் மகளுக்கு ஏற்றவனகாக் கருதுவார்கள் என்பதை,

கொல்லேற்றுக் கோடஞ்சுவாணை மறுமையூம்
புல்லாளே, ஆய மகள்,
அஞ்சார் கொலையேறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய-உயிர் துறந்து-
நைவாரா ஆயமகள் தோள்,
வளியா அறியா உயிர், காவல் கொண்டு,
நளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ, ஆயமகள் தோள்?
விலைவேண்டார் எம்மினத்து ஆயர் மகளிர்-
கொலையேற்றுக் கோட்டிடைத், தாம்வீழ்வர் மார்பின்
முல்லையிடைப் போலப், புகின்.
ஆங்கு: 
குரவை தழீ, யாம், மரபுளி பாடி, 7

என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன.

சான்றெண் குறிப்புகள்
1. கலித்தொகைஇ பா. 148-149.
2. மேலது. பா. 101 :9-12.
3. மேலது பா. 105:66-68.
4. மேலது பா. 101:43-46.
5. மேலது பா. 103:1-4.
6. மேலது பா. 103:6-8.
7. மேலது பா. 103:63-74.


Monday, February 9, 2015

List of Presidents of All India Yadav Mahasabha



SlnoName of PresidentAddressPeriod
1Choudhary Badan Singh, MLC (UP)Purnea, BiharApril, 1924
2Dr. R.V Khedkar, MD (Maharastra))Gorakhpur, UP3rd April, 1925
3Kanhyalal Yadav, LLB (MP)Chhapra, Bihar3rd December, 1925
4Rai Saheb Ballav Das (Bihar)Rewari, Punjab4th April, 1927
5Rai Bahadur Durga Prasad (Delhi)Dalmau, UP5th December, 1927
6Rai Bahadur Singh (Rewari, Punjab)Calcutta, BengalDecember, 1928
7Sundar SinghBeneras, UPDecember, 1929
8Rai Saheb Baldeb SinghGaya, BiharDecember, 1930
9Swambar Das, BA, BEd (Bihar)Balia, UPDecember, 1931
10Sharat Chandra Das, BA, BL (Bengal)Jabbalpur, MPDecember, 1933
11Behari Shankar Dalata, BE, AMIE (Maharastra)Fategarh, UPDecember, 1934
12Sarajn Prasad Kashyap (MP)Busar, BiharDecember, 1936
13Nabadeep Chandra Ghosh, MA, BL (Bihar, Patna)Calcutta, BengalDecember, 1939
14Rao Suchet Singh (Delhi)Patna, BiharDecember, 1944
15Sewnath Prasad Yadav (Bihar))Sirsa, Allahabad, UPDecember, 1945
16Kedar Nath Roshan (MP)Lucknow, UPDecember, 1946
17Adv Kedar Nath Roshan (MP))Benaras, UPDecember, 1947
18Nabadeep Chandra Ghosh, MA, BL (Bihar, Patna)Cuttack, OrissaDecember, 1950
19Rao Gopilal Yadav, JaipurKanpur, UPDecember, 1951
20Choudhary Raghubir Singh (Agra, UP)Motihari, BiharDecember, 1954
21Lachmi Prasad Rawat (Calcutta, Bengal)Gazipur, UPDecember, 1955
22Choudhary Ram Gopal Singh (Kanpur, UP)Barh, BiharDecember, 1956
23Rao Birendra Singh (Rewari, Hariyana)Calcutta, BengalDecember, 1957
24Rao Birendra Singh (Hariyana)Deoria, UPDecember, 1959
25Durga Prasad Singh (Calcutta, Bengal)Bombay, MaharastraDecember, 1960
26Srimanta Narayan Khirahari (Bhagalpur, Bihar)Rai Bareily, UP Adv.December, 1962
27Choudhary Ram Gopal Singh (Kanpur, UP)Muzaffarpur, BiharDecember, 1964
28Rao Birendra Singh (Rewari, Hariyana)Patna, BiharDecember, 1965
29Rao Birendra Singh (Rewari, Hariyana)DelhiDecember, 1966
30Rao Birendra Singh (Rewari, Hariyana)Etawa, UPDecember, 1967
31Mohit Mohan Ghosh (Calcutta, West Bengal)Hyderabad, APDecember, 1968
32Adv. Banowari Lal Yadav (Allahabad, UP)Gwalior, MPDecember, 1969
33S. Gopal Krishna Yadav (Madras, Tamil Nadu)Indore, MPDecember, 1972
34Mohit Mohan Ghosh (Calcutta, West Bengal)Maduri, Tamil NaduDecember, 1974
35Bindeshwari Prasad Singh (Bihar)December, 1978-80
36Cap Harmohan Singh (Delhi)Mathura, UPDecember, 1980-83
37Shyamlal Yadav MP (UP)Madras, Tamil NaduDecember, 1983
38Shyamlal Yadav MP (UP)Jabalpur, MPDecember, 1984
39Ram Laxman Singh Yadav (Bihar)Durg, MPDecember, 1986
40Shyamlal Yadav MP (UP)Bangalore, KarnatakaDecember, 1989
41Cap Harnam Singh (Delhi)Hyderabad, UPDecember, 1994
42Cap Harmohan Singh (Delhi)Surat, GujaratDecember, 1995
43D. Nagendhiran (Tamil Nadu)2005-2007
44Udai Pratap Singh Yadav. MPDecember, 2007

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar