"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Friday, October 30, 2015

மதுரை சுப்புக் கோனார் மகன் கே.எஸ்.பரமன்.

1910இல் பிறந்த பரமன் தனது 20ஆம் வயதில் 1930இல் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார். மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளில் பிடிப்பு உள்ள இவர் கதர் இயக்கத்திலும் ஆர்வமுடையவராக இருந்தார். கை தக்கிளியில் நூல் நூற்றுக் கொண்டிருப்பார். தக்கிளியில் நூல் நூற்பது எப்படி என்பதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பார். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர். இவர் முதல் உலக யுத்தத்தின் போது ராணுவத்தில் சேர்ந்தார். முதல் உலகப் போரின் போது பிரிட்டன் இந்திய ராணுவத்தினரை ஐரோப்பாவுக்கு அனுப்பி வைத்தனர். இவர் அப்போது மெஸபடோமியாவுக்குச் சென்றிருந்தார். ராணுவப் பணியை விட்டுவிட்டு இந்திய தேசியப் பணிக்குத் திரும்பினார். 1940இல் காந்தியடிகள் அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகத்தில் இவர் பங்கேற்றார். அதில் கைது செய்யப்பட்டார். 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இவர் பாதுகாப்புக் கைதியாக வேலூர் சிறையில் 4 மாத காலம் அடைக்கப்பட்டார். இவருடைய மூத்த சகோதரர் அய்யாக்கண்ணு பிள்ளை மதுரையில் பிரபலமான மனிதர். பரமன் ஒரு சிறந்த தேசிய வாதி.

Thursday, October 29, 2015

பிணி தீர்க்கும் பெருமாள்:காட்டுப்பரூர்

பிணி தீர்க்கும் பெருமாள்- காட்டுப்பரூர் இந்தக் கோயிலில் பரம்பரை பரம்பரையாக யாதவர்களே பூஜை செய்து வருகிறார்கள்

அந்த முதியவருக்குக் கடுமையான வயிற்றுவலி. வேதனையால் துடித்தார். கொஞ்சம் கஞ்சி குடித்தாலும் வலி உயிர் போகும். சரி, கஞ்சி குடித்தால் வயிறு வலிக்கிறதே என்று குடிக்காமல் இருந்தாலும் பசியால் வயிறு வலிக்கத்தான் செய்யும். 

பார்க்காத வைத்தியரில்லை... குடிக்காத கஷாயமில்லை. சுத்துப்பட்டில் பல வைத்தியரைப் பார்த்தாயிற்று. இந்தப் பச்சிலை... அந்தப் பச்சிலை என்று நிறைய தின்றாயிற்று. ஆனால், குணமானபாடில்லை. ‘என்ன பாவம் செய்தேனோ இந்த சித்ரவதையை அனுபவிக்கிறேன்’ என்று தனக்குத்தானே புலம்பிக் கொள்வார், அந்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளி. 

‘கடவுளே... இனி நீ விட்ட வழி’ என்று தனது கிராமத்தின் மண் சாலையின் ஓரத்தில் இருந்த அரச மர நிழலில், அங்கிருந்த கல்லில் தலை சாய்த்துப் படுத்தார். வயிறு இழுத்துப் பிடித்தது போல வலித்தது. ‘கடவுளே... கடவுளே’ என முனகியபடி கிடந்தார். வேதனையால் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அப்போது அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த ஒரு பயணி இவரது வேதனையை பார்த்து மனம் வருந்தினார். எழுப்பி விவரம் கேட்டார். 


கதறியழுதபடி தனது வேதனையை சொன்னார் முதியவர். கண்மூடி யோசித்த அவர், ‘‘இது பிறவிப் பிணி. இதை அந்த கேசவனால்தான் தீர்க்க முடியும். காட்டுப்பரூர் செல். அங்கு ஒரு வாரகாலம் தங்கி, பெருமாளை வழிபடு. நிச்சயம் உன் பிணி தீரும்’’ என்றார். கடவுளே நேரில் வந்து சொன்னதாகக் கருதி, தனது கிராமத்திலிருந்து காட்டுப்பரூர் புறப்பட்டார், முதியவர். அங்கிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் தனது துணிமணிகளை வைத்து விட்டு, நாள்தோறும் திருக்கோயில் குளத்தில் நீராடி பெருமாளை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டார். ஏழு நாட்கள் கழிந்தன. வயிற்று வலி குறையவில்லை; அதிகரித்தது.

எட்டாவது நாள். பொழுது விடிந்தது. இன்று இதற்கு ஒரு முடிவு காணாது ஓயப்போவதில்லை என்ற தீர்மானத்தோடு எழுந்தார் முதியவர். வழக்கம் போல குளத்தில் நீராடினார். ராஜகோபுரம் எதிரே நின்றார். கண்மூடி ஆதிகேசவனை மனத்தில் கண்டார். அவனிடம் உரிமையோடு பேசத் தொடங்கினார். ‘‘ஐயனே... வயிற்று வலியோடு நான் படும்பாடு சொல்லிமாளாது. என் நோய் தீர்ப்பாய் என்ற நம்பிக்கையோடு உன் திருக்கோயிலை ஒரு வாரகாலமாய் வலம் வந்தேன். பலனில்லை. என் பக்தியில் நீ ஏதோ குறை காண்கிறாய். சரி, இதோ என் காணிக்கையை ஏற்றுக்கொள்’’ என்று மனம் குமைந்து சொன்னார். 


பிறகு தனது நாக்கை அறுத்து எடுத்து ஒரு வெற்றிலையின் மீது வைத்துவிட்டு, வாயில் ரத்தம் வழிய கோயிலை வலம் வரத் தொடங்கினார். கருணைக் கடலான கேசவன் கண் திறந்து பார்த்தான். தனது அருட் பார்வையால் முதியவரின் பிணியை அகற்றினான். கோயிலை வலம் வந்து முடித்த போது வெற்றிலையில் வைத்திருந்த நாக்கு காணாமல் போயிருந்தது. முதியவரின் வெட்டுப்பட்ட நாக்கும் முழுமையாக வளர்ந்திருந்தது. உயிரே போகும்படி வலித்த வயிற்று வலியும் முற்றிலுமாக நீங்கியிருந்தது. ‘‘கோவிந்தா... கோவிந்தா’’ என்று வாய்விட்டு கதறினார். ஆனந்தத்தில் வாய் குழறியது. 


இச்சம்பவத்தை வாய் பிளந்து, வியப்போடு பார்த்த ஊரும் அவரோடு சேர்ந்து கோவிந்தனின் புகழ் பாடியது.இந்த சம்பவம் நடந்து சுமார் 300 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், இதற்கு சாட்சியாக இந்த முதியவர் நன்றியோடு இந்தக் கோயிலுக்குச் செய்து தந்த காளிங்க நர்த்தன கோபாலன் உற்சவர் சிலை இன்றும் இருக்கிறது. வீர பெருமா நல்லூர் பெரியவர் செய்த சிலை இது என்று, இந்த சம்பவத்தோடு மேலும் பல தகவல்களை அந்தக் கோயிலில் சொல்லக் கேட்கலாம்.


இந்தக் கோயில் உருவான வரலாறு சுவையானது. 

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி காடாக இருந்தது. இங்கு ரெட்டியார் சமூகத்தினருக்குச் சொந்தமான நிலத்தில் கோனார்கள் வயல் வேலை செய்தபடி ஆவினங்களை பராமரித்துக் கொண்டும் வாழ்ந்து வந்தார்கள். ஒரு முறை விவசாயப் பணியாக வாய்க்கால் வெட்டியபோது, மண்வெட்டி பட்டு வெட்டிய இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அங்கிருந்தோர் எல்லாம் அஞ்சி நிற்க, வாய்க்கால் வெட்டியவர் மீது அருள் வந்து, இவ்விடத்தில் சென்ன கேசவப் பெருமாள் என்னும் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளி இருப்பதாகவும், அவருக்கு கோயில் கட்டி வழிபடுமாறும் 
கூறினார். அதன்படி அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்த போது வெட்டுப்பட்ட கல் ஒன்று கிடைத்தது. அதையே மூலவராகக் கொண்டு கோயில் கட்டப்பட்டது. மூலவர் முடியில் வெட்டுப்பட்ட காய வடுவை இன்றும் தரிசிக்கலாம்.


அதன் பிறகு கால ஓட்டத்தில் பல பெரியவர்கள், மகான்கள் இந்தக் கோயிலுக்கு வந்து பெருமாளை வணங்கி வழிபட்டுள்ளார்கள். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வேமண்ணா என்னும் யோகியும் கூட இந்தக் கோயிலுக்கு வந்து திருக்குளத்தில் நீராடி, குளத்தின் தென் திசையில் பெருமாளின் திருப்பாதம் அமைத்து, யந்திர ஸ்தாபனம் செய்து பூஜித்துள்ளார். தினசரி இந்த பாதத்திற்கு முதலில் பூஜை செய்து விட்டுத்தான் பெருமாளுக்கு இதர பூஜைகள் நடைபெறும். 

இக்கோயில் பற்றி பதிகம் பாடியுள்ள வேமண்ணா ‘ஆதித்த வாரம் பத்து பசுந்துளபம் நெய்யுண்டால் பறக்கும் பல நோய்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இன்றும் பலர் தங்களது நோய்கள் தீர இங்கு நெய் துளசி பெற்று பக்தியோடு உண்டு குணமடைகிறார்களாம். பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபடு
கிறார்கள். வாருங்கள், கோயிலை வலம் வருவோம்.


கோயிலுக்கு வடபுறம் திருக்குளம் உள்ளது. இந்த குளத்தில்தான் ஆண்டு தோறும் வைகாசிப் பெருவிழாவின் 10 நாள் தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெறும். குளத்திற்கு மேற்கு புறத்தில் இருந்த வசந்த மண்டபம் சிதைந்து கிடப்பதையும் காண முடிகிறது. நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் இந்தக் குளத்தில் நீராடி உப்பு, வெல்லம், மிளகு, காசு ஆகியவை செலுத்துகிறார்கள். உப்பு, வெல்லம் கரைவதைப் போல நோயும் கரையும் என்பது நம்பிக்கை. சொறி, சிரங்கு, மரு போன்ற சரும நோய் தீர வேண்டிக்கொண்டு மிளகு, காசு போடுகிறார்கள். 


இந்தத் திருக்குளத்தில் நீராடிய பிறகு யோகி வேமண்ணா பிரதிஷ்டை செய்த பெருமாள் பாதத்தை தரிசிக்கலாம். அடுத்து, பிரமாண்டமாய் நிற்கும் ராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் த்வஜ ஸ்தம்பம் நம்மை வரவேற்கிறது. அடுத்து கருடாழ்வார் தரிசனம். அவர் சுவாமியைப் பார்த்தபடி மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அதற்கடுத்து கருங்கற்களால் கட்டப்பட்ட 36 கால் சபா மண்டபம். மண்டபத்தின் கல் தூண்களில் தசாவதாரக் காட்சிகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் வலப்புறத்தில் அனுமன், கருடன், சக்கரம், அன்னம், குதிரை, ஆதிசேஷன், யானை, பல்லக்கு முதலிய வாகனங்களின் அணிவகுப்பைக் காணலாம்.


அடுத்து விநாயகரையும், ஜயன்-விஜயன் என்ற துவாரக பாலகர்களை வணங்கி உள்ளே சென்றால் மகா மண்டபம். மகா மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளின் அழகு வரிசை.  தேவி-தேவி சமேத ஆதிகேசவப் பெருமாள், ராதா-ருக்மணி சமேத வேணுகோபாலன், வயிற்று வலியில் இருந்து நிவாரணம் பெற்ற முதியவர் தமது கிராமத்தவரின் உதவியோடு செய்து தந்த காளிங்க நர்த்தன கோபாலன், சக்கரத்தாழ்வார், அனுமன், திருமங்கையாழ்வார் ஆகிய உற்சவ விக்ரகங்களை கண்டு வணங்கலாம். 


அடுத்து அர்த்த மண்டபம். அதைத் தாண்டி கர்ப்ப கிரகம். சுயம்புவாய் தோன்றிய ஆதிகேசவப் பெருமாளை நெய்தீப ஒளியில் காண, மெய் சிலிர்க்கிறது. கிழக்கு பார்த்த வண்ணம் இக்கோயிலில் அமைந்து, பிறவி நோய் தீர்க்கும் பெருமாள் உடல் பிணியும் நீக்கி அருள்வதை எண்ணி கரம் குவித்துப் பணிய, உடலும் உள்ளமும் பலமடைகின்றன.


இந்தக் கோயிலில் பரம்பரை பரம்பரையாக யாதவர்களே பூஜை செய்து வருகிறார்கள். நாராயணின் நாமத்தை கணீர் குரலில் பாடி, தீபம் காட்டி, தீர்த்தமும், துளசியும் தந்து சடாரியை தலையில் வைக்கும் போது மனம் குளிர்கிறது. ஒரு பேரமைதி நம்மைச் சூழ்ந்து கொள்கிறது.அடுத்து தெற்கு பக்க வாசல் வழியே வந்து, வேதவல்லி நாச்சியாரை தரிசிக்கலாம். தாயார் கிழக்கு நோக்கி, நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அன்னையின் அழகிய திருமுகம் காண உள்ளம் உருகும். திருமண வரம் வேண்டி அன்னையைத் தொழுதால், வேண்டியவரின் இல்லத்தில் கெட்டிமேளம் விரைவில் ஒலிக்கிறதாம். 


பிராகாரத்தில், மடப்பள்ளி இருக்கிறது. இடும்பன், அனுமன் கோயில்கள் தனித் தனியே உள்ளன. கோயிலின் நான்கு புறமும் வாசல் உண்டு. வடக்கு வாசல் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுகிறது. கோயிலுக்கு வெளியே அழகிய, சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தேர் நிற்கிறது. ஆண்டு தோறும் வைகாசி மாதம், வளர்பிறை சனிக்கிழமை கொடியேற்றி, ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். ஒன்பதாவது நாள் திருத்தேர் உற்சவம். 


அன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் எழுந்தருளி மெல்ல அசைந்தபடி வீதி வலம் வரும் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.
கோயிலுக்கு வெளியே வடக்கு புறத்தில் முடி காணிக்கை செய்ய தனி மண்டபம் உள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு வேண்டிக் கொண்டவர்கள் அங்கு போக முடியாவிட்டால் இங்கு வந்து நேர்த்திக் கடனை செலுத்தி வணங்குகிறார்கள். பெரும்பாலும் பெருமாள் கோயிலில் சனிக் கிழமைதான் விசேஷம். ஆனால், இத்திருக் கோயில் பெருமாள் ஞாயிற்றுக் கிழமையன்று சுயம்புவாகத் தோன்றியதால் இங்கு ஞாயிறு அன்றுதான் விசேஷம். அன்று காலை 7.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.


உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில், மங்கலம் பேட்டையிலிருந்து மேற்கே 4வது கிலோ மீட்டரில் உள்ள சிறிய கிராமமான காட்டுப்பரூரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. தீராத நோய்கள் தீர, பிணி தீர்க்கும் ஆதிகேசவப் பெருமாளையும், திருமண வரம் அருளும் வேதவல்லி நாச்சியாரையும் வணங்கி ஆரோக்கியமான, வளமான வாழ்வைப் பெறுவோம்.  

Wednesday, October 28, 2015

மறத்தமிழரின் மஞ்சுவிரட்டு

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஆதிமனிதன் குகைகளில் வாழ்ந்தான். வேட்டுவ வாழ்க்கையை மேற்கொண்டு நாடோடி போலத் திரிந்தான். பறவை போன்ற உயிரினங்களோடு போராடியும் வாழ்ந்தான். புன்செய் விவசாயத்தைச் செய்தும் கால்நடைகளை வளர்த்தும் புதிய வாழ்விற்குள் தலைப்பட்டான். நன்செய் வேளாண்மையை மேற்கொண்டு நாகரிகத்தைப் படைத்து நகர வாழ்வை உருவாக்கினான். இச்சூழ்நிலையில்தான் பொழுது போக்கிற்காகவும், உடல்வலிமையை உருவாக்கிக் கொள்வதற்காகவும் விளையாட்டுக்களை அமைத்துக் கொண்டான். தமிழன் படைத்த விளையாட்டுக்கள் ஒன்று மஞ்சுவிரட்டு என்னும் ஏறு தழுவுதலாகும்.

தொல்பழங்காலம்:-

கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்பே பழங்கால நாகரிகங்களை அமைத்துத் தந்தவர்களுள் எகிப்தியரும் மினோவான் மக்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுடைய நாகரிகத்தில் மனிதனுக்கும் காளைக்கும் நடக்கும் போர் காணப்படுகிறது. எகிப்தில் உள்ள பெணி-ஹட்சன் சித்திரங்களிலும், கிரீட் தீவிலுள்ள கினோஸஸ் என்னுமிடத்தில் உள்ள அரண்மனைச் சித்திரங்களிலும் இந்நாகரிகங்களில் இடம் பெற்றுள்ள காளைப்போர் சர்க்கஸ் வித்தைப் போல சித்தரிக்கப்படுகிறது.

அதாவது, காளையின் கொம்பை பிடித்துக் கொண்டு குட்டிக்கரணம் அடித்து காளையின் முதுகின் மேல் பாய்ந்து, பின்பு அருகிலிருக்கும் துணைவர்களின் கைகளுக்குத் தாவுவர், இவ்வகையான ஏறு தழுவல் வளர்ச்சி அடைந்த கலையாகவே காணப்படுகிறது.

சிந்து சமவெளி நாகரிகம்:-

காளை வழிபாடு சிந்து சமவெளி நாகரிகத்தில் சிறப்பிடம் பெற்றதை யாவரும் அறிவர். இதிலிருந்து காளைப்போர் சிந்து சமவெளி மக்களிடையே வழக்கிலிருக்கலாம், என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

வடநாட்டில் பலவிதமான ஏறுதழுவல்கள் நடைபெற்றன என்று சொல்லப்படுகிறது. இரண்டு காளைகளுக்கிடையேனும், காளைக்கும் மற்றொரு விலங்குக்கும் இடையிலேனும் போர் நிகழ்ந்துள்ளது.

சகாங்கீர் காலத்தில் காளைக்கும், புலிக்கும் இடையே போர் நிகழ்த்தி இரசித்திருக்கின்றனர் என்று வரலாற்று நூல்களிலிருந்து அறியலாம். தமிழரின் வாழ்வு முறைக்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம் ஏறுதழுவலைப்பற்றிக் கூறாதது ஆச்சரியமாக உள்ளது.

சங்க இலக்கியங்கள்:-

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் சங்ககாலத் தொகைப் பாடல்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் ஏறுதழுவல்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இக்காட்சி மலைபடுகடாமில் சிறிது விரிவாகவே இடம் பெற்றள்ளது. ஆநிரையை விட்டுப் பிரிந்து வந்த காளையும், மலையிலிருந்து வந்த ஏறும், புறங்கொடாத வலிமையொடு புண்பட முட்டுகின்றன. இதனைக் கண்டு கோவலரும் குறிஞ்சி நிலத்தவரும் ஆரவாரிக்கின்றனர் என்று மலைபடுகடாம் விவரிக்கின்றது.

கலித்தொகையில்:-

சங்க இலக்கியங்களில் முல்லைக்கலியில் மட்டும்தான் முதன் முதலில் ஏறுதழுவும் காட்சியைக் காணமுடிகிறது. முதல் ஏழு முல்லைக் கலிப் பாடல்களில் ஆறாம் பாடலைத் தவிர தழுவும் காட்சி ஓரங்க நாடகங்களாகக் காட்டப்பெற்றுள்ளது.

ஏறு தழுவலைப் பறையின் மூலமாக அறிவிக்கின்றனர். குறிப்பிட்ட நாளில் தொழுவத்தில் ஏறுதழுவல் நடைபெறுகிறது. எருமை, ஆடு, பசு ஆகிய மூன்றையும் மேய்க்கும் இடையர்கள் இதில் கலந்து கொள்ளச் செய்கின்றனர். தொழுவத்தின் பக்கத்தில் பரண்மேல் வரிசையாக ஆய மகளிர் நிறுத்தப்படுகின்றனர். இன்ன நிறக் காளையை அடக்குபவன் இன்னவளை மணக்கலாம் என்று அறிவிக்கப்படுகின்றது. காளையை அடக்கியவனுக்குப் பெற்றோர்கள் மகட்கொடை அளிக்கின்றனர். ஏறைத் தழுவி மணந்தவன் முலைவிலை கொடுப்பதிலிருந்து விலக்கப்படுகின்றான். ஏறுதழுவும் விழாவுக்குப் பின் மன்றத்தில் குரவைக்கூத்து ஆடப்படுகிறது. இதில் மன்னன் புகழும் மாயோனின் அருளும் போற்றப்படுகின்றன.

கலித்தொகையில் காளைக்கு உவமையாக...

"கூராஅக் களிற்றுணும் கண்ணஞ்சா ஏற்றை
விடாது நீ கொள்கு வையாயிற் படாஅகை
யீன்றன ஆய்மகள் தோள்"

என்ற வரிகள் காளையின் தோற்றத்தைக் குறிப்பதும், அதனை அடக்கும் கோவலரையும் குறிப்பதாக அமைகின்றன.

சிலப்பதிகாரத்தில் ஏறுதழுவுதல்:-

சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் ஏறுதழுவல் பற்றிய காட்சி அமைந்துள்ளது. இவ்வருணணை பெரும்பாலும் முல்லைக்கலியைப் பின்பற்றி அமைந்துள்ளது.

கண்ணகி ஆயர்பாடியில் தங்கியிருந்தபோது மாதரி சிறுமியர் எழுவரை வரவைத்து குரவைக் கூத்து ஆடும்படி பணிக்கின்றாள். அப்போது அவர்கள் ஏழு காளைகள் சிறுவயதிலிருந்து வளர்ப்பது போலவும் உரிய பருவம் வரும்போது அவ்வேற்றை அடக்கும் ஆடவரை மணப்பது போலவும் நடித்துக் குரவைக் கூத்தாடுகின்றனர். இச்செய்தி சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.

பொருளிலக்கண நூல்களில் ஏறுதழுவல்:-

இடைக்காலப் பொருள் இலக்கண நூல்கள் ஏறுதழுவல் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஐயனாரிதனார் எழுதிய வெண்பாமாலையில் ஒழிபியல் என்னும் பிரிவில் பதினெட்டு வென்றிகளைக் கூறுமிடத்து "ஏறுகோள்" வென்றியையும் ஒன்றாகக் கருதுகின்றனர். நம்பி அகப்பொருள் அகப்பெருந்திணைக்குரிய துறைகளைக் குறிப்பிடும் போது "விடைதாழல்" என்னும் தொடரை மட்டும் தருகின்றது. ஆனால் விளக்கம் தரவில்லை.

கிராமியக் கலைகளில்:-

சோழர், நாயக்கர் காலங்களில் மஞ்சுவிரட்டு கிராமத்தலைமையை உருவாக்கும் கிராமக் கலைகளுள் ஒன்றாக மாறியிருக்க வேண்டும். நிலவுடைமை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயத்தில் நிலக்கிழார்க்கும், ஊரகத் தலைவர்களுக்கும் உள்ள கொளரவத்தையும் சர்வாதிகாரத்தையும் அளிக்கும் ஒரு சமுதாய நிறுவனமாக அது வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால் ஆங்கிலேயர் வருகைக்குப் பின் அவர்களின் ஆட்சிக்காலத்தில் தடைவிதிக்கப்பட்டு சிறிது சிறிதாகத் தளர்ந்து வந்ததை அறியலாம்.

இன்றைய வழக்கில் மஞ்சுவிரட்டு:-

கால்நடை பொருளாதாரமும் இணைந்துவிட்ட கிராமியப் பொருளாதாரச் சமுதாயத்தில் "மஞ்சு விரட்டு" என்னும் சல்லிக்கட்டு ஒரு சமயச் சடங்காக மாறிவிட்டது. ஆண்டு தோறும் தைத்திருநாள் பொங்கலுக்குப் பின் கரிநாளன்று மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.

தைப்பொங்கலுக்கு மறுநாள் நடக்கும் மஞ்சு விரட்டு நேர்த்திக் கடனுக்காகக் கட்டப்படும் எருதுக்கட்டு ஓய்வுக்காலத்தில் அல்லது விழாக்காலத்தில் பெரிய அளவில் நடத்தப்படும் சல்லிக்கட்டு என்று மூன்று வகையாகப் பிரிக்கும் ஏறுதழுவலை இன்றும் அலங்காநல்லூர் மற்றும் பிற இடங்களிலும் காணலாம்.

இன்று சல்லிக்கட்டு நடத்தும் மரபு தமிழகக் கிராமங்களில் குறைந்து வருகின்றது. இந்த கிராம விளையாட்டை முறைப்படுத்திச் சிறந்த கலையாக மாற்ற வேண்டியது அவசியமாகும். அரசு வழியாகவும், கிராமிய விளையாட்டு மையங்களின் வழியாகவும் இவ்விளையாட்டை உயிர்ப்பிக்க முடியும் என கருதப்படுகிறது.

நன்றி:- வேர்களைத் தேடி

Monday, October 26, 2015

ஆற்றிலே வந்த அம்மன்

ஒருகாலத்தில் வற்றாத நதியாக ஓடிக்கொண்டிருந்த தேனாற்றில் கண்டெடுக்கப்பட்ட அம்மன்தான் தேனாற்று அம்மன்.

பிள்ளையார்பட்டியைத் தழுவி நிற்கும் சிராவயல் புதூர் கிராமம், மஞ்சு விரட்டுக்குப் புகழ்பெற்றது. இவ்வூரில்தான் இருக்கும் திருத்தலம் தேனாட்சியம்மன் கோயில். சிராவயல் புதூரைச் சேர்ந்த இடையர் குலத்து பெண் ஒருவர், தினமும் தலைச் சுமையாய் மோர்ப் பானையைத் தூக்கிச் சென்று அக்கம் பக்கத்து ஊர்களில் மோர் விற்றுவிட்டு வருவார். திரும்பி வருகிறபோது மோர்ப்பானை, உழக்கு, கரண்டி இவற்றை தேனாற்றில் கழுவி எடுத்துச் செல்வது அவரது வாடிக்கை.

ஒருநாள் அப்படி பானையைக் கழுவிக்கொண்டிருந்தபோது ஆற்றுக்குள் மார்பளவு தண்ணீரில் அம்மன் சிலை ஒன்று நிற்பதைக் கண்டார். பக்திப் பரவசத்தில் கைகூப்பி அம்மனை வனங்கியவர், ஊருக்குள் ஓடினார். ஊரார் வரும்வரை அப்படியே அம்மன் சிலை நின்றதாக நம்பப்படுகிறது. ஆற்றுக்குள் இருந்த அம்மன் சிலையைக் கரைக்குக் கொண்டு வந்தவர்கள் பின்னர் அம்மன் வழிகாட்டுதல்படியே ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பிரதிஷ்டை செய்தனர்.

சேவை செய்த இடையர் குலப்பெண்

தேனாற்றில் கண்டெடுத்த தெய்வம் என்பதால் அம் மனுக்கு ‘தேனாற்று நாச்சி’ என்று பெயர் சூட்டினார்கள். பிறகு அதுவே தேனாட்சியம்மனாக மருவியது. அந்தக் கோயிலைச் சுற்றி குட்டியாய் இரு கிராமம் உருவானது. அது அம்மன் பெயராலேயே தேனாட்சியம்மன் கோயில் என்றானது. அம்மனைக் கண்டெடுத்த இடையர் குலப்பெண், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அம்மனே கதி என்று கிடந்தார். உணவு, உறக்கம் மறந்து அம்மனே பித்தாகக் கிடந்து முக்தியடைந்தார். அதன் பிறகு, அம்மனுக்கு எதிரே இடையர் குலப் பெண்ணுக்கும் சிலை வைத்த மக்கள், அதை இடைச்சி அம்மனாக வழிபடத் தொடங்கினார்கள்.

சித்ரா பவுர்ணமி

ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியின்போது பூச்சொரிதல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட வைபவங்கள் அம்மனுக்கு அதிவிமர்சையாக நடைபெறுகின்றன. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை அம்மனுக்குப் பத்து நாள் செவ்வாய் திருவிழாவும் நடக்கிறது.

மதுரை 'கச்சைகட்டி கருப்பாடு இனம்', 'முட்டுக்கிடா' வளர்ப்பில் முதலிடம்

மதுரை மாவட்டம் கச்சை கட்டி கருப்பாடுகளை, 'முட்டுக்கிடா' வளர்ப்புக்கு கேட்கும் விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர்.

தமிழர்களின் வீரவிளையாட்டில் முதலிடம் பிடித்தது ஜல்லிக்கட்டு. அடுத்ததாக ரேக்ளா ரேஸ், முட்டுக்கிடா, சேவல் சண்டை போன்றவை பொழுது போக்காக இன்றளவும் பல இடங்களில் நடத்தப்படுகிறது. முட்டுக்கிடா வளர்ப்புக்கு செம்மறி ஆடுகள் தேர்வு செய்யப்படுகின்றன

கச்சைகட்டி கருப்பாடு:

முட்டுக்கிடா' வளர்ப்புக்கு ஏற்ற இனமாக, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கருப்பாடுகள் பாரம்பரியமாக வளர்க்கப்படுகிறது. கருப்பு நிறம், கம்பீர நடை, அகன்ற புஜங்கள், அடர்த்தியான ரோமங்கள், கால் முதல் தலை வரை நான்கு அடி உயரம், விரிந்த நெற்றிப்பட்டை, சுருள்வாள் போல் நீளமான வளைந்த கொம்புகள், கருமஞ்சள் நிற கண்கள், கூர்மையான முரட்டுப்பார்வை, தலையை கீழே சாய்த்து... வலது கால் நகங்களை தரையில் தேய்க்கும் தோரணை... இதுவே கச்சைகட்டி கருப்பாடுகளின் அடையாளங்கள்.

40 நாள் குட்டி ரூ.4000:

கச்சைகட்டி கருப்பாடு வளர்க்கும் முருகன் கோனார் கூறியதாவது: பாட்டனார் முருகக்கோனார், தாத்தா ஆயப்பிள்ளை, தந்தை முத்துப்பிள்ளை ஆகியோரை அடுத்து நான்காவது தலைமுறையாக, கருப்பாடுகளை வளர்க்கிறேன். இந்த இனம் கச்சைகட்டியை தவிர வேறு எங்கும் இல்லை. முட்டுக்கிடா வளர்ப்புக்கு இதை விட்டால் வேறு இல்லை. முட்டுக்கிடா வளர்ப்போர் முன்கூட்டியே குட்டிகள் கேட்டு அட்வான்ஸ் கொடுக்க குவிந்து விடுகின்றனர்.

நல்ல முறையில், ஊட்டச்த்து கொடுத்து வளர்த்தால், ஆறு மாதத்திற்கு ஒரு குட்டி ஈனும். நுாறு ஆடுகளுக்கு ஒரு கிடா என இனப்பெருக்கத்திற்கு விடுவோம். 40 நாள் குட்டி ரூ.4000. பட்டிக்கே வந்து வாங்கி செல்வர். கச்சைகட்டி கருப்பாடு கள் முட்டுக்கிடா போட்டியில் ஒன்றுடன் ஒன்று முட்டும்போது, இருதயம் படபடவென துடிக்கும் அளவுக்கு உடைகல் உடைபடும் சப்தம் கேட்கும். இதுபோன்ற பல அம்சங்கள் நிறைந்திருப்பதால் பல நுாற்றாண்டுகளை கடந்து கச்சைகட்டி கருப்பாடுகள் கம்பீரமாக வலம் வருகின்றன என்றார்.

தொடர்புக்கு 97506 62881.

Thursday, October 22, 2015

யாதவர் வாக்குகள் 50000 மேல் உள்ள தொகுதிகள்:

1.   செங்கம் (தனி) -திருவண்ணாமலை மாவட்டம்
2.   வந்தவாசி (தனி) - திருவண்ணாமலை  மாவட்டம்
3.   திட்டக்குடி(தனி)- கடலூர் மாவட்டம்

4.   திருவொற்றியூர்- சென்னை
5.   செஞ்சி- விழுப்புரம் மாவட்டம்
6.   புவனகிரி- கடலூர் மாவட்டம்
7.   விருத்தாசலம்- விழுப்புரம் மாவட்டம்
8.   மதுரை கிழக்கு- மதுரை  மாவட்டம்
9.   சங்கரன்கோவில்(தனி)- திருநெல்வேலி மாவட்டம்
10. கோவில்பட்டி- தூத்துக்குடி மாவட்டம்
11. திருநெல்வேலி- திருநெல்வேலி மாவட்டம்
12. பாளையங்கோட்டை- திருநெல்வேலி மாவட்டம்
13. பென்னாகரம்- தருமபுரி  மாவட்டம்
14. புதுகை- புதுகை மாவட்டம்
15. பெரம்பலூர்- பெரம்பலூர் மாவட்டம்
16. பேராவூரணி- தஞ்சை மாவட்டம்
17. திருமயம்- புதுகை மாவட்டம்
18. திருப்பத்தூர் - சிவகங்கை மாவட்டம்
19. மானாமதுரை(தனி)- சிவகங்கை மாவட்டம்
20. திருவாடனை- ராமநாதபுரம் மாவட்டம்
21. முதுகுளத்தூர்- ராமநாதபுரம் மாவட்டம்

Wednesday, October 21, 2015

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை:கோகுலத்தோர் மக்கள் முன்னேற்ற கழகம்



பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை ரூ.35-ஆக உயர்த்த வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

கோகுலத்தோர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பா.குமார் தலைமையில், கோட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்ட, பால் உற்பத்தியாளர்கள் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சுந்தரகிருஷ்ணனிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: யாதவ சமுதாய மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறைவாக இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ஒதுக்கீடாக 15 சதவீதம் உயர்த்தித் தரவேண்டும், கால்நடை வளர்த்து வரும் மக்களுக்கு நியாயவிலைக் கடையில் மாட்டுத் தீவனங்களை வழங்க வேண்டும்; கட்டாலங்குளத்தில் உள்ள அழகுமுத்துக்கோன் அரண்மனை மிகவும் பழுதடைந்துள்ளது. அதை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; யாதவ சமுதாய மக்கள் அனைவரும் கால்நடைகளை பராமரித்து, பால் உற்பத்தியை பெருக்கி வருவதால், பால் கொள்முதல் விலையை ரூ.35-ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதில், கோகுலத்தோர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் சதீஷ்குமார், தங்கமாரியப்பன், கருப்பசாமி, பொன்மாடசாமி, சின்னத்துரை, சின்னகருப்பசாமி, பாஸ்கரன், முத்துசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை முழுமையாக வெளியிட வலியுறுத்தல்

சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தென்மண்டலச் செயலர் எஸ். மரியசுந்தரம் வலியுறுத்தினார்.

இந்த அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட கிளையின் சார்பில், இம்மாதம் 27ஆம் தேதி நடத்தப்படும் கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் பிரதான கோரிக்கையாக இருப்பது இலவச கல்வியும், இலவச மருத்துவமும்தான். இக் கோரிக்கையை வென்றெடுக்கவும், மத்திய அரசின் கவனத்துக்கு கோரிக்கைகளை கொண்டுசெல்லும் வகையிலும் பாளையங்கோட்டையில் வரும் 27ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், பாஜகவின் தமிழக மேலிடப் பார்வையாளரும், கட்சியின் தேசிய பொதுச் செயலருமான முரளிதரராவ் சிறப்புரையாற்றுகிறார். மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில இணை அமைப்பாளர் ஸ்ரீநிவாசன், யாதவ மகாசபை தேசியத் தலைவர் தேவநாதன் யாதவ் ஆகியோர் பேசுகின்றனர்.

சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தியுள்ள அரசு, அதன் விவரங்களை முழுமையாக உடனடியாக வெளியிட்டு, அந்தந்த சாதியினருக்குரிய பிரதிநிதித்துவப்படி இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

வரும் பேரவைத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. கூட்டணி எப்படி அமைந்தாலும் திருநெல்வேலி மாவட்டத்தில் கடையநல்லூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, நான்குனேரி ஆகிய 4 தொகுதிகளை இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றார் அவர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டச் செயலர் எம். முத்து, மாவட்ட தேர்தல் பணிக் குழு செயலர் எஸ். சரவணன், ஒன்றியச் செயலர் சிவந்திப்பட்டி முத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஆடு திருட்டு வழக்குகளில் காவல் துறை மெத்தனம்: குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு யாதவ ஆடு வளர்ப்போர் சங்கம் புகார்



தேனி மாவட்டத்தில் ஆடு திருட்டு வழக்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை மெத்தனம் காட்டி வருவதாக ஆடு வளர்ப்போர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு யாதவ ஆடு வளர்ப்போர் சங்கம் சார்பில், சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த ஆடு வளர்ப்போர், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாளிடம் மனு அளித்தனர். அதன் விவரம்: மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மந்தைகளில் இருந்து ஆடுகள் திருடு போவது தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்து வீரபாண்டி, ஜெயமங்கலம், கண்டமனூர், போடி ஆகிய காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் மந்தையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆடுகளை காவலாளிகளை மிரட்டி, வாகனத்தில் கொள்ளையடித்துச் செல்லும் கும்பல் குறித்தும், இதற்கு பயன்படுத்தும் வாகன எண்ணை குறிப்பிட்டும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், திருடு போன ஆடுகளை மீட்டுத் தரவும் போலீஸார் மெத்தனம் காட்டுகின்றனர். எனவே ஆடு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்து, ஆடு வளர்ப்பு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனர். மனு அளித்த போது ஆடு வளர்ப்போர் செம்மறி ஆடுகளுடன் வந்திருந்தனர்.

Monday, October 19, 2015

மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற யாதவ இளைஞரால் பரபரப்பு: 70 பேர் கைது

தமிழ்நாடு இளைஞர் யாதவர் மகாசபை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி யாதவ மகாசபை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு இன்று 70–க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

அவர்கள், மதுரையில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனுக்கு சிலை அமைக்க இடம் ஒதுக்கி தரவேண்டும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் யாதவர்களுக்கு 9 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது போலீசார், முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி இல்லை எனக்கூறி கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து பேரணி செல்ல முயன்றனர்.

அப்போது பேரணியில் பங்கேற்ற சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஜெயராமன் (வயது23) என்ற வாலிபர் திடீரென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த நபரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். மேலும் பேரணியாக செல்ல முயன்ற 70 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Thursday, October 15, 2015

மதுர கவிராயரும் ஆனந்தரங்கம் பிள்ளையும்

ஆனந்தரங்கம் பிள்ளை
அக்காலத்தில் சென்னையில் உள்ள பெரம்பூரில் ஆனந்தரங்கம் பிள்ளை என்பவர் இருந்தார். அவர் தமது தந்தையாருடன் புதுவைக்குச் சென்று வாழ்ந்தார். அப்போது புதுவையில் இருந்து ஆட்சி புரிந்த டுயூப்ளே என்பவர், ஆனந்தரங்கம் பிள்ளையின் அறிவாற்றலையும், அரசியல் தந்திரத்தையும் அறிந்தார். அவரைத் தம் உள்நாட்டு, வெளிநாட்டு அமைச்சராக நியமித்தார்.
அக்காலத்தில் அவருக்கு அந்த உயர்ந்த பதவி கிடைத்தது, குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலாகும். ஏனென்றால், அக்காலத்தில் ஏகபோக உரிமை பிரெஞ்சுக்காரருக்கே இருந்தது. பிரெஞ்சு ஆட்சியில் பிரெஞ்சு சரித்திரத்தில் முதலிடம் பெற்ற இந்தியர் ஆனந்தரங்கம் பிள்ளையே.
ஆனந்தரங்கம் பிள்ளை அருந்தமிழில் பெரும் பற்றும், புலவர்களிடத்தில் பேரன்பும் கொண்டிருந்தார். அவரது பெருங்குணத்தைப் பற்றி மதுர கவிராயர் என்பவர் கேள்விப்பட்டார். மதுர கவிராயரின் தமிழ் உள்ளம், பிள்ளையவர்களைக் காண விரும்பியது. அதனால், அவர் புதுவை நகர் வந்தடைந்தார்.
புதுவையை அடைந்த மதுர கவிராயர், ஆனந்தரங்கம்பிள்ளையின் அழகிய மாளிகையைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது பிள்ளையவர்கள் மாளிகையில் இல்லை. மாளிகையில் இருந்தோர், பிள்ளையவர்கள் வயற்புறம் சென்றிருப்பதாகக் கூறினர்.
அதனை அறிந்த கவிராயரும் வயற்புறம் நோக்கிச் சென்றார். சலசல என்று ஓடும் வாய்க்கால் நீரும், அதை எதிர்த்து உடலசைத்துச் சென்ற மீன்களும் கவிராயருக்குக் களிப்பை உண்டாக்கின. வயல்களில் கதிர்களின் பாரத்தைத் தாங்க முடியாமல் பயிர்கள் சாய்ந்து கிடந்தன. அவை சாய்ந்து கிடந்தமையால் வயல்கள் மறைப்புண்டு கிடந்தன. சில வயல்களில் விண்ணில் நட்சத்திரங்கள் சிதறிக் கிடப்பதைப் போல் செந்நெல் மணிகள் விழுந்து கிடந்தன.
ஆனந்தரங்கம்பிள்ளை அந்நெல்மணிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். மதுரகவிராயர் மெதுவாகச் சென்று அவர் எதிரே அரவமின்றி நின்றார். பிள்ளையவர்கள் தற்செயலாகத் தலை நிமிர்ந்தார். கவிராயரைக் கண்டார்.
அன்பு நிறைந்த முகத்துடன், ""வணக்கம்! அந்த வரப்பின் மேல் உட்காருங்கள் வந்து விடுகிறேன்!'' என்று கூறினார்.
அவர் கூறியபடியே மதுரகவிராயர், புற்கள் நிறைந்திருந்த வரப்பின் மேல் உட்கார்ந்தார். சிறிது நேரம் சென்ற பிறகு பிள்ளையவர்கள் முன் போலவே நெல்மணிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் வருவார் என்று கருதி அமர்ந்திருந்த கவிராயர், எழுந்திருப்பதும், உட்காருவதும், சிறிது நடப்பதுமாக இருந்தார். அவ்வாறெல்லாம் செய்வதன் மூலம் தம்முடைய அவசரத்தை அவருக்கு உணர்த்தினார்.
அதனை அறிந்த பிள்ளையவர்கள் கவிராயரைப் பார்த்து, ""ஏன் பறக்கிறீர்?'' என்று கேட்டார்.
அதைக் கேட்ட கவிராயரின் முகத்தில் சினக்குறி தோன்றியது. பிள்ளையவர்களின் வார்த்தை கவிராயருக்குக் கடுமையானதாகத் தோன்றியது. கவிராயரின் உள்ளத்தை அவருடைய வார்த்தை சுருக்கென்று சுட்டது.
கவிராயர் உடனே பிள்ளையவர்களைப் பார்த்து, ""கொக்குப் பறக்கும், புறா பறக்கும், குருவி பறக்கும், நக்குப் பொறுக்கிகளும் பறப்பர். மக்கள் தலைவனே! நான் ஏன் பறப்பேன்?'' என்று கருத்தமைந்த ஒரு பாடலைப் பதிலாகப் பாடினார்.
ஆனந்தரங்கம் பிள்ளையவர்கள் அந்தப் பாடலின் சுவையைச் சுவைத்துக் கொண்டே தம் வீட்டிற்குப் புறப்பட்டார். கவிராயர் முன்னே செல்ல, பிள்ளையவர்கள் பின்னே சென்றார். பிள்ளையவர்கள் மதுரகவியாரைத் தம் மாளிகைக்குள் அழைத்துச் சென்றார். அம்மாளிகையின் மீது பிரெஞ்சுக்கொடி பறந்து கொண்டிருந்தது.
அந்த மாளிகையில் மதுரகவிராயர் களைப்பாறினார். அவருக்கு உணவளிக்க பிள்ளையவர்கள் தலை வாழை இலையை அவர் முன் போட்டர். கவிராயருக்கோ கடும்பசி. பிள்ளையவர்கள் வெள்ளித் தட்டில் பொற்காசுகளைக் கொண்டு வந்து கவிராயர் முன் இருந்த இலையில் வைத்தார். வைத்துவிட்டு, கவிராயரை முகமலர்ச்சியுடன் பார்த்து, ""மதுரகவி பாடும் மதுரகவிராயரே! இதனை மதுரமோடு உண்ணுங்கள்!'' என்று கூறினார்.
அதைக் கேட்ட மதுரகவிராயர் திகைத்தார். பிள்ளையவர்கள், ""கவிராயரே! ஏன் விழிக்கிறீர்? இதனை உண்ணுங்கள். நான் வயலில் உதிர்ந்து கிடந்த நெல்லைப் பொறுக்கினேன். அதனை நீர் அற்பமாக நினைத்தீர். அது நெல்லன்று; பசிப் பிணி மருந்து. அது பசியை ஒழிக்குமா? இந்தப் பொற்காசுகள் பசியை ஒழிக்குமா?'' என்று வேடிக்கையாகக் கேட்டார்.
அதைக்கேட்ட மதுரகவிராயர், ""என்னைப் பசி மிகவும் எரித்தது. அதனால், நான் பசியைப் போக்கிக் கொள்ள உங்களைத் துரிதப்படுத்தினேன்!'' என்று பதில் கூறினார்.
அதைக்கேட்டு பிள்ளையவர்கள் சிரித்தார். கவிராயர் முன் இருந்த இலையை இழுத்துப் பக்கத்தில் வைத்துவிட்டு, அவர் அருகில் அமர்ந்தார். வேலையாள் அவர்கள் இருவருக்கும் இலையிட்டு உணவு பறிமாறினான். இருவரும் இனிது உண்டனர். பிள்ளையவர்கள் அதன் பிறகு அப்பொற்காசுகளை அக்கவிராயருக்கே பரிசாக அளித்துவிட்டார். மதுரகவிராயர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு தம் ஊர் திரும்பினார்

சுரைக்காய்ச் சித்தர் வரலாறு



சித்தர் என்போர் யாவர் என்ற கேள்விக்கு சித்து ஆற்றல் பெற்றோர் எனவும், சித்தி பெற்றோர் எனவும், மீஇயற்கை (super natural) ஆற்றல் பெற்றோர் எனவும், சித் என்றால் அறிவு ஆதலால் அறிஞர் எனவும் பலரும் பலவாறாக விளக்கம் தருகின்றனர். ஆனால் சித்தர்கள் இப்படிப்பட்டவர் என வரையறுப்பதோ, அடையாளப்படுத்துவதோ மிகக் கடினம்.


'பேறாம் பிரமானந்த மடைந்தோன் சித்தன்' என்பார் கோரக்கர்.


பந்தங் கடந்தவனே சித்தன் - பாரில்
பஞ்சமா பாதகத்தை விட்டோனே பத்தன்
இந்த விதஞ் தெரிந்தவனே சித்தன்
அதிலென் நிலைமை கண்டவனே சீவமுத்தன் 


என்கிறார் கல்லுளிச் சித்தர்.


சித்தர்கள் குறிப்பிட்ட ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் எனச் சொல்வதற்கு இல்லாமல் எல்லாக் காலத்திலும் வாழ்ந்து இருக்கிறார்கள். இவர்கள் காயகல்பம், மருத்துவம், கணிதம், இதள் மாற்றியம் (இரசவாதம்), மெய்யியல், ஆன்மீகம், கணியம் (சோதிடம்) என பல துறைகளில் வல்லவர்களாக இருந்துள்ளனர். 


சித்தர்கள் நினைத்ததை நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்க நிறைமாந்தர் எனப்படுகின்றனர். தமிழகத்தின் நெடிய வரலாற்றில் புகழ்மிக்க பல சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டிற்கு சித்தர்நாடு என்றே கூட ஒரு பெயர் உண்டு. இவர்களில் சிலரைப் பற்றியாவது நாம் அறிந்துகொள்ளல் வேண்டும். அந்த வகையில் மிக அண்மையில் 19 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்து 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கதில் வாழ்வு நீத்தவரான ஒரு பெரும் பெரியார் (மகான்) தான் சுரைக்காய் சித்தர் என்பவர். அவரைப் பற்றிய வரலாற்றையே இம்முழுக் கட்டுரையும் விளக்குவது.

சுரைக்காய் சித்தரோடு உடனிருந்து அனுபவம் பெற்ற 75 அகவையாளர் திரு. செங்கல்வராய முதலியாரின் அனுபவங்கள் முதல் பகுதியாகவும், சுரைக்காய் சித்தரை சந்தித்து அருள் பெற்ற அவரது பக்தர்கள் சிலரது அனுபவப் பதிவுகள் இரண்டாம் பகுதியாகவும் இடம் பெறும்படியாக ஒரு நூலை தெலுங்குல் எழுதி முதன்முதலாக திரு. R. கிருஷ்ணசாமி நாயுடு B.A. 1911 இல் வெளியிட்டார். பின்பு இந்நூலை திரு. N . ராஜு நாயுடு MBPI தெலுங்கிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். அந்த ஆங்கில நூலை 'சுரைக்காய் சுவாமிகள் வரலாறு - அற்புதச் செயல்கள் வருமுன்னுரைத்தல்' என்ற தலைப்பில் திரு. தி. பக்தவத்சலம் பிள்ளை B.A. தமிழில் மொழிபெயர்த்து 1929 இல் வெளியான நூலை மேற்கோளாகக் கொண்டு சுறுக்கமாக எழுதப்பட்டது இக்கட்டுரை.


தமிழ்நாட்டின் வடக்கே திருத்தணிக்கும் திருப்பதிக்கும் இடையில் அமைந்த புத்தூருக்குக் கிழக்கே 4 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் ஒரு சிறிய ஊர்தான் நாராயணவரம் அல்லது நாராயணவனம் என்பது. தம் இறுதிக் காலத்தே இங்கு தங்கி வாழ்ந்தவர் தாம் சுரைக்காய்ச் சித்தர் என்னும் தவப்பெரியார். நூலில் இவர் பெயர் சுரைக்காய் இராமசாமி என்று பதிவாகி உள்ளது. இரு பெரிய சுரைக் குடுக்கைகளை இரண்டு ஏனங்களாகப் பயன்படுத்துவதற்காக அவற்றை இவர் எப்போதும் தம்முடனேயே எடுத்துச் சென்றதால் இவர் சுரைக்காய்ச் சித்தர் என்று அடையாளப்படுத்தப்பட்டார். உணவையும் நீரையும் இக்குடுக்கைகளிலேயே இவர் வைத்துக் கொள்வார். இரு நாய்களை கயிறு கட்டி இழுத்துச் செல்வார். பிச்சை எடுத்து உண்டு வாழ்ந்த இவருக்கு குடும்பம் என்று ஒன்று இருந்ததாகத தெரியவில்லை.


உருவத்தில் இவர் சற்றே குட்டையானவர், மாநிறத்தவர். கிழிந்த உடையும், பெரிய தலைப்பாகையும் அணிந்திருப்பார். இதுவே இவருடைய அடையாளம். இவர் பேசும் சொற்களிலிருந்து நேரான பொருளை அறிய இயலாது. எதையும் மறைபொருளாகவே பேசுவார். சிலபோது தம்மிடம் வந்து தங்கள் குறைகளைக் கூறுவோருக்கு ஆறுதல் சொல்லுவார்; நோயுற்று நலிந்தவருக்கு நோயைப் போக்கி அருளுவார்; இடருற்றவருக்கு இடர்களைக் களைவார். கெடுதிவருமுன்னே குறிப்பாய் எச்சரித்துத் துன்புற வேண்டியவர் நெஞ்சைத் திடப்படுத்துவார். இவர் எப்போது பிறந்தார், எங்கு பிறந்தார் என்று எவராலும் திட்டமாகக் கூற இயலவில்லை. இவர் இடையர் குலத்தில் பிறந்து ஆடுமாடு மேய்க்குங்கால் ஒரு ஓகி(யோகி)யரிடம் ஓகப்பயிற்சி கற்றார் என்பர். இவர் இருநூறு ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து சமாதி அடைந்தார் என்பர் சிலர். இன்னும் சிலர் இவர் திருப்பதிக்கு அருகில் ஒரு கிராமத்தில் பிறந்து திருவள்ளூரில் ஒரு கையில் கருடனை ஏந்திக் கொண்டு நெடுங்காலம் பிச்சையெடுத்து நாளடைவில் விந்தையான மன ஆற்றலை வளர்த்துக் கொண்டார் என்பர். இவற்றுக்கெல்லாம் உறுதியான, கண்கூடான சான்றுகள் ஒன்றுமே கூட இல்லை.


இவரது சமயம் வைணவம் என்றோ சைவம் என்றோ பாகுபடுத்த இயலாது. குறுகிய நெறிகளைப் பின்பற்றும் சமயங்களைக் கடந்து நின்றவர் அவர். சமயக்குறிகளை அணிவது இவர் வழக்கமன்று ஆனால் எவரேனும் திருநீறோ திருமண்ணோ அவர் நெற்றியில் சாற்றினால் அதற்கு அவர் முகஞ்சுளிப்பதில்லை. அவர்கள் மகிழட்டும் என்று அவர் சும்மா இருந்துவிடுவார்.




சித்தர் நடக்கப்போவதை முன்கூட்டியே அறிவார் என்பதற்கு ஒரு நிகழ்வு:


ஓரிரவு 12.30 மணிக்கு சுரைக்காயார், பாவம்! ஓர் ஏழைப்பெண் இறக்கப் போகிறாள்! குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறாள்! உடனே விரைந்து சென்று அவளைக் காப்பாற்றுங்கள் என்று அழுதுகொண்டே சொன்னார். உடனே அவரது பக்தர்கள் அங்கிருந்த தோட்டத்தின் தொலைவான மூலையில் இருந்த ஒரு குளத்தில் சென்று தேடியபோது அங்கே எவரும் இருக்கவில்லை. இதை ஓடிச் சென்று சித்தரிடம் தெரிவித்தபோது தவறான இடத்தில் தேடிப்பார்த்துள்ளீர்கள் என்று கடிந்துகொண்டு அவர்களிடம் தொலைவிலுள்ள குளத்தைப் பற்றிய விவரங்களைக் கூறினார். மறுபடியும் சித்தர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்று தேடியபோது ஒரு பெண் தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியாக குளத்தின் ஆழமான பகுதியில் அந்த நள்ளிரவில் குளத்தில் மூழ்கிவிட முயல்வதை பார்த்த அவர்கள் அவளிடம் அறிவுரை கூறி அவளது முயற்சியைக் கைவிடச் செய்தனர். அவள் தன் நோயின் துன்பம் காரணமாக அவ்வாறு தற்கொலையில் ஈடுபடத் துணிந்தாள்.


சித்தர் தாம் பிறப்பெடுத்ததன் குறிக்கோள் முடிவுற்றதால் இவ்வுலகை விட்டு நீங்க உறுதிபூண்டார். அவர் சமாதி அடைவதற்கு சில மாதங்கள் முன்பாக அவரது பக்தர் திரு. N. இரத்தினசபாபதி பிள்ளை தம் பணியிடம் செல்லவேண்டி இருந்ததால் சுரைக்காய் சித்தரிடம் விடை பெறச் சென்றபோது மறுபடியும் இவரை சந்திக்கும் பேறு எப்போது கிட்டுமோ என்று எண்ணினார். அப்போது சித்தர் ''சித்திரத்தே குத்தி அப்புறத்தே வைத்திருக்கிறதே! அதைப் பார்த்துக் கொள்வது தானே என்று அங்கே மாட்டியிருந்த தம் புகைப்படத்தைக் காட்டினார். இதுவே இரத்தின சபாபதியுடனான இறுதிச் சந்திப்பு என்பதைத் தான் அவர் மறைமுகமாகச் சுட்டினார். .




இவரது இறும்பூதுச் செயல்கள் (Miracle Deeds):


ஒருபோது ஒரு கிழவி தன் பேத்தியை அழைத்து வந்து சித்தரிடம் காண்பித்தாள். நெடுநாள் காய்ச்சலால் அப்பேத்தி உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக ஆகிப்போயிருந்தாள். மருத்துவர் நோய் இன்னது என்று அறியாதவராக கைவிட்டிருந்தனர். சுரைக்காய்ச் சித்தர் அந்நோயாளி மேல் இரக்கங்கொண்டு அவளை ஆசிர்வதித்துத் தரையில் இருந்த மண்ணை எடுத்துக் கொடுத்து அப்பெண்ணுக்கு மருந்தாக அளிக்கச் செய்தார். அவ்வாறு செய்த சின்னாட்களிலேயே அந்நோய் அகன்றது. ஒரே மாதத்தில் அவள் நல்ல உடல்நிலையைப் பெற்றாள்.


ஒருபோது வண்ணான் ஒருவன் ராசபிளவை நோயினால் அளவிலாத் துன்பமுற்று சுரைக்காய்ச் சித்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். சித்தர் அவனை ஆசிர்வதித்துக் கழுத்திலும் முதுகிலும் உள்ள பிளவையில் புளியை அரைத்து தடவினால் ஆறிவிடும் என்று சொல்லி அனுப்பினார். அவர் மேல் நம்பிக்கைகொண்டு அவ்வாறே செய்த வண்ணான் இரு வாரங்களில் அந்நோயிலிருந்து விடுபாடு கண்டான்.


1902 இல் ஆகத்து மாதத்தில் சுரைக்கைச் சித்தர் கடைசி முறையாகச் சென்னை வந்தார். ஒரு வாரம் அங்கு தங்கிவிட்டு 'வெற்றி கண்டாகிவிட்டது' இனி ஒரு நொடியும் தாழ்த்தக் கூடாது என்று சொல்லி வழக்கமாக அவருடன் இருப்போரை எல்லாம் சென்னையிலேயே விட்டுவிட்டு திரு. புருசோத்தம நாயுடுவுடன் நாராயணவரத்திற்கு புறப்பட்டு இரவே புத்தூர் சென்றடைந்து அங்கு இரவு தங்கினார். அடுத்தநாள் சித்தர் அங்கிருந்து ஒரு பசனை கூட்டத்துடன் புறப்பட்டார். உள்ளத்தை உருக்கும் பாடலைப் பாடிக்கொண்டும், இறைவனை நெஞ்சார வழிபட்டு கொண்டும், இறைவனுக்கு நன்றி தெரிவித்தும் அவர் எழுப்பிய இன்னிசை கேட்பவர்கள் காதில் தேனாய் ஒலித்தது. நாராயணவரம் சென்றடைந்ததும் புருசோத்தம நாயுடு, பாப்பைய்ய செட்டி ஆகியோரிடம் 'நான் நாளை மறுநாள் என்னுடைய ஊருக்குப் போகிறேன்' என்றார். அன்று இரவு தம் தாகத்தைத் தணிக்க 10 படி தண்ணீர் குடித்தார். ஆனாலும் மலம் ஏதும் கழிக்கவில்லை.


மறுநாள் அவரது வேண்டுகோளின்படி புருசோத்தம நாயுடு 150 குடங்கள் தண்ணீர் கொண்டுவந்து அவர்மேல் ஊற்றினார். அப்போது நள்ளிரவு 12 மணி. சித்தர் வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு புருசோத்தம நாயுடுவிடம் தேங்காயும் கற்பூரமும் இல்லையா? என்று கேட்டார். நாயுடு பாப்பய்யச் செட்டியிடம் சென்று சித்தர் விரைந்து உலக வாழ்வைவிட்டு நீங்கிவிடுவார் என்று தாம் அஞ்சுவதாக சொல்லி தேங்காயும் கற்பூரமும் கொடுக்கும்படி வேண்டினார். செட்டியும் அவற்றைக் கொடுத்தார். ஆனால் சித்தர் நாயுடுவிடம் தாம் மறுநாள் பகல் பன்னிரண்டு மணிக்கு உயிர் நீப்பதாக சைகை காட்டினார். சித்தர் வாய்திறவாது அனைப்புக்கை (அபயஸ்தம்) காட்டி தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றுமாறு குறிப்பிட்டார். அவ்வாறு செய்ததும் சித்தர் புருசோத்தம நாயுடுவின் மேல் மெதுவாகச் சாய்ந்தார். அப்படியே இறைவனோடு ஒன்றிவிட்டார். அடுத்தநாள் அவர் ஏற்கெனவே வழியில் வளர்ந்து இருந்த நாகதாளிச் செடிகளை அகற்றி அங்கிருந்த குழிகளில் குழாங்கற்களையும் மணலையும் நிரப்பிச் சீர்திருத்தி வைத்திருந்த நிலவெளியில் அவரது மெய்யுடல் சமாதி வைக்கப்பட்டது. இச்செய்தி கேட்டு அவரது அடியார்கள் பெருந்துயர் எய்தினர். பின்பு சமாதி வைக்கப்பட்ட இடம் கோவிலாக கட்டி எழுப்பப்பட்டது. மேற்சொன்ன யாவும் செங்கல்வராய முதலியார் நினைவுகளின் பதிவுகள்.




நூலில் சுரைக்கைச் சித்தரது அடியார்கள் பதிந்த தம் அனுபவங்களில் சில:


திரு M. குப்புசாமி செட்டி M.A. கூறியது (பக்கம் - 236): சுரைக்கைச் சித்தர் N. இரத்தின சபாபதி பிள்ளையின் மகள் திருமணத்தின்போது சென்னை வந்திருந்தார். அவருடன் கண்ணுக்குட்டி சாமி என்ற வேறொரு சாமியார் வந்திருந்தார். இருவரும் வியப்புறும் வகையில் நோய்களைப் போக்கினர். இதில் சிறப்பாகக் குறிப்பிடவேண்டியது என்னவென்றால், சுரைக்காய்ச் சித்தர் தம்மிடம் வந்தவர்களின் பெயரைச் சொல்லி அவரவர் துன்பங்களைப் போக்கி அவர்க்கு ஏற்ற வழியை அவர்கள் மட்டுமே உணர்ந்து கொள்ளும்படிச் சொன்னார்.


(பக்கம் - 240) ஏழாம் எட்டுவர்டு மன்னர் (9th August 1902) முடிசூட்டிய நாளில் சுரைக்காய் சித்தர் சமாதி வைக்கப்பட்டார். அதற்கு முந்தைய நாள் அவர் உயிர் நீத்தார்.


பொதுவாக அவர் பேச்சு உலகில் நடக்கவேண்டிய முறை பற்றியும், ஓகம், மெய்யியல் இவற்றைப் பற்றியுமாகவே இருந்தது.அவர் இயற்கை சக்திகளை அடக்குவதும், நோய்களை நீக்குவதும் வியக்கத்தக்கனவாய் இருந்தன. வயிற்றுவலிக்கு ஒருமுறை அவர் தம் உள்ளங்கையில் ஒரு சிறு குச்சியை சிறிது நேரம் வைத்திருக்க அது ஒருவித பழுப்புத் தூளாக மாறிவிட்டது. அதை நோயாளியிடம் கொடுத்து சிறிதளவு காதில் போட்டுச் சில துளி தண்ணீர் விட்டால் நோய் நீங்கும் என்றார். அவ்வாறே நோயாளியின் நோய் நீங்கியது. அன்றாடம் வருபவர்கள் எண்ணிக்கையையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் சித்தர் முன்னதாகவே உணர்ந்து தெரிவிப்பார். மக்கள் அவரிடம் வருவதற்கு முன்பே அவர்கள் வருகையைப் பற்றி முன்னதாகவேக் கூறுவார். பேய் பிசாசு பிடித்தவர்கள், உணர்வு (மனநலம்) கெட்டவர்கள் ஆகியோர்களை நலமுறச் செய்வது அவரது அன்றாட நிகழ்ச்சியாயிருந்தது.


திரு. V.நாதமுனி முதலியார் கூறியது (பக்கம் - 166): சுரைக்காய் சித்தர் செங்கற்பட்டு வட்டத்தில் வண்டலூரில் பிறந்தவர் என்றும் இடையர் குலத்தவர் என்றும் அவரது உறவினர் சிலர் இன்றும் அங்கிருப்பது தெரியா வந்துள்ளது. அவர் தொழில் மாடு மேய்ப்பது சிறப்பாக, ஆடு மேய்ப்பது. அவர் பெயர் இராமசாமி. தொண்ணூறு அகவையாளர் போல் காணப்பட்டாலும் அவர் வயது என்னென்று திட்டமாகக் கூறுவதற்கில்லை. சென்னை சட்டசபை உறுப்பினர் திரு. சீனிவாசப் பிள்ளை, புத்தூரில் நூற்றுநாற்பது ஆண்டுகளுக்கு முன் கட்டிய சத்திரத்தைப் பற்றிய செலவுக் கணக்கில் எழுதியுள்ள பதிவு ஒன்று சித்தரின் அகவையை உணர்ந்துகொள்ள உதவுகிறது என்கிறார். இந்த பகுதி கணக்கில் முதலாக உள்ளது அதன்படி சத்திரம் கட்டுவதற்கு சுரைக்காய் சித்தரைக் கருத்து கேட்டதாக இருக்கிறது.


(பக்கம் - 213) V. எத்திராசுலு நாயுடு என்பவருடைய வீட்டில் சித்தர் தங்கியிருந்த போது அவரது பெரிய அக்காள் சுப்பராவ் அம்மா சித்தரின் அகவை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலுள்ளவராய் யாரிடமேனும் கேட்கலாம் என்று இருந்த போது இதைத் தம் ஓக ஆற்றலால் உணர்ந்த சித்தர் ''எனக்கு இப்போது அகவை 500. நான் இங்கேயே இருந்தால் மற்ற இடங்களுக்கு எப்போது போவது?'' என்று சொன்னார். இதன் பின் 1902 இல் மறைந்தார்.


திரு. C. விஜயராகவலு நாயுடு கூறியது (பக்கம்-115): பலமுறை அவர் தம் உடலை விட்டுவிட்டுச் சென்று சிலருக்குத் தம் அடையாளம் தெரியாமலேயே உதவிவிட்டுத் திரும்பியிருக்கிறார்.


திரு. வேணுகோபால் நாயுடு கூறியது (பக்கம் - 127): சமாதி அடைவதற்கு முன்பு 1902 ஆம் ஆண்டு சூலை மாதம் கடைசியில் அவர் சென்னையில் இருந்து புறப்பட்டபோது வண்டியில் உட்கார்ந்ததும் தம் வழக்கத்திற்கு மாறாகத் தம் கைத்தடியை நிற்கவைத்துக் கொண்டிருந்தார். சுரைக்காய் சித்தர் எங்கு உட்கார்ந்தாலும் தம் கைத்தடியைப் பக்கத்தில் தான் வைப்பது வழக்கம். அப்போது மும்பை மெயில் மாலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவது வழமை. மணி ஆறுக்கு காப்பாளர் பச்சைக் கொடி காட்டினார். ஆனால் வண்டி புறப்படவேயில்லை. ஏதோ எஞ்சின் கோளாறு என நினைத்து ஆங்கில இரயில் அதிகாரிகள் வேறு எஞ்சினைப் பூட்டினர். அப்போதும் வண்டி புறப்படவில்லை. மணி 6.15 கடந்துவிட்டது. சுரைக்காயார் தடியைப் பக்கத்தில் வைத்தார் வண்டி உடனே புறப்பட்டது. இதுவே கடைசி முறையாகத் தம் சீடர்களைப் பார்ப்பது என்பதை உணர்த்தத் தம் ஆற்றலைக் காட்டினார் போலும். இந்த நிகழ்விற்கு ஒரு வாரத்தில் அவர் இவ்வுலக வாழ்வை நீத்தார். நிலைய அதிகாரியும் மற்றவர்களும் எஞ்சின் செல்லாத உண்மைக் காரணத்தை அறிந்ததும் சித்தரின் சித்தாற்றலை எண்ணி வியப்புற்றனர்.


திரு. C. வீரராகவராவ் கூறியது (பக்கம் - 221): அடிக்கடி அவர் என் கனவில் தோன்றி வரப்போகும் நிகழ்ச்சிகளை முன்னதாகத் தெரிவித்தார் . கடல் பொங்கி சென்னை மூழ்கிவிடப்போகிறது என்ற புரளி கேட்டு நான் அச்சம் கொண்டபோது அவர் என் மனதைத் தேற்றினார். வேறொரு முறை என் மகனுக்குக் காய்ச்சல் போக அவர் சொற்படி தண்ணீர் கொடுத்தேன். மருந்தில்லாமல் அவன் நலமானான்.




சுரைக்காய் சித்தர் ஜீவசமாதி கோவில்


அவருடைய சமாதியில் அன்றாடம் பூசனை நடத்தப்படுகிறது. நூற்றுக்கணக்கினர் நாள்தோறும் பல தொலைவிடங்களில் இருந்து வந்து வழிபட்டு அவர் அருளைப் பெற்றுச் செல்கின்றனர். இந்த இடத்தில் ஊழ்கம் (தியானம்) செய்கிறபோது பிற இடங்களில் ஏற்படாத ஒருமுனைப்பட்ட ஒருமுகப்பாடு கைகூடுகிறது. மக்கள் சிலர் சித்தரின் நினைவாக சுரைக்காய்களை கட்டுகின்றனர். சித்தர் வாழ்ந்திருந்த காலத்தில் காட்டுமரங்களை வெட்டிவந்து கொளுத்தி குளிர்காய்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது மக்களும் தீயைச் சூழ்ந்து உட்காருவர். அதன் தொடர்ச்சியாக இன்றும் வேப்பமர விறகுகள் கொளுத்தப்படுகின்றன. மக்கள் உடல் நோயை தீர்க்கும் வெற்றியைத் தந்திடும் என்ற நம்பிக்கையில் அதன் சாம்பலை உடலில் தடவிக் கொள்கின்றனர். பிள்ளை இல்லாதோர் வேண்டி பிள்ளை பிறந்தால் பிள்ளையின் எடைக்கு எடை காசு தருகின்றனர். பேய்பிசாசு பிடித்தோர் பில்லிசூனிய பாதிப்புடையோர் அதிலிருந்து விடுபட இங்குவருகின்றனர். திருமணத் தடை, குடும்பச்சிக்கல் நீங்க வேண்டியும் மக்கள் சித்தர் சமாதிக்கு வருகின்றனர். இக்கோவில் தனியாரால் பேணப்படுகிறது. காலை 6 முதல்12 மணி வரையும், மாலை 3.30 முதல் 8.30 வரையும் கோவில் திறந்திருக்கும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவதால் நாள் முழுதும் கோவில் திறந்திருக்கும். அன்று பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் நண்பகலிலும் இரவிலும் தானமாக சோறு போடப்படுகிறது. கோவில் தொலைபேசி 08577 224877. இங்கிருந்து 8 கி.மீ.தொலைவில் கைலாச கோனை அருவி உள்ளது. இங்கு செல்ல ஊத்துக்கோட்டை வழியாக பேருந்து போக்குவரத்து உள்ளது.   

Wednesday, October 14, 2015

நெல்லை மாவட்டம் களக்காட்டை அருணாசலகுமார் அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு எழுதிய கடிதம்


இவர்  கண்டுபிடிப்புகளை நிருபிக்க வாய்ப்பு ஏற்படுத்த தர வேண்டுகிறோம்.முடிந்தவர்கள் உதவவும். இணையத்தில் பகிரவும்Cell: 9865181457            Email: balakf@gmail.com











இவர்  கண்டுபிடிப்புகளை நிருபிக்க வாய்ப்பு ஏற்படுத்த தர வேண்டுகிறோம்.முடிந்தவர்கள் உதவவும். இணையத்தில் பகிரவும்Cell: 9865181457    Email: balakf@gmail.com


ஆயர் குல ஆராய்ச்சியாளர் : நெல்லை மாவட்டம் களக்காட்டை அருணாசலகுமார்

இவர்  கண்டுபிடிப்புகளை நிருபிக்க வாய்ப்பு ஏற்படுத்த தர வேண்டுகிறோம்.
முடிந்தவர்கள் உதவவும். 
இணையத்தில் பகிரவும்

From
            S. Arunachala Kumar yadav
            69/25 Kottai Yathavar Main Street
            Kalakad – 627501, Tirunelveli Dist.
            Tamilnadu, India Cell: 9865181457
            Email: balakf@gmail.com


    Respected ,
            Good Morning, I am one of the scientist I have researched 22 research that is space research is very very important. A heavy fuel storage on the space first my research explanation and formula next sample of space fuel and another than supply of world people my research is valuable of one. Please request of consider my letter. Supply of the world all people in fuel storage on the space. My research is confirmed it. My research explanation and formula consulting for you a new world record and world people main problem solve of my research, request please co-operation with me your’s any step appreciate it and follow my research use in all people.

Repeatly please help for me
Thank You,
I am waiting for your’s valuable reply,
FOR HELP ME.

                                                                                                               Yours faithfully
Place: Kalakad ,tirunelveli,tamilnadu,INDIA                                   S. Arunachala Kumar yadav 
                                                                                                               Cell: 9865181457
















சோலார், காற்றாலை மூலம் கூடுதல் மின்உற்பத்தி : பட்டதாரி வாலிபர் கண்டுபிடிப்பு:

சோலார் மற்றும் காற்றாலைகள் மூலம் கூடுதலாக மின்சாரம் தயாரிக்க முடியும் என களக்காட்டை சேர்ந்த பட்டதாரி வாலிபர் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்தவர் அருணாசலகுமார்(40). சமூகவியல் முதுகலை பட்டதாரியான இவர் நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டு பிடித் துள்ளேன். விஞ்ஞானி ஐசக் நியூட்டன், பூமிக்கு புவிஈர்ப்பு விசை உண்டு என்று கண்டுபிடித்தார். அந்த விசைமட்டுமல்ல, ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினையும் இருக்கிறது என்பதை நான் கண்டறிந்தேன். பம்பரத்தை சுழலவிடுவது, நாணயத்தை சம தளத்தில் சுழலவிடுவது போன்ற செயல்களுக்கு இருவிதமான விசை தேவைப்படுகிறது என்பதை என்னால் நிரூபிக்க முடியும். 


மேலும் ஏற்கனவே காற்றாலை, சோலார் ஆகியவற்றில் இருந்து தற்போது பெறப் படும் மின்சார அளவைவிட அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் முறை உள்ளிட்ட 9 விதமான புதிய அறிவியல் ஆய்வு களை கண்டறிந்துள்ளேன். விண்வெளி நிகழ்வு தொடர்பான 6 புதிய கண்டு பிடிப்புகள் என்னி டம் உள்ளது.


இதுதொடர்பாக நாசா விஞ்ஞானிகளுக்கு நான் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அவர்கள், கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக இணையதளம் மூலம் என்னிடம் தொடர்பில் உள்ளனர். எனது அறிவியல் கண்டுபிடிப்புகளை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் போன்ற பெரிய விஞ்ஞானிகள் முன்னிலையில் நிகழ்த்தி காட்ட தயாராக உள்ளேன். அதற்கான வாய்ப்புகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி தரவேண்டும் என்றார்.

இவர்  கண்டுபிடிப்புகளை நிருபிக்க வாய்ப்பு ஏற்படுத்த தர வேண்டுகிறோம்.
முடிந்தவர்கள் உதவவும். 
இணையத்தில் பகிரவும்

கல்வெட்டை தெய்வமாக வழிபடும் கிராமத்தினர்: பாரம்பரிய நடைபயணத்தில் ருசிகர தகவல்


கி.பி. 14-ம் நூற்றாண்டை சேர் ந்த பழங்கால கல்வெட்டை கிராம மக்கள் தெய்வமாக வழிபட்டு வருவதாக பாரம்பரிய நடை பயணத்தில் தெரிவிக்கப்பட்டது.

தானம் அறக்கட்டளை சார்பில் மதுரை அருகே யா.கொடிக்குளம் கிராமத்தில் பாரம்பரிய நடைபயண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பேராசிரியர் வெங்கட்ராமன் கூறியது: மண் சார்ந்த மரபின் வெளிப்பாடாக நாட்டுப்புறத் தெய்வங்கள் திகழ்கின்றன. வெள்ளைச்சாமி, கருப்புச்சாமி, அய்யனார், வீரணன் என பல பெயர்களால் இன்றளவும் மக்கள் வழிபட்டு வருகின்றனர். யா. கொடிக்குளத்தில் அமைந்துள்ள பகுதி தூங்காவனம் என்றும், அழகிய மணவாளன் திருநந்தவனம் என்றும் அழைக்கப்பட்டுள்ளதை இங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கரையில் அமைந்துள்ள வேதநாராயணப் பெருமாள் கோயிலில் கி.பி. 1308-ம் ஆண்டு குலசேகர பாண்டியனின் அதிகாரி சுந்தரபாண்டிய சோழக் கோனார் என்பவர் திருப்பணி மேற்கொண்டதாக, திருமோகூர் காளமேக பெருமாள் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இங்குள்ள இலுப்பையூற்று கிணறுதான் கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்றார்.

ஒருங்கிணைப்பாளர் பாரதி கூறியது: சிவன் கோயிலோடு குலசேகரன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டை கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர். இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்த பொய்கை பகுதியை பாதுகாப்பதில் தீவிர பங்காற்றி வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்றார்.

Tuesday, October 6, 2015

திருநெல்வேலியில் யாதவர் பண்பாட்டுக் கழகம் சார்பில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை



திருநெல்வேலியில் யாதவர் பண்பாட்டுக் கழகம் சார்பில் திங்கள்கிழமை மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

யாதவர் பண்பாட்டுக் கழக செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் எஸ். சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் உயர்கல்வி பயிலும் மாணவிகள் பி. இசக்கியம்மாள், ஏ. ராஜவேணி ஆகியோருக்கு தலா ரூ. 10 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

தென்மண்டல யாதவ முன்னேற்றச் சங்கத் தலைவர் கே. ராமகிருஷ்ணன், அரிமா வானமாமலை, அமைப்பின் நிர்வாகிகள் காந்திராஜன், விநாயகம், எஸ்.ஆர். வெங்கடாசலம், வேலுதாஸ், இசக்கிமுத்துதாஸ், வேலு, பால்துரை, பண்டாரம், சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சங்க பொன்விழாவை சிறப்பாக நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலர் டி. ராமசாமி வரவேற்றார். பொருளாளர் கே. பாவநாசம் அறிக்கை வாசித்தார். துணைத் தலைவர் சுப்பையா நன்றி கூறினார்.

Friday, October 2, 2015

கரந்தைத்திணை

ஆநிரைகளைக் கவர்தல் தான் போருக்குத் தொடக்கமாக அமைகின்றது. ஆநிரை கவர்வோர் செயலை ஆநிரையை மீட்போர் மிகக் கடுமையாக எதிர்த்துப் போரிடுவர்.

பகைவன் நாட்டைக் கைப்பற்றவோ, அவ்வரசனின் மகளைப் பெண் கேட்டு, அவன் தர மறுக்கும்போதோ, போர் நடத்தப்பெறுதல் பெரும்பான்மை நிகழ்வாக இருக்கும். சில நேரங்களில் இகழ்ந்து பேசியதாலும் இகழ்ச்சிக்கு ஆட்பட்டவன் போர்தொடுத்தலும் நடைபெற்றுள்ளது.

புறத்திணைகள் போர்ப் பிரிவுகளைக் கூறினாலும் அவற்றிற்குரிய துறைகள் போரின் சிறு சிறு நிகழ்வுகளைக் கூறுவன ஆகும்.

போருக்கு அடிப்படைக் காரணம் உலகப் பொருள்கள் மேல் ஆசையும், பெண்ணாசையுமே ஆகும். புறத்திணைகளில் ஒன்றானகாஞ்சித் திணை உலக நிலையாமையை எடுத்துரைக்கிறது. வாழ்வில் ஏற்படும் பல்வேறு அனுபவங்களையும் இது எடுத்துக்கூறுகின்றது. ஆசைகளால் பயன் இல்லை என்கிறது இது.

போர் தொடங்குவதில் இருந்து போர் முடிந்து வெற்றி பெற்றோ, தோல்வியுற்றோ வரும்வரை ஓர் ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் தான் போர் நிகழ்விற்கும் ஓர் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களில் உள்ளபுறநானூறு, பதிற்றுப்பத்து ஆகியவையும், பத்துப்பாட்டில் உள்ளஆற்றுப்படை இலக்கியங்களும் மதுரைக் காஞ்சியும் மேற்கண்ட புற இலக்கணப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டே இயற்றப்பட்டுள்ளன.

வெட்சித்திணை:



பழைய காலத்தில் பகை அரசனிடம் போர்செய்ய நினைக்கும் ஒருவன் போரின் முதல் கட்டமாகப் பகைஅரசனது பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்வான். இதுவெட்சித்திணை எனப்படும். வெட்சி வீரன் வெட்சிப் பூச் சூடி,போருக்குச் செல்வான்.


கரந்தைத்திணை: பகை அரசன் கவர்ந்து சென்ற பசுக்கூட்டங்களை அவற்றிற்கு உரியவன் மீட்டுவரச் செய்யும் போர்,கரந்தைத்திணை எனப்படும். கரந்தை வீரன் கரந்தைப் பூச் சூடி,போருக்குச் செல்வான்.

ஆநிரை மீட்கச் செல்லல்

வெட்சி வீரர்கள் கவர்ந்து சென்ற தமது ஆநிரையைக் கரந்தை வீரர் மீட்டு வருதல் பொருட்டுச் செல்வதைப் பற்றிக் கரந்தை அரவம், அதரிடைச் செலவு என்னும் இரு துறைகள் கூறுகின்றன(அதா் - வழி).


கரந்தை அரவம்

பறிகொடுத்த ஆநிரைகளை மீட்பதற்காக, மன்னனின் ஆணைப்படி மறவர் கூடுகின்றனர். அப்போது எழும் முழக்கம் ஆதலின் கரந்தை அரவம்எனப்பட்டது. அரவம் - ஒலி; ஓசை.

கொளுவின் பொருளும் கொளுவும்
தமது ஆநிரைகளை வெட்சியார் கைப்பற்றிய செய்தியை அரசன் பறையறைந்து தெரிவித்தான். அதனைக் கேட்டவுடனேயே கரந்தையார் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையை மேலும் தொடராமல் அப்படியே போட்டுவிட்டு விரைந்து ஓரிடத்தில் குழுமினர். குழுமிய அதனைக் கூறுவதுகரந்தை அரவம் எனப்பெறும்.

நிரைகோள் கேட்டுச் செய்தொழில் ஒழிய

விரைவனர் குழூஉம் வகைஉரைத் தன்று.
எடுத்துக்காட்டு வெண்பா:

கால்ஆர் கழலார்; கடும்சிலையார்; கைக்கொண்ட

வேலார்; வெருவந்த தோற்றத்தார்; - காலன்

கிளர்ந்தாலும் போல்வார்; கிணைப்பூசல் கேட்டே

உளர்ந்தார்; நிரைப்பெயர்வும் உண்டு.




வெண்பாவின் பொருள்

கரந்தை மறவர்கள், தமது காலிலே வீரக்கழலை உடையவர்கள்; கையிலே, கொடுமையை வெளிப்படுத்தும் வில்லை உடையவர்கள்; வேலினையும் கொண்டவர்கள்; தம்மைக் கண்டவரை அஞ்சவைக்கும் தோற்றப் பொலிவை உடையவர்கள்; கூற்றுவனாகிய எமன் வெகுண்டது போன்ற சினத்தை உடையவர்கள். இவர்கள், ‘பசுநிரையை வெட்சிமறவர் கவர்ந்து சென்றனர்’ என்ற செய்தியை அறிவிக்கும் தடாரியின் ஓசையைக் கேட்டதும் போருக்கு எழுந்தனர். ஆதலால், இவர்கள் வெட்சியார் கவர்ந்து சென்ற பசுவின் திரளை மீட்கக் கூடும்.

துறைப் பொருத்தம்

இதனால், நிரை மீட்கும் போரில் ஒரு பகுதியை உரைத்தமை புலனாகின்றது.


அதரிடைச் செலவு


அதர் - வழி; செலவு - செல்லுதல். நிரை மீட்சியில் இறங்கிய கரந்தையார், வெட்சி மறவர்கள் நிரையுடன் செல்லும் வழியிடைச் செல்வது பற்றிக் கூறுவதால், அதரிடைச் செலவு எனப் பெற்றது.


கொளுவின் பொருளும் கொளுவும்

தம்மால் போற்றப்படாத வெட்சி மறவர் தாம் கவர்ந்து சென்ற ஆநிரையோடும் போன வழியில் கரந்தையார் அவற்றை மீட்கும் பொருட்டுச் சென்றதைச் சொல்வது, அதரிடைச் செலவு என்னும் துறையாகும்.

ஆற்றார் ஒழியக் கூற்றெனச் சினைஇப்

போற்றார் போகிய நெறியிடை ஏகின்று

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar