"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Saturday, February 27, 2016

திருவண்ணாமலையில் யாதவர் சங்கமம் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் சனிக்கிழமை யாதவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே யாதவர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் வி.தியாகராஜன் தலைமை வகித்தார்.

திருவண்ணாமலையில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துகோனின் சிலையை அமைக்க வேண்டும். தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் பிற்படுத்தப்பட்ட யாதவ மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.

நாடாளுமன்ற, சட்டப்பேரவை, உள்ளாட்சி, கூட்டுறவுத் தேர்தலில் யாதவர்களுக்கு அரசியல் கட்சியினர் உரிய பங்கை அளிக்க வேண்டும். யாதவர் இளைஞர்கள், மாணவ - மாணவிகளுக்கு கல்விக் கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், யாதவர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Friday, February 26, 2016

பாராளுமன்றத்தில் வீரன் அழகு முத்துக்கோன் சிலை வைக்க வேண்டும்: கோகுல மக்கள் கட்சி மாநாட்டில் தீர்மானம்

கோகுல மக்கள் கட்சியின் வடக்கு மண்டல அரசியல் விழிப்புணர்வு மாநாடு காஞ்சீபுரத்தில் நடந்தது.

கோகுல மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எம்.வி.சேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு யாதவ மகா சபையின் தலைவர் எம்.கோபால கிருஷ்ணன், அகில இந்திய யாதவ மகாசபையின் துணை தலைவர் சோம் பிரகாஷ் யாதவ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

இந்திய வரலாற்றின் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனுக்கு உரிய கவுரவம் அளிக்கும் வகையில் தமிழக வரலாற்று பாட புத்தகத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை பாடமாக்க வேண்டும்.

டெல்லி–கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு அழகு முத்துக்கோன் பெயரை வைக்க வேண்டும்.

சுதந்திர போராட்ட தியாகி அழகு முத்துக்கோன் சிலையை பாராளுமன்ற வளாகத்தில் நிறுவ வேண்டும்.

விவசாயிகளுக்கு கரும்பு டன்னுக்கு ரூ.5000 வழங்க வேண்டும். ஆடு மேய்த்தல் தொழில் புரிபவர்களுடைய வாரிசுகளுக்கு ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக வழங்க வேண்டும்.

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீட வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் மாநில நிர்வாகிகள் எல்.வி.ஆதவன், துரை, சுரேந்தர்பாபு, கோவிந்த ராஜுலு, ராஜமாணிக்கம், அரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tuesday, February 23, 2016

கோகுல மக்கள் கட்சி வடக்கு மண்டல மாநாடு


















கோகுல மக்கள் கட்சி வடக்கு மண்டல மாநாடு தீர்மானம்






Monday, February 22, 2016

திருவண்ணாமலையில் யாதவர் சங்கமம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் அறப்போராட்டம்

சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.. 
வருகின்ற 26ம் தேதி வெள்ளிக்கிழமை யாதவர் சங்கமம் சார்பில் அண்ணன் திரு தியாகராஜன் Ex.vice chairman தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மாபெரும் அறப்போராட்டம் நடைபெற உள்ளது.. எனவே அனைத்து யாதவ சொந்தங்களும் வந்து கலந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.. 

இடம்:
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் அருகில்.
நேரம் காலை 10:00 மணி

யாதவர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு:தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை

யாதவர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு அளிப்போம் என தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் மதுரையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மாவீரன் அழகுமுத்துக்கோன் குரு பூஜை விழாவை 2000ஆம் ஆண்டு வரை மாநில அளவிலான அரசு விழாவாக தமிழக அரசு நடத்தி வந்தது. தற்போது, அது மாவட்ட அளவிலான விழாவாக நடத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் மாவீரன் அழகுமுத்துக்கோனின் ஆதரவாளர்கள் அதிகம் உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு குரு பூஜை விழாவை அரசு விழாவாக தொடர்ந்து நடத்த வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் யாதவர்களுக்கு 9 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாவீரன் அழகுமுத்துக்கோனின் சிலையை அனைத்து மாவட்டங்களிலும் நிறுவ வேண்டும். பள்ளி வரலாற்று பாடங்களில் அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்குத் தான் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஆதரவு அளிப்போம் என்றார்.

Friday, February 19, 2016

பிப்.21-இல் கோகுல மக்கள் கட்சி மாநாடு

காஞ்சிபுரத்தில் கோகுலம் மக்கள் கட்சியின் வடக்கு மண்டல மாநாடு வரும் பிப். 21-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து இக் கட்சியின் தலைவர் எம்.வி.சேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கோகுல மக்கள் கட்சியின் முதல் மாநாடு காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ்அம்பியில் நடைபெறுகிறது. இம் மாநாட்டில் அகில இந்திய யாதவ மகா சபையின் துணைத் தலைவர் சோம்பிரகாஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த பலர் இதில் பங்கேற்கின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இம் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.

Thursday, February 18, 2016

தேர்தல் ஆணையத்திடம் சைக்கிள் சின்னம் கேட்டு சமாஜ்வாடி கட்சி கடிதம்: தமிழக தலைவர் தகவல்

சமாஜ்வாடி கட்சியின் முதன்மை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக சட்டசபை தேர்தலில் கட்சி கொள்கை, கோட்பாடுகளுக்கு உட்பட்டு கூட்டணிக்கு அழைக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது என்றும் தகுந்த கூட்டணி அமையாத பட்சத்தில் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ள 100 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவது என்று தமிழக தலைவர் இளங்கோ யாதவ் முடிவு செய்துள்ளார்.

போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் 22–ந்தேதி முதல் 10 நாட்கள் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் பெறப்படும். சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னத்தில் அகில இந்திய தலைமையின் ஒப்புதலுடன் போட்டியிடுவோம். 


இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கட்சி தலைமை கடிதம் மூலம் தெரிவித்து உள்ளது. சைக்கிள் சின்னம் தமிழ்நாட்டில் சமாஜ்வாடி கட்சிக்கு மட்டுமே ஒதுக்கப்படும். வேறு எந்த தமிழக அரசியல் கட்சிக்கும் ஒதுக்கப்படலாம் என்கிற செய்தி தவறானது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Saturday, February 6, 2016

யாதவர் பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் கூட்டம்

யாதவர் பண்பாட்டுக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் எஸ். சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். தென்மண்டல யாதவர் சங்கத்தின் தலைவர் ராணி ராமகிருஷ்ணன், செயலர் ஏ. ஆவுடையப்பன், யாதவர் கல்வி அறக்கட்டளைத் தலைவர் கே. தங்கவேல்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், "யாதவர் பண்பாட்டுக் கழக பொன்விழாவை ஆகஸ்ட் மாதம் நடத்துவது. பொன்விழா சிறப்பு மலர் வெளியிடுவது. 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற சமுதாய மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுவது' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், முக்கிய பிரமுகர்கள் அ. முத்துக்கிருஷ்ணன், சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், காந்திராஜன், வேலுதாஸ், வேல்தாஸ், முத்துசாமி, வெங்கடேஷ், துணைச் செயலர் ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். துணைத் தலைவர் சுப்பையா வரவேற்றார். பொருளாளர் கே. பாவநாசம் நன்றி கூறினார்.

Tuesday, February 2, 2016

10 முதல் 12 தொகுதிகளில் யாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்தும் கட்சிக்கு ஆதரவு: தமிழ்நாடு யாதவ மகாசபை

தமிழக யாதவ மகாசபையின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. இதில், மாநில பொதுச் செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் எத்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், யாதவ மகாசபை தலைவர் கோபாலகிருஷ்ணன் பேசும்போது, “தமிழகத்தில், யாதவ சமுதாயம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும், 80 லட்சம் முதல் ஒரு கோடி யாதவ சமூக வாக்காளர்கள் உள்ளனர்.


நம்முடைய சமூகத்துக்கு அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் அளிக்காததால் மிகவும் பின் தங்கிய நிலைக்கு யாதவ சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது. யாதவர்களை ஒருங்கிணைக்கும் வகையில், மாவட்டம் தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.


பிப்ரவரி மாதத்தில் விழுப்புரத்தில் யாதவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடத்த உள்ளோம். இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான யாதவர்கள் கலந்து கொள்வர்.


மாநாட்டில் சட்டசபை தேர்தலில் யாதவர்களின் ஆதரவு யாருக்கு என்பதை முடிவு செய்ய உள்ளோம். தமிழகத்தில் யாதவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வரும் சட்டசபை தேர்தலில், 10 முதல் 12 தொகுதிகளில் யாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்தும் கட்சிக்கு, யாதவ மகா சபையின் ஆதரவு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar