"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Saturday, July 29, 2017

கீதாரிகள் : ஆடு ஊடாடாம காடு விளையாதும்பாக !

தஞ்சையை ஒட்டிய கிராமத்தில்
ஆட்டுக் கிடை போட்டிருந்த பாஸ்கரன்
ஆட்ட தவிர எனக்கு வேற தொழிலும் தெரியாது. காலங்காலமா செஞ்ச தொழில விட்டுபோட்டு இந்த வயசுக்கு மேல எங்குட்டு போயி சம்பாரிக்க முடியும்.


“வரப்பே தலையன வயக்காடே பஞ்சுமெத்த” இதுதேன் கீதாரிங்க வாழ்க்க. இதுக்கு மேல ஒன்னும் சொல்ல தோணலிங்களே” என்று ஒற்றை வரியில் கீதாரிகளின் வாழ்க்கையை சுருக்கினார் தஞ்சையை ஒட்டிய கிராமத்தில் ஆட்டுக் கிடை போட்டிருந்த பாஸ்கரன்.


ஐயா! நீங்க சொல்றது ஒன்னும் விளங்கலையே?


சிவகங்கை மாவட்டம் இளையாங்குடிதே சொந்த ஊரு. எங்க ஊர ஒட்டிய கிராமங்கள்ல கோனார் சாதிக்காரவுக அதிகம். அவக தொழிலே ஆடு மாடு மேய்கிறதுதேங். கோடையில ஆறு மாசகாலம் தஞ்சாவூரு மாவட்ட பகுதிய சுத்தி உள்ள நெலத்துல ஆடு மாடு மேய்ப்பாக. மீதி ஆறு மாசம் புதுக்கோட்டக் காட்டுப் பகுதிக்கு போயிடுவாக. ஆடு மாடு இல்லாதவுக, காணி(அளவு) காடு வச்சுருக்கவுக சிலபேரு ஊரோட இருப்பாக. ஊருக்கு தேவையிண்டா மட்டுந்தே போவோம். அதாவது சொந்தமுண்டு சொல்லிக்க ஊரு இருக்கும் ஆனா குடும்பம் நடத்துறது என்னவோ வெளியூருலதேன்.


ஏனுங்கையா ஒரே எடத்துல மேய்க்காமெ ஆறு மாச காலத்துக்கு ஒருக்க எடத்தை மாத்துரிங்க?


எங்க ஊரு பக்கம் வறட்சி அதிகம். ஆடு மாடுக மேய்க்கறதுக்கான காடு கழனி கெடையாது. ஆத்துப் பாசன பகுதில அறுப்பு முடிஞ்சு மறுக்க ஆத்துல தண்ணி வரும்வர கழனிக சும்மாத்தேன் கெடக்கும். மேச்சலுங்கு தோதுவா நெலமும் ஆடு மாடுக குடிக்க குளம் குட்டையும் இருக்கும். அங்கனக்குள்ளையே மேச்சு வெள்ளாமெ நெலத்துக்கு கெடையும் கட்டுவாக. ஆத்துல தண்ணி வந்து வெள்ளாமெ தொடங்கிச்சாங்காட்டி மந்தைய புதுக்கோட்டைக்கி ஓட்டிடுவாக. அங்கெ அரசு பாரஸ்ட் மலைக்காடு இருக்கு. எத்தன மழை பேஞ்சாலும் சேறு சகதி இல்லாம மேச்சல் இருக்கும். பகல் பொழுது மலையில மேச்சுட்டு ராத்திரியானா கீழ ஓட்டியாத்துருவாக. (பருவமழை காலத்தில் மலை பகுதியும் கோடை காலத்தில் சமவெளி பகுதியும் கிடை மந்தை கால்நடைகளுக்கான மேய்ச்சல் பகுதியாகும்.)


ஆடு மேச்சு கிடை கட்டும் உங்க தொழில் முன்னைக்கி இப்ப எப்படி இருக்கு?


என்னோட எளவட்ட காலத்துல ஒத்தாளு 500 ஆடுகளோட ஊடாடுவே. அப்பெல்லாம் அறுப்பு முடிஞ்சு எக்கண்டமும் சும்மாத்தேங் கெடக்கும். என்னப்போல முப்பது கீதாரி குடும்பம் இந்த ஊருல தங்கி ஆடு கெட போடுவாக. அம்புட்டு ஆடுகளுக்கு மேச்சலுக்கு எடமிருக்கும். இருவது வருசமாத்தேன் இங்குட்டு போரு (ஆழ்துளை கிணறு) போட்டுட்டாக. திட்டுத்திட்டா வெவசாயம் செஞ்சுருக்காக. பயிறுக்கு போகாமெ ஆடுகள மடக்கி சோலி பாக்க வாய்க்கல. எங்குட்டு திருப்புனாலும் ஊரச் சுத்தி இதே நெலமதேன்.

ஆடுகளுக்கு முன்னப்போல மேச்ச நெலமுண்டு ஒன்னு இல்லிங்க. தண்ணி இல்லாமெ ஆடுக எறப்பு வாங்குது. குளம் குட்ட எங்குட்டு திரும்புனாலும் வறண்டு கெடக்கு. ஆடு மேஞ்சு முடிச்சு பட்டிக்கி திருப்பியாந்தா விடிய முட்டும் படுத்துக்கும். இப்ப அண்டையில உள்ள பயிருக்கு போயிருதுக. பொழப்புக்கு வந்த எடத்துல கீதாரி பயக வெள்ளாமைய அழிச்சுபுட்டாகன்னு ஒரு சேதி வந்துரப்படாதுல்ல. அதுக்காக ஆடுகள சுத்தி இரும்பு கம்பி அடிச்சி வல(லை) கட்டனும். பாலூட்டு குட்டிகள வெய்யிலு அண்டாமெ பாதுகாக்க கூடாரம், நாங்க படுக்க கட்டிலு இதையெல்லாம் அடுத்த கெடகட்டுற எடத்துக்கு தூக்கிட்டு போக வண்டி செலவுன்னு….. ரொம்பவும் செரமமாத்தே இருக்குங்க.

ஐநூறு ஆடு நின்ன எடத்துல 250 ஆடுகதே இருக்கு. முப்பது குடும்பம் வந்த எடத்துல 4 குடும்பந்தே வந்துருக்காக. 250 ஆட்டுக்கு 7,000 ரூபா கூலி குடுத்து ஒரு மேச்ச ஆளு வச்சுருக்கேன். இது அம்புட்டும் சொந்த ஆடுக அதுனால கூலியாள வச்சு மேய்க்கேன். பத்து இருவது ஆடு வச்சுருக்கவுகளும், மேச்சலுக்கு வர்ர ஊருல சிலபேரும் எங்கக்கிட்ட வாரத்துக்கு ஓட்டி விடுவாக. கூலி கெடையாது ஆடு ரெண்டு குட்டி போட்டுச்சாங்காட்டி ஒன்னு நமக்கு. ஒன்னு அவுகளுக்கு.

ஆடு வளர்ப்புல லாபமா? கிடை கட்டுறதுல லாபமா?


“ஆடு ஊடாடாமே காடு விளையாதும்பாக”. ஆட்டுக் கெட உரந்தே ஒசந்ததா இருந்தது ஒரு காலம். இப்ப ரசாயன ஒரத்த சக்கரக் கணக்கா வயக்காட்டுல அள்ளி கொட்டுறாக. ஆட்டுப் புளுக்க மூத்தரத்தோட அருமெயெல்லாம் அத்துப் போச்சு. மணலு, வண்டலு, அதிகம் உள்ள கழனிக்கி ஆடு மாடு ஒரமும், கிளாரு மண்ணுக்கு (சுண்ணாம்பு மண்) வாத்து ஒரமும் இடுவாக. நெலத்துக்கு தக்கன வெதையும் ஒரமும் நம்மகிட்டேயே இருந்துச்சு. இப்ப வெதையோட சேத்து ஒரத்தையும் இறக்குமதி பன்றாக. பூச்சி மருந்து கள(ளை)க் கொல்லின்னு, கண்டதும் போட்டாத்தே அதுவும் வெளையுது.


“ஆடு காப்பணம், புழுக்க முக்காப் பணம்னு” சொன்னதெல்லாம் அந்த காலம். இப்ப ஆரும் பெருசா கெட கட்டுவாக கெடையாது. போன வருசம் 250 ஆடு ஒருநா(ள்) கெட கட்ட 300 ரூபா வாங்குனேன். இந்த வருசம் மழத்தண்ணி இல்லன்னு 250 வாங்குரேன். ஒருநா வருமானம் ஒரு வார வெஞ்சனம்(காய்) வாங்க பத்தமாட்டேங்குது. பொறவு மேச்சகாரனுக்கு டீ, சாப்பாடு, வெத்தலபாக்கு, வாரத்துக்கொருக்க பாட்லு இதுக்கெ கெடகூலி பத்தாது. ஆட்டுல நாலு காசு வந்தாத்தே உண்டு. ஒரு ஆடு அஞ்சு அல்லது ஆறு ஆயிரத்துக்கு போகும். வருசத்துக்கு ரெண்டு குட்டி போடும். அத நல்லா மேச்சு குட்டிக்கு பால்குடுத்தா ஆறு மாசத்துல வளந்துரும். இதுலதே குடும்பம் படிப்பு கல்யாணம் எல்லா செலவும்.


கீதாரிகள் ஆடுங்களோட ஊர் ஊரா போறதா சொல்றீங்க, பிள்ளைகள எப்படி படிக்க வைக்கிறீங்க?

எங்க தொழிலே ஊரு ஊரா போறதுதேன். எங்குட்டு பிள்ளைகள ஒரு நெலையா படிக்க வைக்கிறது. ஆடு மாடுகள வாரத்துக்கு மேய்க்காமெ சொந்தமா வச்சு பண்ணையம் பாத்தவுக பிள்ளைங்க காசு, படிப்பு, வேலையின்னு இருக்காக. எங்கப்போல சிறுவ ஆடு வச்சுருக்கும் கோனாருக ஆசப்பட்டு பிள்ளைகள படிக்க வச்சாலும் பள்ளிக்கூடத்த தாண்ட முடியல. கீதாரி தொழிலும் சரிஞ்சு போச்சு. மேல படிக்க முடியாமே டிரைவரு, கண்டெக்டருன்னு வேலைக்கி போறாக.

இந்த ஊருல முப்பது வருசமா எனக்கு பழக்கம். அண்ண வீட்டு தோப்புலதே கூடாரம் போட்டு தங்கிக்கிடுதேன். அம்மி, ஒரலுன்னு சமையலுக்கு தேவையானத கொடுப்பாக. காசு பணமெல்லாம் அவக கிட்டதே குடுத்து வச்சுருப்போம். தாயா பிள்ளையா பழகிகிடுதொம். எங்க மாமா செத்தப்ப இந்த அண்ணெந்தே சாவு கோடி போட்டாக. எங்க வீட்டு நல்லது கெட்டது அவுக இல்லாம நடக்காது, அவுக வீட்டு நல்லது கெட்டது நாங்க இல்லாம நடக்காது.

அந்த பழக்கத்துல பெரியவெ(ன்) இங்கதே ஆறு வருசமா படிக்கிறேன். இந்த வருசத்தோட படிப்பு முடியிது. நாங்க இருக்குற ஆறு மாசம் எங்க கூட இருப்பேன். நாங்க புதுக்கோட்ட பக்கம் போனபொறவு இவக வீட்டுல தங்கிக்கிருவேன். அவுக பிள்ளப்போல பாத்துக்கிருவாக. சின்னவென் ஊருல இருக்கேன். எங்க காலத்தோட இந்த தொழிலு முடிஞ்சுரும் பிள்ளைங்க இனி செய்யாதுக.

ஊருல யாரு பையன பாத்துப்பாங்க? ஆடுங்கள தவிர எதுனா சொத்து இருக்குங்களாய்யா?

காக்காணி நெலமிருக்கு. அத நம்பி நாலு பேரு என்னத்த சாப்புட முடியும். ஆட்ட தவிர எனக்கு வேற தொழிலும் தெரியாது. காலங்காலமா செஞ்ச தொழில விட்டுபோட்டு இந்த வயசுக்கு மேல எங்குட்டு போயி சம்பாரிக்க முடியும். இருக்கவுகதேன் ஒத்து உணர்ந்து வேலைய பிரிச்சுக்குறனும். எங்கக்கா ஊருல எம்பையனையும் நெலத்தையும் பாத்துக்குறாக. நா அவுக ஆடுகள பாத்துகிடுதேன். ஆடுக நெறையா நின்னா தனிதனியா கெட போடுவாக. ஆடுக கம்மிங்கறதால சேந்து மேச்சுகிடுதோம்.




ஆட்டு தலையில கலர் கோடு போட்டுருக்கே வேற கிடை ஆட்டோட சேந்துருச்சின்னா கண்டுபிடிக்கற அடையாளமா?

வெய்யிலு காலம் நோயி வருமுண்டு மருந்து குடுத்துருக்கேன். மருந்து குடுத்தது எந்த ஆடுண்டு தெரிஞ்சுக்க அடையாளம் போட்டுருக்கே. மத்த கீதாரி ஆட்டோட கலந்து மேய்க்க மாட்டோம். எல்லாருமே தனிச்சுத்தேன் விடுவோம்.

செம்மறியாட்டு கூட்டத்துல நாளு வெள்ளாடும் நிக்குதே எதுக்குங்கையா?

செம்மறியாடு சாஞ்சா சாஞ்சபக்கம் போகும். போன வழி திரும்பி வரத்தெரியாது. வெள்ளாடுதே வழிகாட்டி ஆடுக. அதுக்கு அறிவு சாஸ்த்தி பயிரு பச்சைக்கி போனா சத்தம் போட்டா திரும்பிரும். பாம்பு, விலங்கு எது வந்தாலும் உசாராயி சத்தம் கொடுக்கும். இதுகளுக்கு ஒன்னு தெரியாது. வெள்ளாடு இல்லாமெ செம்மறியாட மேச்சலுக்கு ஓட்ட மாட்டாக.

பாம்பு, விலங்கு வந்தா என்ன செய்வீங்க?

கோனா(ன்) கோலெடுக்கும் போதே வெசமருந்து கூடவே எடுத்துட்டு போவான்ம்பாக. பாம்பு தீண்டிட்டா ஆடு கத்தும் அத பாத்து கால கீரிவிட்டு மருந்து கொடுப்போம். ஆடுகள கூட்டமா பாக்குற காட்டு வெலங்குக தானா ஒதுங்கி போயிடும். வாகனத்துல அடிபட்டா எங்க வீட்டுக்காரம்மா உப்புக்கண்டம் போட்ருவாக.

இரவு நேரத்துல ஆடுகளோட தனியா படுத்துருப்பிங்க திருட்டு பயம் எதுவும் இருக்குங்களா?

ஆடு களவாடுறது உண்டுதேன். மோட்டார் பைக்குல ரெண்டு ஆட்ட பொத்தி போட்டுகிட்டு போயிருவாக. ஆடு புடிக்கிறாகன்னு தெரிஞ்சாலும் எதுவும் செய்ய முடியாது. ஆயிதத்தோட அஞ்சாறு பேரு வந்துருப்பே தனி ஆளா நிண்டமுட்டா போட்டு தள்ளிருவானுக. எங்களுக்கு ஆடு மேய்ப்பர் யாதவ சங்கம் இருக்கு. ஆடுதுறை வரைக்கும் எங்க ஆளுக பட்டி போட்டு ஆடு மேய்க்கிறாக, அப்புடி எங்க ஆளுக மூலியமா கேசு குடுத்து கண்டுபிடிச்சுகிடுவோம்.

ஒரு நாளு வருசத்துக்கு முன்னால இங்குட்டு(தஞ்சை) உள்ள கள்ளர்மாரு(கள்ளர்) சாதிக்காறவுக ஆட்ட களவாண்டுபுட்டாக. புதுக்கோட்ட பக்கந்தே வெள்ளாமெ வெளச்ச இல்லாம களவாடுவாக. இந்த பக்கமும் அப்படி செஞ்சுபுட்டாக. ஆட்டுக்காற சித்தப்பும், மேச்சக்கார பயலும் படுத்துருந்தாக. வண்டி வச்சு ஆடுகள ஏத்துனத பாத்துட்டு கையில இருந்த அருவாள வீசிபுட்டாரு கீதாரி. காலு நரம்புல பட்டு சுருட்டிகிட்டு விழுந்துட்டாங் களவாணிப்பய. பொறவு மந்திரி வைத்திலிங்கத்துக்கு(அ.தி.மு.க) வேண்டப்பட்டவன்னு சொல்லி கேசல்லாம் போடக்கூடாதுன்னு சொல்லிபுட்டாக.

இந்த ஊருக்காரவங்க உங்கள மரியாதையா நடத்துவாங்களா? கூலியெல்லாம் சரியா தருவாங்களா?

கோடையில கெட போட்டா, மறுக்க ஆத்துல தண்ணி வந்து வெவசாயம் பாத்து அறுப்பு முடிஞ்சுதே நெல்ல கெடகூலியா குடுப்பாக. கிட்டத்தட்ட ஒரு வருசம் ஓடிடும். ஆனா மொறையா குடுத்துருவாக. இப்பல்லாம் ஒடனே பணமா குடுத்துருவாக. என்ன ஒன்னு பத்து கெட போட்ட எடத்துல ஒரு கெடைக்கி உண்டான கூலிய தள்ளிக்க கீதாரிம்பாக. தாயா பிள்ளையா பழகிட்டு மறுக்க முடியாது. திருவிழா வருது உங்க படியா ஏதாவது கொடுங்கண்டு உரிமையா கேப்பாக. இந்த ஊருல ஆறு மாசம் ஆடு மேச்சுகிடுதோ நமக்கும் பங்குண்டுன்னு கையில கெடச்சத குடுப்பேன். சாமிக்கி குடுத்தாதானுங்களே மழதண்ணி பேஞ்சு பயிர் பச்ச மொழைக்கும் ஆட்டுக்கு மேச்சலிருக்கும்.

சாமிக்கு காசு கொடுத்தும் மழை தண்ணி இல்லாமெ ஊரே வறண்டு கெடக்கே சாமி ஏமாத்திடுச்சாய்யா?

ஆமான்னும் சொல்லாமல் இல்லைன்னும் சொல்லாமல் அழகாக சிரித்தார்.

– நன்றி வினவு
http://www.vinavu.com/2017/06/29/life-of-ilayangudi-sheep-farmers-in-thanjavur/

திருச்செந்தூர் சுடலைமாட சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா

திருச்செந்தூர் சுடலைமாடசுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் மேலத்தெரு யாதவ சமுதாய சுடலைமாடசுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா நேற்று காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 10 மணிக்கு கும்ப பூஜையை தொடர்ந்து 11 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனையும் பின்னர் சுவாமிக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் மகாஅபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து பகல் 11.45 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. வருஷாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மேலத்தெரு யாதவ மகாசபை மற்றும் கொடை விழா கமிட்டியினர் உள்பட பலர் செய்திருந்தனர்.

இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் அழகுமுத்து கோன்-முனைவர் கே.கருணாகரப்பாண்டின்வரலாற்று ஆய்வாளர்

கணக்கிட முடியாத உயிர்களை களப்பலியாக்கித்தான் நம் நாடு சுதந்திரம் அடைந்தது. பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன், நெற்கட்டும்சேவல் பூலித்தேவன் ஆகியோர் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்கு முன்பே, ஆங்கிலேயர்களை எதிர்த்து தன் உயிரை முதல் பலியாக்கி இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் கட்டாளங்குளம் அழகுமுத்து கோன்.கோவில்பட்டி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் இருந்து வலதுபுறமாக 5 கி.மீ., தொலைவில் கட்டாளங்குளம் கிராமம் உள்ளது. இங்கு அழகுமுத்து கோன் வாழ்ந்த அரண்மனை சிதலமடைந்து உள்ளது. அழகுமுத்து கோனின் வீர வரலாறு ஏட்டிலே புதைந்து காலப் போக்கில் இளைய தலைமுறைக்கு ஏதும் தெரியாமல் போய் விடக்கூடாது என்பதற்காக, அந்த மாவீரன் பற்றி 'வம்ச மணி தீபிகை' என்ற பழம்பெரும் வரலாற்று நுால் எடுத்துக் கூறியுள்ளது. இந்த நுாலில் கிடைத்த அரிய செய்திகளை தொகுத்து எட்டையபுரம் எழுத்தாளர் இளசை ராஜாமணி, 'சுதந்திர வீரன் அழகுமுத்துயாதவ்' என்ற புத்தகத்தின் வழியாக முதல் முதலில் வெளிக்கொணர்ந்தார்.
தளபதி அழகுமுத்து கோன் :'வம்ச மணி தீபிகை' புத்தகத்தின் கூற்றுப்படி, அழகுமுத்து கோனுக்கு 'சேர்வைக்காரன்' என்ற பட்டம் உண்டு. 'சேர்வைக்காரன்' என்பது எட்டையபுரம் மன்னரின் படையின் முக்கிய தளபதிகளுக்கு கொடுக்கும் சிறப்பு பட்டம். மதுரையிலிருந்து அழகப்பன் சேர்வைக்காரன் (அழகுமுத்து கோன்), தன் உற்றார், உறவினர்களுடன் புறப்பட்டு செமப்புதுார் வந்தார். அங்கு மாப்பிள்ளை வல்லேரு நாயக்கர் உதவியால் எட்டையபுரம் சென்றார். எட்டையபுரத்தை ஆண்ட மன்னர் ஜெகவீரராம கெச்சில எட்டப்ப நாயக்கர், அழகுமுத்து கோனை எட்டையபுரத்தின் முக்கிய தளபதியாக நியமித்தார்.
ஒடுங்கிய எதிரிகள் :அழகுமுத்து கோன், அவருடன் வந்த வீரர்கள் குடியேற வசதியாக எட்டையபுரம் மன்னரால் கட்டாளங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள சில கிராமங்களும் வழங்கப்பட்டன. கிட்டத்தட்ட 500 பொன் வருமானம் உள்ள சோழாபுரம், வாலாம்பட்டி, மார்த்தாண்டம்பட்டி ஆகிய கிராமங்களும் கொடுக்கப்பட்டன. அழகுமுத்து கோன் சிறந்த போர் திறமையுள்ள வீரனாகவும் எட்டப்ப மன்னருக்கு நேர்மையுடன் கூடிய சேர்வைக்காரனாகவும் பணியாற்றினார்.
எட்டையபுரத்திலும் அதனை சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூலிக்க, ஆங்கிலேயத் தளபதி அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் (கான்சாகிப்) வந்தனர். இதை கேள்விப்பட்ட எட்டையபுரம் மன்னர் உடனே ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். மன்னருக்கு ஆலோசனை சொல்லக்கூடிய கூட்டத்தில் இளவரசர் குமார எட்டு, அமைச்சர் ராமநாதபிள்ளை, அழகுமுத்து கோன், குமார அழகுமுத்து போன்றோர் இருந்தனர். 'ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டக்கூடாது; வியாபாரம் செய்ய வந்த கும்பினியர்களுக்கு வரி வசூலிக்க ஏது உரிமை?' என கேள்வி கேட்டு கான்சாகிப்பிற்கு கடிதம் எழுதினார் மன்னர்.
போர் முரசு ஒலித்தது :கடிதத்தைக் கண்ட கான்சாகிப் தன் படையுடன், பீரங்கி படையையும் சேர்த்து கொண்டு எட்டையபுரத்தை தாக்க தொடங்கினான். வீரன் அழகுமுத்து கோன், எட்டப்ப மன்னரையும், மக்களையும் பாதுகாப்பாக இருக்க வைத்து, பல இடங்களில் அலைந்து மன்னர் எட்டப்பர் படைக்கு ஆள் சேர்த்தார். மன்னர் படையில் சேர்ந்த மக்களை அழகுமுத்து கோன் பெத்தநாயக்கனுார் கோட்டையில் இரவு தங்க வைத்தார். மறுநாள் மாவேலியோடை என்ற இடத்திற்கு அழைத்து செல்ல நினைத்து இரவு துாங்கினர். எட்டையபுரத்தை முற்றுகையிட்ட கான்சாகிப், அங்கு யாரும் இல்லாததால் எட்டப்பன் வழிவந்த குருமலைத்துரை என்பவரை மன்னராக எட்டையபுரத்திற்கு நியமித்தான்.
தனது பலமிக்க பெரும் படையை ஏவி பெத்தநாயக்கனுார்கோட்டையை தாக்கி பல பேரை கொன்று குவித்தான் கான்சாகிப். எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலை குலையாத அழகுமுத்து கோன், துணிந்து கான்சாகிப்பை எதிர்த்து போரிட்டார். இதை 'சேர்வைக்காரர் சண்டை கும்மி' என்ற பாடல் சொல்கிறது.
''கட்ட மிகுந்திடம்கட்டாலங்குளம்அழகு முத்து சேருவைகாரன்அவன் கோட்டை பெத்தஊரிலும் தானுமேகொற்றவன் காக்கவேசண்டை செய்தான்வீராதி வீரரும்சூராதி சூரரும்வெங்கல கைகளைதானிழந்தார்மன்னாதி மன்னரைமார் காத்து நின்றமுத்து மாணிக்க சேர்வையும்மாய்ந்து விட்டார்பரிமேல் ஏறிரண கள மேவியபச்சைமால் சேர்வையும்மாண்டுவிட்டான்''என்ற இப்பாடல் அழகாக சொல்கிறது.அழகுமுத்து கோன் கைது இந்த கடுமையான குழப்பத்தில் சிக்கி மன்னர் படைகள் சிதறுண்டன. அழகுமுத்து கோன், அவனோடு இணைந்து கும்பினி படையை எதிர்த்தவர்களையும் கைது செய்தான் கான்சாகிப். கும்பினி படையை எதிர்த்ததற்காக எட்டப்ப மன்னன் படையில் உள்ளவர்களின் வலது கைகளை வெட்டினான் கான்சாகிப். 
கும்பினி படைக்கு எதிராக மக்கள் செயல்பட முக்கிய காரண கர்த்தாக்களான அழகுமுத்து கோன் உட்பட நால்வரை நடுக்காட்டுச்சீமை என்ற இடத்திற்கு கொண்டு சென்று, பீரங்கியின் வாயில் அனைவரையும் கட்டி வைத்து பீரங்கியால் சுட்டபோது, இவர்களின் உடல் துண்டு துண்டாக சிதறியது. நடுக்காட்டு பீரங்கி மேட்டிலிருந்த கல்வெட்டு வாயிலாக இது தெரிய வந்தது என சுபாஷ்சேர்வை யாதவ், 'முதல் முழக்கமிட்ட மாவீரன் அழகுமுத்து கோன்' என்ற புத்தகத்தில் கூறுகிறார். 
கி.பி. 1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய இந்த விடுதலை போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற முதல் விடுதலைப் போராகும்.சுடப்பட்டு சிதறிய அழகுமுத்துக்கோன் உடல் துண்டுகள் ஒரு நார் பெட்டியில் வைக்கப்பெற்று, எட்டையபுரம் அருகில் உள்ள சோழாபுரம் கண்மாய் கரையில் எரியூட்டப்பட்டது. அங்கு வீர மரணம் அடைந்தவர்களுக்கு அக்கால வழக்கப்படி, ஒரு நடுகல் நடப்பட்டு, ஆண்டு தோறும் ஆவணி 1ம் தேதி கட்டாளங்குளம் மக்கள், அழகுமுத்துக்கோனுக்கு அஞ்சலி செலுத்தி வருவதாக கள ஆய்வின் போது கட்டாளங்குளம் ஓய்வு தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் பதிவு செய்துள்ளார்.
கட்டாளங்குளத்தில் தடயங்கள் கள ஆய்வின்போது சிதிலமடைந்து இருக்கும் அழகுமுத்து கோன் அரண்மனை, அழகுமுத்து கோன் பயன்படுத்திய மூன்று வாள், ஒரு குத்து விளக்கு, சிதைந்த நிலையில் உள்ள ஒரு வெண்கொற்றக்குடை, வாரிசுகளில் ஒருவரான துரைசாமி யாதவ் வரைந்த அழகுமுத்து கோன் ஓவியம் மட்டுமே எஞ்சிய தடயங்களாக உள்ளன. இவைகளை கட்டாளங்குளம் ராமச்சந்திரன் பாதுகாத்து வருகிறார்.
தமிழக அரசு, வீரன் அழகுமுத்து கோனுக்கு அழகான மணி மண்டபம் கட்டியுள்ளது. கட்டாளங்குளத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். அழகுமுத்துக்கோன் பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள், கும்மிப்பாடல்கள் போன்றவை காலமும், கரையானும் அழித்து விடும் முன் பாதுகாக்கப்பட வேண்டும்.

- முனைவர் கே.கருணாகரப்பாண்டியன்வரலாற்று ஆய்வாளர்மதுரை. 98421 64097

Saturday, July 15, 2017

யாதவ மகா சபை சார்பில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை

யாதவ மகா சபை சார்பில் வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய சுதந்திரத்துக்கு வித்திட்ட முதல் மாவீரன் வீரன் அழகு முத்துக்கோனுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. முன்னதாக, தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானம் அருகில் இருந்து ஊர்வலமாக யாதவ மகா சபையினர் வந்தனர். இந்த ஊர்வலம் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் முடிவடைந்தது. 

பின்னர், அங்குள்ள வீரன் அழகு முத்துகோன் சிலைக்கு எம்.கோபாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அமைப்பாளர் ேக.ஜோதிலிங்கம், கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் கே.எத்திராஜ், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் துணை தலைவர்கள் கொம்பூதி செல்வராஜ், பழனி, சேகர், பூவை சங்கர், ராமதாஸ் உள்ளிட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tuesday, July 11, 2017

கட்டாளங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி மாவட்டம், கட்டாளங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அழகுமுத்துக் கோனுக்கு மரியாதை செலுத்த கட்டாலங்குளம் சென்ற தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவிற்க்கு தூத்துகுடி விமானநிலையத்திலிருந்து கட்டாலங்குளம் மணிமண்டபம் வரை இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தொண்டர்களும் நிர்வாகிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.





மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு தி. தேவநாதன் யாதவ் மரியாதை




மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் நிறுவனத்தலைவர் டாக்டர். தி. தேவநாதன் யாதவ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

யாதவ் மக்கள் முன்னேற்றம் அடைய தனி நலவாரியம் அமைக்க வேண்டும்: கோகுல மக்கள் கட்சி கோரிக்கை

சுதந்திர போராட்ட அழகுமுத்துக்கோனின் குரு பூஜையை முன்னிட்டு, எழும்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு நேற்று கோகுல மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எம்.வி.சேகர் தலைமையில், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் எம்.மோகன் முன்னிலையில் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் நிருபர்களிடம் கூறியதாவது: 
இந்திய முதல் சுதந்திர போராட்ட அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாறை இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மத்திய-மாநில அரசின் பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும். அழகுமுத்துக்கோனை பீரங்கி வாயிலில் நிறுத்தி குண்டுகளால் சுடப்பட்ட இடத்தில் இன்றைய சமுதாய மக்களுக்கும் தெரியும் வகையில் தமிழக அரசு நினைவு மண்டபம் கட்ட வேண்டும். 

விவசாயம் இல்லாமல், நீர்வளம் இல்லாததால் மேய்ச்சலுக்கான இடங்களை அரசாங்கம் பாதுகாத்து, மானிய விலையில் ஆடு, மாடுகளை கொடுத்து யாதவ மக்கள் முன்னேற்ற் அடைய தமிழக அரசு தனி நல வாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். டெல்லி முதல் கன்னியாகுமரி வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் அல்லது திருச்சி விமான நிலையத்திற்கு அழகுமுத்துக்கோன் பெயர் வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைய சமுதாயத்தினர் நலன் கருதி மதுபான விற்பனையை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.







அழகு முத்துக்கோன் 260–வது நினைவு தினம்: விடுதலை போராட்ட வீரர்களின் வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

அழகு முத்துக்கோன் 259–வது நினைவு தினத்தையொட்டி நடந்த குருபூஜை விழாவில், ‘‘விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும்’’, என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

குருபூஜை விழா

சுதந்திர போராட்ட வீரன் அழகு முத்துக்கோன் 259–வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு குருபூஜை விழா நடத்தப்பட்டது. விழாவுக்கு, அமைப்பின் நிறுவனர்–தலைவர் தி.தேவநாதன் யாதவ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆர்.குணசீலன், தேர்தல் பிரிவு செயலாளர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அவருடன் இல.கணேசன், கரு.நாகராஜன், சென்னை சி.ராஜா உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தேசிய பார்வர்டு பிளாக் நிறுவன தலைவர் பி.டி.அரசகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். குருபூஜையையொட்டி, அழகு முத்துக்கோன் உருவசிலைக்கு மலர் மரியாதை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் வீர முழக்கமும், விடுதலையை பேணிக்காப்போம் என்ற உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

விடுதலை வீரர்களின் வாழ்க்கை வரலாறு

இதனைத்தொடர்ந்து மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

போராடி பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாத்து, இன்றுவரை அதன் மகத்துவத்தை போற்றும் தேசம் இந்தியா தான். விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து, சிறை சென்று, தங்களது இன்னுயிரை நீத்த தியாகிகள் பலர் உள்ளனர். தமிழகத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் ஆங்கிலேயரை எதிர்த்து நின்று, பீரங்கி முனையில் சுட்டு கொல்லப்பட்டார். அவரது வீரத்தையும், உயிர் தியாகத்தையும் என்றும் நம்மால் மறக்க முடியாது.

இதேபோல விடுதலைக்காக வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், வேலுநாச்சியார் உள்பட ஏராளமான வீரர்கள் விடுதலைக்காக தமது உயிரை கொடுத்து உள்ளனர். இவர்களின் தியாகத்தை நாம் என்றென்றும் எண்ணி போற்றவேண்டும். விடுதலை போராட்ட வீரர்களில் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும். அதனை படிக்கும் குழந்தைகள் வாயிலாக விடுதலையின் பெருமை பேசப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பெயர் சூட்டவேண்டும்

தேவநாதன் யாதவ் கூறுகையில், ‘‘விடுதலை போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் யாதவர் இனத்தின் குலவிளக்காக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது தியாகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு, அழகுமுத்துக்கோன் பெயர் சூட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். திருவல்லிக்கேணியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக ஆக்கவேண்டும்’’, என்றார்.

கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் கூறுகையில், ‘‘டெல்லி–கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கோ அல்லது திருச்சி விமான நிலையத்துக்கோ அழகுமுத்துக்கோன் பெயர் சூட்டவேண்டும்’’, என்றார். அவருடன் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar