"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Tuesday, July 3, 2018

திருப்பதி கோவிலில் ஆகஸ்ட் 16-ந்தேதி மகா கும்பாபிஷேகம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஏழுமலையான் கோவிலிலும் அதனை சார்ந்த மற்ற சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஏழுமலையான் கோவிலிலும் அதனை சார்ந்த மற்ற சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

ஆனந்த நிலையம், கருடாழ்வார் சன்னதி, தாயார் சன்னதி, வரதராஜர், யோக நரசிம்மர், ஆஞ்சநேய சுவாமி சன்னதிகளிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையொட்டி ஆகஸ்ட் 11-ந்தேதி இரவு 9 மணி முதல் 10 மணிக்கிடையே அங்குரார்ப்பணம் நடக்கிறது. 12-ந்தேதி பாலாலயம் மற்றும் முதல் யாக சாலையில் உற்சவமூர்த்திகள் கருவறையில் இருந்து யாக சாலைக்கு கொண்டு வரப்பட உள்ளனர்.

தொடர்ந்து 13-ந்தேதி காலை 6 மணி முதல் 12 மணி வரையும், இரவு 7 மணி முதல் 10 மணி வரை 9 மணி நேரம் யாக சாலையில் பூஜைகள் நடக்கிறது.

14-ந்தேதி யாக சாலையில் சிறப்பு பூஜைகளும், 15-ந்தேதி அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை மூலவருக்கு மகா சாந்தி திருமஞ்சனமும் நடக்கிறது.

இரவு யாக சாலையில் மகா பூரணாஹூதி நடக்கிறது. 16-ந்தேதி காலை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதையொட்டி 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.

அதன்படி ஒரு நாளைக்கு 30 ஆயிரம் பக்தர்கள் மட்டும் பூஜை நேரங்கள் அல்லாத நேரத்தில் சாமியை தரிசனம் செய்ய முடியும்.

இதனால் அனைத்து ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. தரிசனம், ரூ.300-க்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

தொடர்ந்து அக்டோபர் 3-ந்தேதி வரை 45 நாட்களுக்கு சிறப்பு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது. மேலும் 16-ந்தேதி மாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்கிடையே கருட வாகனத்திலும், இரவு 9.30 மணிக்கு பெரிய சே‌ஷ வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற உள்ளது.

எனவே ஆஸ்கட் 11-ந்தேதி வரை 6 நாட்களுக்கு குறைந்த அளவு மட்டும் நேரம் ஒதுக்கப்படுவதால் பக்தர்கள் அதற்கேற்ப தங்கள் திருமலை பயணத்தை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.

'யாகூ' நம் தொழில்முனைவோர் பயிற்சி முகாம்


வேலை தேடுவோர் அல்ல 'யாம்', வேலை கொடுப்போரே 'யாம்'

'யாகூ' வரலாற்று நிகழ்வின் துவக்க நாயகன் திரு.தர்மேந்திர பிரதாப் யாதவ், IAS, (Small & Medium Scale Industries, Secretary to the TN Government) அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி 'யாகூ 2018' தொழில் முனைவோர் இரண்டு நாள் பயிலரங்கை துவக்கிவைத்து, தமிழக அரசின் தொழிற் கொள்கை குறித்த எளிமையான விளக்கமும், தொழில்முனைவோருக்கு உதவ விரும்பும் அவரின் உற்சாகப் பேச்சும் கேட்ட அனைவரையும் ஈர்த்தது.



நம் முதல் தலைமுறைத் தொழில் முனைவோருக்காக 'யாம் கூடுகை' என்னும் 'யாகூ' தொழில் முனைவோர் பயிற்சி முகாம் சர்வதேசத் தரத்தில் சென்னை - வடபழனியில் உள்ள அம்பிகா எம்பயர் ஹோட்டலில், ஜீன் 23 & 24 ஆகிய நாட்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு யாதவ மகாசபை, தலைவர் டாக்டர் ம.கோபாலகிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நம் இளைஞர்கள் 'வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும்' என்பதை அடிநாதமாகக் கொண்டு, நம் முதல்தலைமுறை தொழில்முனைவோர்களை முதல் கட்டமாக 20-க்கு மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து ஆர்வமுள்ள 100 இளைஞர்களைக் கண்டறிந்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் நோக்கம் இளையோருக்குள் நல்ல அறிமுகம், இணைப்பு, தொழில் விரிவாக்கத்திற்கான சூட்சுமங்கள், நெறிமுறைகள் முதலானவற்றை கற்றுக் கொள்ளவும், அந்தந்தத்துறையின் சமகால நிகழ்வுகள், புதிய தொழில்நுட்பங்கள், மாற்றங்கள் முதலானவற்றை உள்வாங்கித் தத்தம் தொழில் நிலைப்பாடுகளைச் செம்மையாக்கிக் கொள்ளவும் இது வழிவகுக்கும். தொழில் அதிபர்களுடன் நேரடியாக உரையாடி உத்வேகம் பெற வைக்கும் என்ற அடிப்படையில் நடைபெற்றது.
தொடரும்...யாகூ 2018

Monday, January 1, 2018

கல்லூரியை ஒப்படைக்க வேண்டும் - அரசுக்கு யாதவர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம் : 'யாதவர்கள் கல்வி நிதியில் நடத்தப்படும், யாதவர் கல்லுாரியை, அரசு திரும்ப ஒப்படைக்க, வேண்டும்' என, அந்த ஜாதியினர், முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.யாதவர் பேரவையின், 12வது மாநில பொதுக்குழு கூட்டம், மாநில தலைவர் வேலுசாமி தலைமையில், காஞ்சிபுரத்தில் நடந்தது.மாநில துணை செயலர் துரைராஜ், வழக்கறிஞர் பாலகுமார், மாவட்ட நிர்வாகிகள் முரளிமோகன், வெங்கடேன் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
● மதுரையில், யாதவர்கள் கல்வி நிதியில் நடத்தப்படும், யாதவர் கல்லுாரியை, அரசு திரும்ப தங்களிடமே ஒப்படைக்க வேண்டும்
● மேய்ச்சல் நிலங்களை உருவாக்கினால் தான், கால்நடைகளை காப்பாற்ற முடியும்
● மேய்ச்சல் புறம்போக்கு வகைப்பாடு உள்ள நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை, அரசு மீட்கவேண்டும்
● தமிழகத்தில், மூன்றில் ஒரு பகுதி மக்கள் தொகையிருந்தும், ஜாதிவாரியான கணக்கெடுப்பு பட்டியலை, அரசு வெளியிடவில்லை; உடனடியாக வெளியிட வேண்டும்
● ஆடு வளர்ப்பு நல வாரியத்தில், யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை தான், தலைவராக நியமிக்க வேண்டும்.

இவ்வாறு பல தீர்மானங்கள் நிறைேவற்றப்பட்டன.பேரவையின் நிறுவனர் மருத்துவர் காந்தையா தலைமையில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலத்தலைவராக சேலம் கண்ணன், பொதுச்செயலராக கோவை தங்கப்பழம், பொருளாளராக சென்னை ஜெயகுமார் தேர்வு செய்யப்பட்டனர்.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar