"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Monday, January 18, 2016

இலங்கையும்(ஈழம்) இடையர்களும்! ஈழத்தில் ஆதியில் வாழ்ந்த இனங்கள்!!

குமரிக்கண்ட கடல் கோள் உருவாகுவதற்கு முன்னரே கடல் கொண்ட அதாவது கடலால் அழிவுற்ற நாடுகளும் ஒன்றாக இருந்த இலங்கையில் வாழ்ந்த மக்களாக ,
நாகர்கள்,
இயக்கர் அதாவது யக்க்ஷர்கள்,
வேடர்கள்,
இடையர்கள்,
அமானுயர்கள்,

என்ற இனங்களை சேர்ந்தவர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை அகழ்வாராய்சிகளும் ,அவற்றில் கிடைத்த ஆதார சான்றுகளும், பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் கூறி உள்ள கருத்துக்களும், மெய்பித்தே நிற்கின்றது .இதை உண்மை படுத்த இந்த இனத்தவர்கள் அவர்கள் அறிவுக்கு எட்டியவகையில் எழுதிவைத்த குறிப்புக்கள் ,திட்டம் இட்டு பின் வந்த அரசர்களாலும் அரசியல் ஆளர்களாலும் அந்நிய படை எடுப்பாளர்களாலும் அழிக்கப்பட்டும் சூறை ஆடப்பட்டும் விட்டது எமது துர்அதிஸ்டமே.,,,எஞ்சிய முற்காலத்து தென்னிந்திய மற்றும் ஈழத்தமிழர்களினது குறிப்புக்களும் வரலாற்று நூல்களும் ஜெயவர்த்தனா அரசால் திட்டம் இட்டு யாழ் நூலகம் எரிக்க பட்டபோது அழிந்து விட்டது.

தென்னிந்தியாவில் ஆரம்ப மக்கள் வாழ்ந்த தாக அறியபடுகின்ர அதே காலத்திலேயே ,ஈழத்திலும் மக்கள் வாழ்த்து இருக்கலாம் ஈழத்தின் தெனிந்தியாவுக்கு அண்மித்த அமைவிடத்தை பொறுத்தவரையில் அது சாத்தியமான ஒன்றாகும் ,நாகர்கள் தென்னிந்தியாவில் வாழ்ந்தவர் என்பதை துவாரக யுகத்தில் நடந்ததாக கூறும் புனை கதையான மகாபாரதம் கூட நிரூபிக்கவில்லை .மகா பாரதத்தில் கூட நாகலோகத்து நாகர்கள் குந்தி தேவியின் உறவினர்கள் நாகதீபத்தில் வாழ்ந்த தாக தான் அறிய முடிகின்றது .

ஈழத்தில் ஆரம்பத்தில் வாழ்ந்த நாகர்கள் பிற்காலத்தில்அரசர்கள் இராஜ ரட்டை என்று அழைக்க பட்ட ஈழத்தின் வடபகுதிலேயே அதிகமாக வாழ்ந்ததாக கருதப்படுகின்றது .இவர்கள் நாகதீபம் அதாவது யாழ்குடாநாடு கடலால் பிரியும் பூநகரிக்கு மேற்பட்ட பிரதேசம் யாழ் தீபகற்பம் இந்த பிரதேசத்தை 26 குறுநில அரசர்களை கொண்ட நாக அரசர்கள் நீதி தவறாமல் ஆண்டு வந்தார்கள் .இவர்கள் தன்னிறைவு கொண்டவர்காகவும் பண்டமாற்று மூலம் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தவர்களாகவும் தங்களுடைய தனித்துவமான நாகரிக ஒழுங்கில் வாழ்ந்தவர்களாகவும் ,உறவுமுறைகளில் திருமண பந்தங்களை முறைப்பெண் திருமணம் ,செய்து வந்து வந்தார்கள் ,இயற்கை வழிபாட்டோடு சேர்ந்த தாந்திரிய சைவத்தின் சிவ சத்தி வழிபாட்டையும் நாக பாம்பினை வழிபடும் மரபினையும் கொண்டு இருந்தார்கள் 


நாகர்கள் பேசும் மொழியாக தமிழ் மொழியை பேசினார்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அந்நிய மொழிகளையும் சகோதர மொழிகளையும் பேசுபவர்களாகவும் இருந்து இருக்கலாம் 

ஆரம்பத்தில் வாழ்ந்த யச்ஷர்கள் இனம் .இவர்கள் மாதோட்டம் எனப்படுகின்ற மன்னார் மேற் பகுதியிலும் அனுராத புரம் போன்ற காடுகளை அழித்து உருவாக்கிய பிரதேசங்களிலும் அந்த பிரதேசங்களை அண்டிய பிரதேசங்களிலும் வாழ்ந்தார்கள் .இவர்களும் தனித்துவமான இன அடையாளங்கள் கொண்டவர்கள். இவர்கள் குவேனியின் மூதாதையரின் வம்சத்தினை அரச வம்சமாக கொண்டு இருந்தாலும் ஒரு அரசை ஏற்றுகொள்ளும் மனபாங்கு இல்லாத காரணத்தால் ஈழத்தின் ஏனைய பிரதேசங்களையும் காடுகளையும் அழித்து அப்பிரதேசங்களிலும் தமது வாழ்விடங்கள் ஆக்கினார்கள் இதனால் ஈழத்தின் தென் பகுதியிலும் வாழ்விடங்களை அமைத்து கொண்டார்கள்,இவர்கள் உறவு முறை பந்தங்களில் தனித்துவமான பாரம்பரிய கட்டுபாடுகளை கொண்டு இருக்கவில்லை ,திருமண பந்தங்களில் யாரை வேண்டுமானாலும் மணந்து கொள்ளும் வழக்கத்தில் வாழ்ந்தார்கள் ,இவர்கள் இயற்கை வழிபாட்டோடு சத்தி வழிபாட்டையும் கொண்டு இருந்தார்கள் இவர்கள் ஏலு மொழியையும் தமிழ் மொழியையும் பேசினார்கள் பொருளாதாரத்தை இவர்களும் பண்டமாற்று மூலமும் தன்னிறைவு தொழில்களின் மூலமும் மேம்படுத்தி வாழ்தார்கள்.

இவர்களே அரை மொட்டை அடித்த நிலையில் நாடு கடத்தப்பட்டு வந்த விஜையனுக்கும் 700 தோழர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து ஈழத்தின் அழிவுக்கு உதவினார்கள்

அடுத்து ஆரம்பத்தில் வாழ்த்த குடிகள் ,,வேடர்கள், இடையர்கள் ,இவர்கள் காடுகளிலேயே வேட்டையாடி மர உரி தரித்தவர்களாக வாழ்ந்தார்கள் .இவர்கள் கொடிய விலங்குகளிடம் இருந்து மற்ற இனங்களை காத்தவர்கலாகவும் இருந்தார்கள் ,இவர்கள் பலகாலமாக தங்கள் தனித்துவத்தை இழக்காமலேயே இருந்தார்கள் இவர்களின் வழித்தோன்றல்கள் இன்றும் ஈழத்தில் காடுகளில் வாழ்கின்றார்கள் இவர்கள் கதிர்காமத்தை அண்டிய காட்டு பகுதிகளில் வாழ்ந்ததாகவும் ,முருகப்பெருமானையும் ,இயற்கை தெய்வங்களையும் வழிபடும் முறையை கொண்டு இருந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் ,

ஈழவம்சத்தினர் தாங்கள் தங்களுக்கு உரிய தனித்துவத்தோடு ,தமது தேவைகளில் மற்றவர்களில் தங்கி வாளாமால் தம் நிறைவு செய்து ,தமக்கான நாகரீக ஒழுங்கில் இஷ்ட தெய்வங்களை வணங்கி வாழ்ந்து கொண்டு இருந்த வேளையில் தான் குற்ற தண்டனையாக அரை மொட்டை விஜயன் ,700 தோழர்களுடன் கி .மு 6 ம் நூற்றாண்டு அளவில் கலிங்க நாட்டில் இருந்து மாதோட்டத்தில் வந்து இறங்கினான.

இடையர்களே குமரிகண்டத்தில் வாழ்ந்த பூர்வீக குடிகள் என்பதை காட்டும் கலித்தொகை


"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில் நீக்கிப், புகழ் பொறித்த கிளர்கெண்டை,
வலியினால் வணக்கிய, வாடாச்சீர்த் தென்னவன்
தொல்லிசை நட்ட குடியொடு தோன்றிய
நல்லினத்து ஆயர்”
(கலித். 104)

தொல்குடி மக்களான நல்லினத்து ஆயர்(இடையர்) என்று தங்கள் பூர்வீகத்தைக் கூறுகிறாள் ஒரு ஆயர் மகள்.3 ஆம் ஊழிக்கு முன் இருந்த இவர்கள் குடியினர்,
ஊழியின் காரணமாக தங்கள் இருப்பிடங்கள் கடலுக்குள் முழுகி விடவே,
பாண்டிய அரசனைத் தொடர்ந்து நிலப்பகுதிக்கு வந்தனர் என்பதை
இந்த வரிகள் தெரிவிக்கின்றன.

தன் நாட்டுப் பகுதியைக் கடல் கொண்டது என்பதற்காக அதனை ஈடு கட்டிக்கொள்ள புலி, கெண்டை பொறித்த சோழர் சேரர் நாட்டுப் பகுதியைக் கைப்பற்றிக் தன் கெண்டைமீனைப் பொறித்துக்கொண்டவன் 'வாடாச் சீர்த் தென்னவன்'. நல்லினத்து ஆயர் (பசு வளர்க்கும் ஆயர்) அந்தத் தென்னவன் குடியில் பிறந்தவர்களாம். (கலித்தொகை 104)- நல்லுருத்திரனார்

குமரிகண்டத்தின் ஒருங்கினைந்த பகுதியே ஈழம்(இலங்கை) ஆகும்


 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar