"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Showing posts with label தமிழ்நாடு யாதவ மகாசபை. Show all posts
Showing posts with label தமிழ்நாடு யாதவ மகாசபை. Show all posts

Tuesday, February 2, 2016

10 முதல் 12 தொகுதிகளில் யாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்தும் கட்சிக்கு ஆதரவு: தமிழ்நாடு யாதவ மகாசபை

தமிழக யாதவ மகாசபையின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. இதில், மாநில பொதுச் செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் எத்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், யாதவ மகாசபை தலைவர் கோபாலகிருஷ்ணன் பேசும்போது, “தமிழகத்தில், யாதவ சமுதாயம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும், 80 லட்சம் முதல் ஒரு கோடி யாதவ சமூக வாக்காளர்கள் உள்ளனர்.


நம்முடைய சமூகத்துக்கு அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் அளிக்காததால் மிகவும் பின் தங்கிய நிலைக்கு யாதவ சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது. யாதவர்களை ஒருங்கிணைக்கும் வகையில், மாவட்டம் தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.


பிப்ரவரி மாதத்தில் விழுப்புரத்தில் யாதவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடத்த உள்ளோம். இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான யாதவர்கள் கலந்து கொள்வர்.


மாநாட்டில் சட்டசபை தேர்தலில் யாதவர்களின் ஆதரவு யாருக்கு என்பதை முடிவு செய்ய உள்ளோம். தமிழகத்தில் யாதவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வரும் சட்டசபை தேர்தலில், 10 முதல் 12 தொகுதிகளில் யாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்தும் கட்சிக்கு, யாதவ மகா சபையின் ஆதரவு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Friday, January 8, 2016

ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட வலியுறுத்தல்



ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு யாதவ மகாசபை வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இந்தச் சபையின் தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளியிட்டு, விகிதாசார அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மாவட்டத் தலைவராக ஆர். சீனிவாசன், செயலராக எஸ்.ஏ. யாதவ், பொருளாளராக ஜெ. துளசிராமன் உள்பட 10 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் துணைத் தலைவர் ஏ.எஸ். பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Monday, August 17, 2015

எழும்பூரில் வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் மாலை அணிவிப்பு

எழும்பூரில், சுதந்திர போராட்ட மாவீரர், வீரன் அழகு முத்து கோன் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் நிர்வாகிகள் என்.சுப்பிரமணியம் யாதவ், ஆர்.பி.தர்மலிங்கம் யாதவ், கே.ஜோதிலிங்கம் யாதவ், கே.எம்.ராஜன் யாதவ், எம்.வி.சேகர் யாதவ், பூவை சுந்தர், போரூர் முருகா தாமோதரன், கே.எத்திராஜ், கேப்டன் ராஜன், பி.வி.சேகர், எம்.ஆர்.கே.மெய்யப்பன், ஓ.எம்.பி.ராமதாஸ், என்.தேவதாஸ், ஏ.எஸ்.பழனியாதவ், பி.தங்கராஜ், எம்.வி.புண்ணிய சேகர், எம்.சங்கர், எஸ்.செல்வம், வி.ராஜீ, மயிலை கிருஷ்ணன், பி.ஆர்.முத்து, காளிதாஸ் யாதவ், வேல் தளபதி, பி.மகாலிங்கம், சி.எஸ்.தனசேகரன், எஸ்.பாலுச்சாமி உள்பட ஏராளமானோர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தென்சென்னை மாவட்டம் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தை உள்ளடக்கிய 37 யாதவர் நலச்சங்க நிர்வாகிகளும் திரளாக பங்கேற்றிருந்தனர்.

மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி முடிந்ததும் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar