"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Showing posts with label திருநெல்வேலி. Show all posts
Showing posts with label திருநெல்வேலி. Show all posts

Saturday, February 6, 2016

யாதவர் பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் கூட்டம்

யாதவர் பண்பாட்டுக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் எஸ். சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். தென்மண்டல யாதவர் சங்கத்தின் தலைவர் ராணி ராமகிருஷ்ணன், செயலர் ஏ. ஆவுடையப்பன், யாதவர் கல்வி அறக்கட்டளைத் தலைவர் கே. தங்கவேல்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், "யாதவர் பண்பாட்டுக் கழக பொன்விழாவை ஆகஸ்ட் மாதம் நடத்துவது. பொன்விழா சிறப்பு மலர் வெளியிடுவது. 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற சமுதாய மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுவது' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், முக்கிய பிரமுகர்கள் அ. முத்துக்கிருஷ்ணன், சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், காந்திராஜன், வேலுதாஸ், வேல்தாஸ், முத்துசாமி, வெங்கடேஷ், துணைச் செயலர் ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். துணைத் தலைவர் சுப்பையா வரவேற்றார். பொருளாளர் கே. பாவநாசம் நன்றி கூறினார்.

Tuesday, January 19, 2016

குருசாமியாதவ் நினைவுகல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக நினைவு பரிசு

சிதம்பராபுரம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பத்தாம் வகுப்புதேர்வில் 470 மேல் எடுத்த மாணவி சீதாவுக்கு குருசாமியாதவ் நினைவுகல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக நினைவு பரிசு உயர்திரு உடையார்கோனார் (யாதவ சங்கத்தலைவர் மற்றும் குருசாமியாதவ் க்கு நினைவு கல்யாண மஹால் கட்ட உறுதுணையாக இருந்தவர்) அவர்களால் வழங்கப்பட்டது.மேலும் 2016 ம் ஆண்டு காலண்டர் ஊர்நாட்டாமையால் வழங்கப்பட்டது.

நன்றி.....

Tuesday, December 15, 2015

சு‌ப்பையா சுவா‌மிக‌ள்

திருநெ‌ல்வே‌லி அரு‌கி‌ல் உ‌ள்ள கடையனோடை எ‌ன்னு‌ம் ‌கிராம‌த்‌தி‌ல்‌வி‌ல்‌லிமு‌த்து‌க் கோனா‌ர்-நாராயணவடிவு த‌ம்ப‌தியரு‌க்கு 23.11.1908 ஆ‌ம் ஆ‌ண்டு‌பிற‌ந்தவ‌ர் மகா‌ன் சு‌ப்பையா சுவா‌மிக‌ள். ஒரே ஆ‌ண் வா‌ரிசான இவ‌ர், படி‌‌ப்‌பி‌ல்அ‌திக ஆர்வம் கொ‌ண்டவராகவும், அதே நேரத்தில் ஆன்மீக நாட்டமுடையவராகவும் இரு‌ந்தா‌ர். அ‌ப்போ‌து இரு‌ந்தே ந‌ண்ப‌ர்களுட‌ன் சே‌ர்‌ந்து பல கோ‌யி‌ல்க‌ள், சமா‌திகளை சு‌ற்‌றி வருவா‌ர்.
ஐ‌ந்தா‌ம் வகு‌ப்பு வரை கடையனோடை‌யி‌ல் படி‌த்த இவ‌ர், இ‌ப்படி கோ‌யி‌ல், சமாத‌ி எ‌ன்று ‌சு‌ற்‌றி ‌தி‌ரி‌ந்ததா‌ல் அவரது பெ‌ற்றோ‌ர், மூ‌த்த மக‌‌ள் இரு‌க்கு‌ம் குலசேகரப‌ட்டின‌த்‌தி‌ற்கு அனு‌ப்‌பி வை‌த்தன‌ர். அ‌ங்கு‌ள்ள பெ‌‌ரிய ப‌ள்‌ளி‌யி‌ல் சே‌ர்‌ந்தா‌ர். 
ஆனா‌ல் ‌அ‌ங்கு சு‌ப்பையா சுவா‌‌‌மி‌க்கு ந‌ண்ப‌ர்க‌ள் யாரு‌ம் ‌கிடை‌க்க‌வி‌ல்லை. வார ‌விடுமுறை நா‌ட்க‌ளி‌ல் அரு‌கி‌ல் உ‌ள்ள ‌திரு‌ச்செ‌ந்தூ‌ர் செ‌ன்று அ‌ங்கு‌ள்ள வ‌ள்‌ளி‌க்குகை, மூவ‌ர் சமா‌தி போ‌ன்ற இ‌ட‌ங்க‌ளி‌ல் த‌னிமை‌யி‌ல் அம‌‌ர்‌ந்து கொ‌ள்வா‌ர். அ‌ப்போது அ‌ங்கு வரு‌‌ம் சாது‌க்க‌ளுட‌ன் ‌சி‌த்த வை‌த்‌திய‌ம், யோக‌ம் போ‌ன்றவ‌ற்றை க‌ற்று‌‌க் கொ‌ண்டா‌ர். ‌பி‌ன்ன‌ர் மூ‌லிகை மரு‌ந்துக‌ள் தயா‌ரி‌த்து பலரு‌க்கு ‌சி‌கி‌ச்சை செ‌ய்தா‌ர். 7ஆ‌ம் வகு‌ப்பு வரை குலசேகர‌ப‌ட்டின‌த்த‌ி‌ல் படி‌த்த அவ‌ர், ம‌ீ‌ண்டு‌ம்கடையனோடை‌க்கு பெ‌ற்றோ‌ர்க‌ள் அழை‌த்து செ‌ன்றன‌ர். ‌பி‌ன்ன‌ர் ஆ‌ழ்வா‌ர்‌திருநக‌ரிலு‌ள்ள இ‌ந்து நடு‌நிலை‌ப்ப‌ள்‌ளி‌யி‌‌ல் 8ஆ‌ம் வகு‌ப்பும், ‌ திருவைகு‌ண்ட‌ம் காரனேஷ‌ன் உய‌ர் ‌நிலை‌ப்ப‌ள்‌ளி‌யி‌ல் 10ஆ‌ம் வகு‌ப்பு‌ம், பாளைய‌ங்கோ‌ட்டை தூய யோவா‌ன் க‌ல்லூ‌ரி‌யி‌ல் இ‌ண்ட‌ர்‌மீடிய‌ட் படி‌த்தா‌ர். இதையடு‌த்து மதுரை‌க்கு செ‌ன்று ‌பி.ஏ(hons) படி‌த்து முடி‌த்தா‌ர்.


க‌ல்லூ‌ரி பேரா‌சி‌ரிய‌ராக இரு‌ந்த க‌‌ல்யாண‌ம் ராமசா‌மி எ‌ன்பவருட‌ன் த‌ங்‌கி ‌சி‌த்துக‌ளிலு‌ம், மரு‌த்துவ‌த்‌திலு‌ம், ஆரா‌ய்‌ச்‌சி‌யிலு‌ம் ப‌யி‌ற்‌சி பெ‌ற்றா‌ர். மேலு‌ம் மூ‌லிகை, வை‌த்‌திய‌ம், உடற‌்கூறு, ‌சி‌த்து‌க‌ள், உற‌ங்காமை, உ‌ண்ணாமை போ‌ன்ற ப‌யி‌ற்‌சி பெ‌ற்றா‌ர். ஆனா‌ல் அத‌ி‌ல் நா‌ட்ட‌‌மி‌ல்லை.


த‌ன் ‌நில‌ங்களை ‌வி‌ற்று ஏழை அ‌ன்னதான‌ம் வழ‌ங்‌கினா‌‌ர். ‌பி‌ன்ன‌ர் கணப‌திமூலம‌ந்‌திர‌ம், ஸ்ரீராம ஜெய‌ம் போ‌ன்ற ம‌ந்‌திர‌ங்களை பலரு‌க்கு உபதே‌சி‌த்தா‌ர்.


மீ‌ண்டு‌ம் கு‌ற்றால‌ம், வ‌ள்‌ளி‌க் குகை, ‌திரு‌ச்செ‌ந்தூ‌ர் செ‌ன்றா‌ர். அதுவு‌ம் ச‌ரி‌ப்பட‌வி‌ல்லை. ‌‌பி‌ன்ன‌ர் ‌திரு‌‌ப்ப‌தி செ‌ன்றா‌ர். ‌பிறகு ‌விரு‌த்தாசல‌ம் செ‌ன்றா‌ர். அ‌ங்‌கிரு‌ந்து வடலூரை அடை‌ந்தா‌ர். அ‌ங்கு ‌சில மாத‌ங்க‌ள் த‌ங்‌கினா‌ர். ‌பி‌ன்ன‌ர் அ‌ங்‌கிரு‌ந்து ‌திரு‌க்கழு‌க்கு‌ன்ற‌ம் வ‌ந்தடை‌ந்தா‌ர். சு‌ப்பையா சுவா‌மிக‌ள் கடை‌சியாக‌ப்பே‌சியது திருக்கழு‌க் கு‌ன்ற மலை‌யிலம‌ர்‌ந்த ஓரா‌ண்டு வரைதா‌ன் (1951)
1951ஆ‌ம் ஆ‌ண்டு அ‌‌‌ங்கு வ‌ந்த சு‌ப்பையா சுவா‌மிக‌ள், அ‌ங்கு‌ள்ள மலை‌யி‌ன் ‌மீது அம‌ர்‌ந்து யோக ப‌யி‌ற்‌சி செ‌‌ய்வா‌ர். அ‌ப்போது அவரு‌க்கு பா‌ல், பழ‌ம் கொடு‌த்து உபச‌ரி‌த்தன‌ர். இர‌வி‌ல் ‌விஷ ஜ‌ந்து‌க்க‌ள், பு‌லி, ச‌ிறு‌த்தை எ‌ல்லா‌ம் நடமாடு‌ம் இ‌ட‌த்‌தி‌ல் எ‌ப்படி இரு‌க்‌கிற‌ீ‌ர்க‌ள் எ‌ன்று கே‌ட்டு‌ள்ளன‌ர். சுவா‌மி பு‌ன்முறுவலுட‌ன் இ‌ர‌ண்டொரு வா‌ர்‌த்ததை கூ‌றி அவ‌ர்களை அனு‌ப்‌பி வை‌த்தா‌ர். ‌பி‌ன்ன‌ர் மரண‌த்த‌ி‌ற்கு மூல‌ங்களை ந‌சி‌க்கு‌ம் உபாய‌த்துட‌ன் தவ‌ம் மே‌ற்கொ‌ண்டதா‌ல் பேசுவதை‌ந‌ிறு‌த்த‌ி‌‌க் கொ‌ண்டா‌ர். தன‌க்கு மு‌ன்பாக ‌திருவரு‌ட்பா எ‌ன்ற நூலை ம‌ட்டு‌ம் எ‌ப்போது‌ம் வை‌த்‌திரு‌ப்பா‌ர். ‌பி‌ன்ன‌ர் அ‌ங்கு‌ள்ள ம‌க்கள‌ா‌ல் கடையனோடை சுவா‌மி எ‌ன்று‌ம், ‌பி.ஏ. சுவா‌மி எ‌ன்று‌ம், ‌திரு‌க்கழு‌க்கு‌ன்ற‌ம் சுவா‌‌மி எ‌ன்று‌‌ம் அழை‌க்க‌‌ப்ப‌ட்டா‌ர்




சு‌ப்பையா சுவா‌மிக‌ள் கடையனோடை‌யி‌ல் அவதார‌ம் செ‌ய்தது முத‌ல் ‌திரு‌க்கழு‌க்கு‌ன்ற‌த்த‌ி‌ல் மு‌க்‌தியடை‌ந்தது வரை அவரு‌க்கு இ‌வ்வுலக உய‌ி‌ர்க‌ள்,சடமா‌யிரு‌ந்த கோ‌யி‌ல்க‌ள், சமா‌திக‌ள் முத‌லியவ‌ற்றுட‌ன் ‌நிறைய‌த் தொட‌ர்புக‌ள் உ‌ண்டு. எ‌வ்வுயிரு‌க்கு‌ம் ‌தீ‌ங்கு ‌நினை‌க்காதவனே வை‌ஷ்ணவ‌ன் எ‌ன்ப‌ர். அ‌வ்வ‌ழி வ‌ந்தவ‌ர் எ‌வ்வு‌யிரு‌க்கு‌ம் எவராலு‌ம் ‌தீ‌ங்கு வர‌க்கூடாது என எ‌ண்ணுபவ‌ன் ச‌ன்மா‌ர்‌க்‌கி என வை‌ஷ்ணவ‌த்‌‌தி‌ல் இரு‌ந்து ச‌ம்மா‌ர்‌க்க‌ம் வரை அவ‌ர் வ‌ந்த பாதையை பா‌ர்க‌்கு‌ம் போது அவ‌ரி‌ன் உ‌யி‌ர் எ‌த்தகைய உறவை ஒ‌வ்வொ‌ன்‌றிலு‌ம் ‌நிலை நா‌ட்டி‌யிரு‌க்‌கிறது எ‌ன‌ப் பா‌ர்‌‌த்தா‌ல் தெ‌ளிவு ஏ‌ற்படு‌ம்.




1961 ம் ஆண்டு அவர் தன்னுடன் தொடர்புடைய அன்பர்களிடம் தனது உடலில்
நாடி அடங்கும் நேரத்தை குறிப்பிட்டு இருந்தார்.அப்போது அவர் திருகழ்குகுன்ர மலை குகையில் இருந்தார். நாடி அடங்கியவுடன் அவரது உடல் கீழே கொண்டுவரப்பட்டது. அவர் விருப்பப்படி சமாதி கட்டப்பட்டு அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. மேலெ திறக்கும் வகையில் பலகைக் கல் வைத்து மூடப்பட்டது. 40 நாட்களுக்கு பூஜை செய்யப் பட்டது. பின்னர் அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் முன்னிலையில் சமாதியின் மூடி திறக்கப் பட்டது.
அவரது உடல் கெடாமல் அமர்ந்த நிலையில் அப்படியே இருக்கக் கண்டனர் மக்கள் அனைவருக்கும் ஆச்சரியம். THE BODY IS INTACT என்று அரசுக்கு அறிக்கை அனுப்பப் பட்டது.


சமாதியின் மேல் மூடி மூடப்பட்டது. மீண்டும் பத்து மாதங்களுக்கு பூசை செய்யப்பட்டது.அதன் பிறகு மீண்டும் சமாதியின் மூடி திறக்கப் பட்டது. உடல் கெடவில்லை. பின்னர் சமாதியின்மீது கட்டிடம் கட்டப் பட்டுள்ளது.
சமாதியில் தினசரி அன்னதானம் நடக்கிறது.தியான மண்டபம் கட்டப் பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டு மலர் வெளியிடப்பட்டுள்ளது.

Wednesday, October 21, 2015

சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை முழுமையாக வெளியிட வலியுறுத்தல்

சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தென்மண்டலச் செயலர் எஸ். மரியசுந்தரம் வலியுறுத்தினார்.

இந்த அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட கிளையின் சார்பில், இம்மாதம் 27ஆம் தேதி நடத்தப்படும் கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் பிரதான கோரிக்கையாக இருப்பது இலவச கல்வியும், இலவச மருத்துவமும்தான். இக் கோரிக்கையை வென்றெடுக்கவும், மத்திய அரசின் கவனத்துக்கு கோரிக்கைகளை கொண்டுசெல்லும் வகையிலும் பாளையங்கோட்டையில் வரும் 27ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், பாஜகவின் தமிழக மேலிடப் பார்வையாளரும், கட்சியின் தேசிய பொதுச் செயலருமான முரளிதரராவ் சிறப்புரையாற்றுகிறார். மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில இணை அமைப்பாளர் ஸ்ரீநிவாசன், யாதவ மகாசபை தேசியத் தலைவர் தேவநாதன் யாதவ் ஆகியோர் பேசுகின்றனர்.

சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தியுள்ள அரசு, அதன் விவரங்களை முழுமையாக உடனடியாக வெளியிட்டு, அந்தந்த சாதியினருக்குரிய பிரதிநிதித்துவப்படி இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

வரும் பேரவைத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. கூட்டணி எப்படி அமைந்தாலும் திருநெல்வேலி மாவட்டத்தில் கடையநல்லூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, நான்குனேரி ஆகிய 4 தொகுதிகளை இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றார் அவர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டச் செயலர் எம். முத்து, மாவட்ட தேர்தல் பணிக் குழு செயலர் எஸ். சரவணன், ஒன்றியச் செயலர் சிவந்திப்பட்டி முத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Wednesday, October 14, 2015

நெல்லை மாவட்டம் களக்காட்டை அருணாசலகுமார் அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு எழுதிய கடிதம்


இவர்  கண்டுபிடிப்புகளை நிருபிக்க வாய்ப்பு ஏற்படுத்த தர வேண்டுகிறோம்.முடிந்தவர்கள் உதவவும். இணையத்தில் பகிரவும்Cell: 9865181457            Email: balakf@gmail.com











இவர்  கண்டுபிடிப்புகளை நிருபிக்க வாய்ப்பு ஏற்படுத்த தர வேண்டுகிறோம்.முடிந்தவர்கள் உதவவும். இணையத்தில் பகிரவும்Cell: 9865181457    Email: balakf@gmail.com


ஆயர் குல ஆராய்ச்சியாளர் : நெல்லை மாவட்டம் களக்காட்டை அருணாசலகுமார்

இவர்  கண்டுபிடிப்புகளை நிருபிக்க வாய்ப்பு ஏற்படுத்த தர வேண்டுகிறோம்.
முடிந்தவர்கள் உதவவும். 
இணையத்தில் பகிரவும்

From
            S. Arunachala Kumar yadav
            69/25 Kottai Yathavar Main Street
            Kalakad – 627501, Tirunelveli Dist.
            Tamilnadu, India Cell: 9865181457
            Email: balakf@gmail.com


    Respected ,
            Good Morning, I am one of the scientist I have researched 22 research that is space research is very very important. A heavy fuel storage on the space first my research explanation and formula next sample of space fuel and another than supply of world people my research is valuable of one. Please request of consider my letter. Supply of the world all people in fuel storage on the space. My research is confirmed it. My research explanation and formula consulting for you a new world record and world people main problem solve of my research, request please co-operation with me your’s any step appreciate it and follow my research use in all people.

Repeatly please help for me
Thank You,
I am waiting for your’s valuable reply,
FOR HELP ME.

                                                                                                               Yours faithfully
Place: Kalakad ,tirunelveli,tamilnadu,INDIA                                   S. Arunachala Kumar yadav 
                                                                                                               Cell: 9865181457
















சோலார், காற்றாலை மூலம் கூடுதல் மின்உற்பத்தி : பட்டதாரி வாலிபர் கண்டுபிடிப்பு:

சோலார் மற்றும் காற்றாலைகள் மூலம் கூடுதலாக மின்சாரம் தயாரிக்க முடியும் என களக்காட்டை சேர்ந்த பட்டதாரி வாலிபர் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்தவர் அருணாசலகுமார்(40). சமூகவியல் முதுகலை பட்டதாரியான இவர் நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டு பிடித் துள்ளேன். விஞ்ஞானி ஐசக் நியூட்டன், பூமிக்கு புவிஈர்ப்பு விசை உண்டு என்று கண்டுபிடித்தார். அந்த விசைமட்டுமல்ல, ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினையும் இருக்கிறது என்பதை நான் கண்டறிந்தேன். பம்பரத்தை சுழலவிடுவது, நாணயத்தை சம தளத்தில் சுழலவிடுவது போன்ற செயல்களுக்கு இருவிதமான விசை தேவைப்படுகிறது என்பதை என்னால் நிரூபிக்க முடியும். 


மேலும் ஏற்கனவே காற்றாலை, சோலார் ஆகியவற்றில் இருந்து தற்போது பெறப் படும் மின்சார அளவைவிட அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் முறை உள்ளிட்ட 9 விதமான புதிய அறிவியல் ஆய்வு களை கண்டறிந்துள்ளேன். விண்வெளி நிகழ்வு தொடர்பான 6 புதிய கண்டு பிடிப்புகள் என்னி டம் உள்ளது.


இதுதொடர்பாக நாசா விஞ்ஞானிகளுக்கு நான் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அவர்கள், கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக இணையதளம் மூலம் என்னிடம் தொடர்பில் உள்ளனர். எனது அறிவியல் கண்டுபிடிப்புகளை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் போன்ற பெரிய விஞ்ஞானிகள் முன்னிலையில் நிகழ்த்தி காட்ட தயாராக உள்ளேன். அதற்கான வாய்ப்புகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி தரவேண்டும் என்றார்.

இவர்  கண்டுபிடிப்புகளை நிருபிக்க வாய்ப்பு ஏற்படுத்த தர வேண்டுகிறோம்.
முடிந்தவர்கள் உதவவும். 
இணையத்தில் பகிரவும்

Tuesday, October 6, 2015

திருநெல்வேலியில் யாதவர் பண்பாட்டுக் கழகம் சார்பில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை



திருநெல்வேலியில் யாதவர் பண்பாட்டுக் கழகம் சார்பில் திங்கள்கிழமை மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

யாதவர் பண்பாட்டுக் கழக செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் எஸ். சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் உயர்கல்வி பயிலும் மாணவிகள் பி. இசக்கியம்மாள், ஏ. ராஜவேணி ஆகியோருக்கு தலா ரூ. 10 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

தென்மண்டல யாதவ முன்னேற்றச் சங்கத் தலைவர் கே. ராமகிருஷ்ணன், அரிமா வானமாமலை, அமைப்பின் நிர்வாகிகள் காந்திராஜன், விநாயகம், எஸ்.ஆர். வெங்கடாசலம், வேலுதாஸ், இசக்கிமுத்துதாஸ், வேலு, பால்துரை, பண்டாரம், சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சங்க பொன்விழாவை சிறப்பாக நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலர் டி. ராமசாமி வரவேற்றார். பொருளாளர் கே. பாவநாசம் அறிக்கை வாசித்தார். துணைத் தலைவர் சுப்பையா நன்றி கூறினார்.

Thursday, August 13, 2015

யாதவர் திருமன மண்டபம் திறப்பு விழா:தெற்குப்பட்டி,நெல்லை

நெல்லை மாவட்டம்
தெற்குப்பட்டி
கிராமத்தில் ஆகஸ்ட் 13 அன்று
யாதவர் திருமன மண்டபம் திறப்பு விழா
நடைபெறுகிறது.யாதவ சொந்தங்களை
வருக வருக என அழைக்கிறோம்.








இவண்
தெற்குப்பட்டி யாதவர் இளைஞர் சங்கம்
மற்றும் KM சுவாமிஜீ யாதவ் பேரவை

Monday, July 13, 2015

திருநெல்வேலி அழகுமுத்துக்கோன் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு



சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாளையங்கோட்டை நேரு கலையரங்கம் அருகேயுள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் சாதிய அமைப்பினரும் வருகை தருவர் என்பதால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மேலும், சிலைக்கு மாலை அணிவிக்க ஒவ்வொரு கட்சியினர் மற்றும் அமைப்பினருக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கித் தரப்பட்டிருந்தது.

இதன்படி திமுக சார்பில், அதன் மத்திய மாவட்டச் செயலர் அப்துல் வஹாப் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலர் எஸ். பெருமாள் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாநில துணைப் பொதுச்செயலர் நிஸ்தார் அலி, மாவட்ட அமைப்புச் செயலர் கிருஷ்ணகுமார், மாவட்டச் செயலர் ஹரிஹரன் ஆகியோரது தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கட்சியின் மாவட்டச் செயலர் கண்மணி மாவீரன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Saturday, May 16, 2015

தச்சநல்லூரில் படுகொலை செய்யப்பட்ட பொன்னையா யாதவ் குடும்பத்தினருக்கு யாதவ மகாசபை நிதி உதவி

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் படுகொலை செய்யப்பட்ட பொன்னையா யாதவ் குடும்பத்தினருக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் தனது சொந்த நிதியிலிருந்து ஒருலட்சத்து அறுபத்துஓராயிரத்தை (1,61,000) இன்று நெல்லையில் பொன்னையா யாதவ் குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினார் .திருநெல்வேலி மாவட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர் .

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar