"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Thursday, March 13, 2014

முலாயம் சிங் யாதவ் 2 தொகுதியில் போட்டி






முலாயம் சிங் யாதவ் 2 தொகுதியில் போட்டி
உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ் வாடி கட்சி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. அங்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தனித்தனி அணியாக போட்டியிடுவதால் 4 முனை போட்டி நிலவுகிறது.
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் இந்த தேர்தலில் 2 தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். தற்போது அவர் மெயின்பூரி தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். அந்த தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார்.
அத்துடன் அசம்கார் தொகுதியிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அசம்கார் தொகுதி தற்போது பாரதீய ஜனதா வசம் உள்ளது. இங்கு முஸ்லிம்கள், யாதவர்கள் அதிக அளவில் வசிப்பதால் தனது வெற்றிக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று முலாயம்சிங் யாதவ் கருதுகிறார்.
அசம்கார் தொகுதியானது பூர்வாஞ்சல் மண்டலத்தில் உள்ளது. பூர்வாஞ்சலில் 3 தொகுதிகள் சமாஜ்வாடி கட்சி வசம் உள்ளது. எனவே இங்கு போட்டியிடுவதன் மூலம் பூர்வாஞ்சலில் மற்ற தொகுதிகளையும் கைப்பற்ற ஏதுவாக இருக்கும் என்று முலாயம் சிங் யாதவ் கருதுகிறார்.

Wednesday, March 12, 2014

ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு வியாபாரிகளின் ஆட்டு மகமை கட்டளை

வரலாறு
கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மதுரையில் ஆயிரம் வீட்டு யாதவ சமூகத்தினர் ஆடுகளை வளர்த்து வியாபாரம் மற்றும் பிற தொழில்களும் செய்து வருகின்றனர். ஆடுகளை அடைத்து வைப்பதற்கும், வியாபாரம் செய்வதற்கும் நிலையான ஒரு இடம் இல்லாதது ஒரு குறைபாடாக இருந்தது. இக்குறைபாட்டினை நீக்கும் பொருட்டு திரு.வெ.பெ.இருளப்பக்கோனார் தலைமையில் நான்கு பேர் சேர்ந்து கி.பி.1899 ஆம் ஆண்டு சிம்மக்கல் அருகில் திரு.வி.க சாலையில் 92 சென்ட் இடத்தினை வாங்கினர். அன்றிலிருந்து அந்த இடத்தை ஆயிரம் வீட்டு யாதவ சமூகத்தினைச் சேர்ந்த ஆட்டு வியாபாரிகள் ஆடுகள் அடைப்பதற்கும், ஆடுகள் வியாபாரம் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கி.பி.1924 ல் இந்த இடத்திற்கு உரிமை கோரி சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த இடம் ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு வியாபாரிகளுக்கு பாத்தியபட்டது என தீர்ப்பளித்தது. வழக்கை தொடுத்தவர்கள் மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீட்டிலும் இடம் ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு வியாபாரிகளுக்கு பாத்தியப்பட்டது என்று  தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கு தொடுத்தவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். இந்த முறை இரு தரப்பாரும் கலந்து பேசி சமாதான உடன்படிக்கை மேற்கொண்டனர். அதன்படி ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு மகமை வியாபாரிகளின் ஆட்டு மகமை கட்டளை டிரஸ்ட் கி.பி.1927 ல் உருவாக்கப்பட்டது. இதன் முதல் டிரஸ்டியாக திரு.வெ.பெ.இருளப்பக்கோனார் நியமிக்கப்பட்டார். இவர் கி.பி. 1927 முதல் கி.பி 1947 வரை டிரஸ்டியாக பணியாற்றினார். பின்னர் இரண்டாம் டிரஸ்டியாக இ.சுடலைமாடக்கோனார் கி.பி 1947 முதல் 1953 வரை பணியாற்றினார். பின்னர் மூன்றாம் டிரஸ்டியாக வீ.சி.பி.வீரண்ணக்கோனார் கி.பி 1953 முதல் 1988 வரை பணியாற்றினார். பின்னர் நான்காம் டிரஸ்டியாக மா.வ. சுப்ரமணியக்கோனார் கி.பி 1988 முதல் 2000 வரை பணியாற்றினார். பின்னர் ஐந்தாம் டிரஸ்டியாக நா.ஆறுமுகம் கி.பி 2000 முதல் 2010 வரை பணியாற்றினார். பின்னர் ஆறாம் டிரஸ்டியாக வீ.க.து.முருகேசன் (எ) வீரணன் கி.பி 2010 முதல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
இறைப்பணிகள்
பக்தியில் சிறந்த ஆயிர வீட்டு யாதவ சமுதாய மக்கள் டிரஸ்ட் மூலமாக இறைத்தொண்டாற்றிட எண்ணினர். அதன்படி வடக்கு மாசி வீதி நவநீதகிருஷ்ணன் கோவில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவில் 8ஆம் நாள் குதிரை வாகன மண்டகப்படி உற்சவத்தை டிரஸ்ட் சார்பில் நடத்துவதாக முடிவு செய்தனர். அதன்படி அன்று முதல் இன்று வரை நவநீதகிருஷ்ணன் கோவில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவில் 8ஆம் நாள் குதிரை வாகன மண்டகப்படி உற்சவம் டிரஸ்ட் சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் ஃபாத்திமா கல்லூரி அருகில் உள்ள வழி விடும் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பக்தர்களுக்கு அன்னதானமும் ட்ரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக அன்று ஒரு நாள் மட்டும் பெருமாள் விக்ரகத்தைத் தொட்டு பூஜை செய்பவர் ஆயிர வீட்டு யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர். சில தலைமுறைகளுக்க்கு முன் ஆயிர வீட்டு யாதவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆற்றில் இருந்து நரசிங்கபெருமாள் விக்ரகத்தை கண்டெடுத்து, அந்த விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து வழிவிடும் பெருமாள் கோவிலை உருவாக்கினார். அவருடைய பரம்பரையில் வந்தவர்கள் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மட்டும் பெருமாளைத்தொட்டு பூஜை செய்து வருகின்றனர். தற்போது விக்ரகத்தை கண்டெடுத்த ஆயிரம் வீட்டு யாதவரின் பேரனாகிய மங்கான் பெரியசாமி யாதவ் என்பவர் பூஜை செய்து வருகிறார். அன்று ஒரு நாள் மட்டும் கோவிலில் வழக்கமாக பூஜை செய்து வரும் பிராமணர் பூஜை செய்வது இல்லை.

டிரஸ்டிக்களின் காலமும், பணிகளும்
      காலம்                   டிரஸ்ட் தலைவர்
  1. கி.பி.1927 - 1947                   வெ.பெ.இருளப்பக்கோனார்
ஆட்டு மந்தை டிரஸ்டை உருவாக்கினார்
  1. கி.பி.1947 – 1953                  இ.சுடலைமாடக்கோனார்
                             சுற்றுப்புற கோட்டைச் சுவரைக் கட்டினார்
                             தரையில் பட்டியல் கல் பாவினார்        
  1. கி.பி.1953 – 1988                  வீ.சி.பி.வீரண்ணக்கோனார்
       இவர் காலத்தில் கி.பி.1957 ல் வெள்ளிக்குதிரை
       வாகனம் செய்யப்பட்டது.
  1. கி.பி.1988 – 2000                  மா.வ.சுப்ரமணியக்கோனார் 
இவர் காலத்தில் கி.பி.1999 ல் ஆட்டு மந்தை திருமண       மண்டபம் கட்டப்பட்டது.
  1. கி.பி.2000 – 2010                  நா.ஆறுமுகம்
இவர் காலத்தில் கல்யாண விநாயகர் ஆலயம்,  பழனிசாமி மடம் கும்பஷேகம் செய்யப்பட்டது   
  1. கி.பி.2010 – தொடர்ந்து        வீ.க.து.முருகேசன் (எ) வீரணன்
சமுதாயப்பணிகள்
ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு மகமை வியாபாரிகளின் ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபம், யாதவர் வீட்டு விசேஷங்களுக்கு குறைந்த வாடகையில் அளிக்கப்படுகிறது. இதில் ஆயிர வீட்டு யாதவர், மற்ற யாதவர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைத்து யாதவர்களுக்கும் மிகக்குறைந்த வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி நான்கு புறமும் பாதை உள்ள இடம் ராஜமனை எனப்படும். இவ்வாறு அமைந்த இடம் செல்வத்திலும், அதிகாரத்திலும் சிறந்து விளங்கும். ஆட்டு மந்தை டிரஸ்ட் இத்தகைய ராஜமனை என்ற அமைப்பில் நான்கு புறமும் பாதையுடன் அமைந்துள்ளது.
இந்த டிரஸ்ட் இப்பொழுது டிரஸ்டி வீ.க.து.முருகேசன் (எ) வீரணன் ( Cell No.9842996663 ) நிர்வாகத்தில் மிகச்சிறப்பாக இயங்கி வருகிறது.

Tuesday, March 11, 2014

சமுதாயத்திற்காக தான் தலைவர்கள் ...., தலைவர்களுகாக சமுதாயம் இல்லை.

அனைத்து யாதவ சொந்தங்களுக்கும் வணக்கம்... தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் யாதவர்களை புறக்கணித்து வருகின்ற வேளையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து யாதவ சமுதாய தலைவர்களும் ஒன்றிணைந்து ஓரணியில் நின்று யாதவ சமுதாய வாக்குகளை சேகரித்தால் மட்டுமே நமது சமுதயதிற்கான அங்கீகாரத்தை தமிழ் நாட்டில் பெற முடியும் ...., யாதவ சமுதாயத்தின் வளர்ச்சியை பற்றி உண்மையிலேயே சிந்திக்கின்ற தலைவர்கள் தங்களுக்கு இடையே உள்ள ஈகோ வை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியம்......, 

சமுதாயத்திற்காக தான் தலைவர்கள் ....,
தலைவர்களுகாக சமுதாயம் இல்லை.

யாதவ பெருமக்களுக்கு - ஒரு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு யாதவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக டாக்டர் திரு. M. கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர், Indian Bank அவர்கள் தலைமையில் வருகின்ற நாடாளுமன்ற (April 2014) தேர்தலில் யாதவர்களின் நிலைப்பாடு குறித்து முடிவு அறிவுக்கும் கூட்டம்.

தேதி : 16-March-2014 ஞாயிறு, காலை 10:00 மணி
இடம் : சென்னை (இன்று அறிவுக்கப்படும்)

தமிழ் நாட்டில் உள்ள அணைத்து யாதவ சங்கங்களின் பிரதிநிதிகள் சமுதாய நலனை முன்னிறுத்தி தவறாது கலந்து கொள்ளவும்.

மேலும் விபரங்களுக்கு:-

Please contact Co-ordination Committee :
Dr. R. Kanthaiah Yadav - 94441 34142
Mr. Selvam Yadav - 99944 70018
Mr. Sethu Madhavan
Mr. Ponneri Sekar

Monday, March 3, 2014

"தெய்வமகன்" ஓம் பிரகாஷ் யாதவ்...

தெய்வமகன் சிவாஜி போல வெந்து போன கன்னத்தழும்புகளுடன் நிஜமாகவே ஒரு சிறுவன் உபியில் இருக்கிறான், அவனைப்பற்றிய புகைப்படத்தை பார்த்ததும் ஏனோ அந்தச் சிறுவனைப்பற்றி விசாரிக்க தோன்றியது.

தோன்றியதை செய்துமுடித்தபோது மனதிற்குள் நல்லதொரு சிறுவனை அறிமுகப்படுத்திய மனநிறைவு ஏற்பட்டது.

சிறுவனின் பெயர் ஒம்பிரகாஷ் யாதவ்.

உத்திர பிரதேச மாநில விவசாயி ஒருவரது மகன்.ஏழாவது படிக்கும் சிறுவன்.

சக நண்பர்களுடன் பள்ளிக்கு மாருதி வேனில் சிரித்து பேசியபடி பள்ளிக்கு போய்க்கொண்டு இருந்தான்.

நன்றாக போய்க் கொண்டிருந்த வேன் திடீரென தீபிடித்தது. வேன் டிரைவர் வேனில் இருக்கும் பள்ளி சிறுவர்களைப் பற்றி கவலைப்படாமல் தான் மட்டும் உயிர்பிழைத்தால் போதும் என்ற எண்ணத்துடன் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

அதே போல வேனில் இன்னொரு புற கதவருகே இருந்த ஓம்பிரகாஷ் நினைத்திருந்தால் டிரைவரைப்போல கதவைத்திறந்து கொண்டு ஓடி தப்பியிருக்கலாம்,ஆனால் அப்படி செய்யவில்லை. பயத்தில் அழுது அரற்றிய நண்பர்களை காப்பாற்ற கதவை உடைத்து திறந்தவன் ஒவ்வொரு மாணவனாக காப்பாற்ற துவங்கினான்.

ஓம் பிரகாஷையும் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் பயணித்த அந்த வேனில் இருந்து ஆறு பேர்களை காப்பாற்றிவிட்டான். அதற்கு மேல் தீ மளமளவென பிடித்து எரியத்துவங்கியது, ஆனாலும் கவலைபடாமல் வேனிற்குள் நுழைந்து மீதம் இருந்த இரு சிறுவர்களையும் காப்பாற்றினான்.

இந்த கடைசி நேர முயற்சியின் போது கார் கதவின் ரப்பரில் இருந்த தீ ஓம்பிரகாஷின் கன்னத்திலும், முதுகிலும் பட்டு பயங்கரமாக எரிந்தது, ஆனால் அந்த எரிச்சலையும், வலியையும், வேதனையையும் விட தன் நண்பர்கள் உயிரே பெரிதென நினைத்த ஓம்பிரகாஷ் இருவரையும் காப்பாற்றி வெளியே வரவும், வேன் முழுமையாக எரிந்து நாசமானது. சில நிமிடங்கள் தாமதித்து ஓம் பிரகாஷ் செயல்பட்டு இருந்தாலோ அல்லது தனக்கு தீக்காயம் ஏற்பட்டவுடன் பயந்து போய் பாதியிலேயே தனது முயற்சியை கைவிட்டு இருந்தாலோ நிச்சயம் ஒன்றிரண்டு மாணவர்களை தீக்கு பலி கொடுக்கவேண்டி இருந்திருக்கும். கேஸ் சிலிண்டர் ஓடும் வேன் என்பதால் எந்த நேரமும் வெடித்து சிதறும் அபாயமும் இருந்தது.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிறு காயங்களுடன் தனது நண்பர்களை காப்பாற்றி விட்ட பெருமிதத்துடன் நின்ற ஓம்பிரகாஷ்க்கு அப்போதுதான் முகத்தில் ஏற்பட்ட தீவிபத்தின் கொடூரம் புரிய ஆரம்பித்தது. இதற்குள் அக்கம், பக்கத்தில் இருந்து திரண்டு விட்ட மக்கள் அவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

நீண்ட சிகிச்சைக்கு பிறகு ஓம் பிரகாஷ் உயிருக்கு ஆபத்தின்றி பிழைத்துக்கொண்டாலும், நடந்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட வடு அழிக்கமுடியாத அளவிற்கு அவனது முகத்தை சிதைத்து இருந்தது.

ஆனால் அதைப்பற்றி கவலைப்படவில்லை தன்னால் உயிர் பிழைத்த நண்பர்களும், அவரது பெற்றோர்களும், உறவினர்களும் மற்றுமுள்ள பள்ளி நண்பர்களும், ஆசிரியர்களும் பூங்கொத்துடன் தன்னை சந்தித்து வாழ்த்து கூறியதையும், கண்ணீருடன் நன்றியை பகிர்ந்து கொண்டதையுமே பெருமையாக நினைத்தான்.

இவனைப் பெற்றவர்கள் பெருமையாக நினைத்தார்கள், இதையும் தாண்டி சிறுவர்களுக்காக வழங்கப்படும் நாட்டின் வீரதீர சாகச செயலுக்கான (நேஷனல் பிரேவரி அவார்டு) விருதினை ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார்.

இப்போது பள்ளிக்கு வரும் ஓம்பிரகாஷ் யாதவின் முகத்தை பார்க்கும் யாரும் அந்த முகத்தில் உள்ள வடுவை பெருமையாக கருதி அந்த வடு உள்ள முகத்திலேயே முத்தமழை பொழிந்து சந்தோஷப்படுகிறார்கள்.

ஓம் பிரகாஷ் யாதவ் இதெல்லாம் புரிந்தவன் போலவும், புரியாதவன் போலவும் சின்ன புன்னகையுடன் கடந்து செல்கிறான்.

Sunday, March 2, 2014

மறத்தமிழரின் மஞ்சுவிரட்டு

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஆதிமனிதன் குகைகளில் வாழ்ந்தான். வேட்டுவ வாழ்க்கையை மேற்கொண்டு நாடோடி போலத் திரிந்தான். பறவை போன்ற உயிரினங்களோடு போராடியும் வாழ்ந்தான். புன்செய் விவசாயத்தைச் செய்தும் கால்நடைகளை வளர்த்தும் புதிய வாழ்விற்குள் தலைப்பட்டான். நன்செய் வேளாண்மையை மேற்கொண்டு நாகரிகத்தைப் படைத்து நகர வாழ்வை உருவாக்கினான். இச்சூழ்நிலையில்தான் பொழுது போக்கிற்காகவும், உடல்வலிமையை உருவாக்கிக் கொள்வதற்காகவும் விளையாட்டுக்களை அமைத்துக் கொண்டான். தமிழன் படைத்த விளையாட்டுக்கள் ஒன்று மஞ்சுவிரட்டு என்னும் ஏறு தழுவுதலாகும்.
தொல்பழங்காலம்:-
கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்பே பழங்கால நாகரிகங்களை அமைத்துத் தந்தவர்களுள் எகிப்தியரும் மினோவான் மக்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுடைய நாகரிகத்தில் மனிதனுக்கும் காளைக்கும் நடக்கும் போர் காணப்படுகிறது. எகிப்தில் உள்ள பெணி-ஹட்சன் சித்திரங்களிலும், கிரீட் தீவிலுள்ள கினோஸஸ் என்னுமிடத்தில் உள்ள அரண்மனைச் சித்திரங்களிலும் இந்நாகரிகங்களில் இடம் பெற்றுள்ள காளைப்போர் சர்க்கஸ் வித்தைப் போல சித்தரிக்கப்படுகிறது.
அதாவது, காளையின் கொம்பை பிடித்துக் கொண்டு குட்டிக்கரணம் அடித்து காளையின் முதுகின் மேல் பாய்ந்து, பின்பு அருகிலிருக்கும் துணைவர்களின் கைகளுக்குத் தாவுவர், இவ்வகையான ஏறு தழுவல் வளர்ச்சி அடைந்த கலையாகவே காணப்படுகிறது.
சிந்து சமவெளி நாகரிகம்:-
காளை வழிபாடு சிந்து சமவெளி நாகரிகத்தில் சிறப்பிடம் பெற்றதை யாவரும் அறிவர். இதிலிருந்து காளைப்போர் சிந்து சமவெளி மக்களிடையே வழக்கிலிருக்கலாம், என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.
வடநாட்டில் பலவிதமான ஏறுதழுவல்கள் நடைபெற்றன என்று சொல்லப்படுகிறது. இரண்டு காளைகளுக்கிடையேனும், காளைக்கும் மற்றொரு விலங்குக்கும் இடையிலேனும் போர் நிகழ்ந்துள்ளது.
சகாங்கீர் காலத்தில் காளைக்கும், புலிக்கும் இடையே போர் நிகழ்த்தி இரசித்திருக்கின்றனர் என்று வரலாற்று நூல்களிலிருந்து அறியலாம். தமிழரின் வாழ்வு முறைக்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம் ஏறுதழுவலைப்பற்றிக் கூறாதது ஆச்சரியமாக உள்ளது.
சங்க இலக்கியங்கள்:-
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் சங்ககாலத் தொகைப் பாடல்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் ஏறுதழுவல்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இக்காட்சி மலைபடுகடாமில் சிறிது விரிவாகவே இடம் பெற்றள்ளது. ஆநிரையை விட்டுப் பிரிந்து வந்த காளையும், மலையிலிருந்து வந்த ஏறும், புறங்கொடாத வலிமையொடு புண்பட முட்டுகின்றன. இதனைக் கண்டு கோவலரும் குறிஞ்சி நிலத்தவரும் ஆரவாரிக்கின்றனர் என்று மலைபடுகடாம் விவரிக்கின்றது.
கலித்தொகையில்:-
சங்க இலக்கியங்களில் முல்லைக்கலியில் மட்டும்தான் முதன் முதலில் ஏறுதழுவும் காட்சியைக் காணமுடிகிறது. முதல் ஏழு முல்லைக் கலிப் பாடல்களில் ஆறாம் பாடலைத் தவிர தழுவும் காட்சி ஓரங்க நாடகங்களாகக் காட்டப்பெற்றுள்ளது.
ஏறு தழுவலைப் பறையின் மூலமாக அறிவிக்கின்றனர். குறிப்பிட்ட நாளில் தொழுவத்தில் ஏறுதழுவல் நடைபெறுகிறது. எருமை, ஆடு, பசு ஆகிய மூன்றையும் மேய்க்கும் இடையர்கள் இதில் கலந்து கொள்ளச் செய்கின்றனர். தொழுவத்தின் பக்கத்தில் பரண்மேல் வரிசையாக ஆய மகளிர் நிறுத்தப்படுகின்றனர். இன்ன நிறக் காளையை அடக்குபவன் இன்னவளை மணக்கலாம் என்று அறிவிக்கப்படுகின்றது. காளையை அடக்கியவனுக்குப் பெற்றோர்கள் மகட்கொடை அளிக்கின்றனர். ஏறைத் தழுவி மணந்தவன் முலைவிலை கொடுப்பதிலிருந்து விலக்கப்படுகின்றான். ஏறுதழுவும் விழாவுக்குப் பின் மன்றத்தில் குரவைக்கூத்து ஆடப்படுகிறது. இதில் மன்னன் புகழும் மாயோனின் அருளும் போற்றப்படுகின்றன.
கலித்தொகையில் காளைக்கு உவமையாக...
"கூராஅக் களிற்றுணும் கண்ணஞ்சா ஏற்றை
விடாது நீ கொள்கு வையாயிற் படாஅகை
யீன்றன ஆய்மகள் தோள்"
என்ற வரிகள் காளையின் தோற்றத்தைக் குறிப்பதும், அதனை அடக்கும் கோவலரையும் குறிப்பதாக அமைகின்றன.
சிலப்பதிகாரத்தில் ஏறுதழுவுதல்:-
சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் ஏறுதழுவல் பற்றிய காட்சி அமைந்துள்ளது. இவ்வருணணை பெரும்பாலும் முல்லைக்கலியைப் பின்பற்றி அமைந்துள்ளது.
கண்ணகி ஆயர்பாடியில் தங்கியிருந்தபோது மாதரி சிறுமியர் எழுவரை வரவைத்து குரவைக் கூத்து ஆடும்படி பணிக்கின்றாள். அப்போது அவர்கள் ஏழு காளைகள் சிறுவயதிலிருந்து வளர்ப்பது போலவும் உரிய பருவம் வரும்போது அவ்வேற்றை அடக்கும் ஆடவரை மணப்பது போலவும் நடித்துக் குரவைக் கூத்தாடுகின்றனர். இச்செய்தி சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.
பொருளிலக்கண நூல்களில் ஏறுதழுவல்:-
இடைக்காலப் பொருள் இலக்கண நூல்கள் ஏறுதழுவல் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஐயனாரிதனார் எழுதிய வெண்பாமாலையில் ஒழிபியல் என்னும் பிரிவில் பதினெட்டு வென்றிகளைக் கூறுமிடத்து "ஏறுகோள்" வென்றியையும் ஒன்றாகக் கருதுகின்றனர். நம்பி அகப்பொருள் அகப்பெருந்திணைக்குரிய துறைகளைக் குறிப்பிடும் போது "விடைதாழல்" என்னும் தொடரை மட்டும் தருகின்றது. ஆனால் விளக்கம் தரவில்லை.
கிராமியக் கலைகளில்:-
சோழர், நாயக்கர் காலங்களில் மஞ்சுவிரட்டு கிராமத்தலைமையை உருவாக்கும் கிராமக் கலைகளுள் ஒன்றாக மாறியிருக்க வேண்டும். நிலவுடைமை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயத்தில் நிலக்கிழார்க்கும், ஊரகத் தலைவர்களுக்கும் உள்ள கொளரவத்தையும் சர்வாதிகாரத்தையும் அளிக்கும் ஒரு சமுதாய நிறுவனமாக அது வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால் ஆங்கிலேயர் வருகைக்குப் பின் அவர்களின் ஆட்சிக்காலத்தில் தடைவிதிக்கப்பட்டு சிறிது சிறிதாகத் தளர்ந்து வந்ததை அறியலாம்.
இன்றைய வழக்கில் மஞ்சுவிரட்டு:-
கால்நடை பொருளாதாரமும் இணைந்துவிட்ட கிராமியப் பொருளாதாரச் சமுதாயத்தில் "மஞ்சு விரட்டு" என்னும் சல்லிக்கட்டு ஒரு சமயச் சடங்காக மாறிவிட்டது. ஆண்டு தோறும் தைத்திருநாள் பொங்கலுக்குப் பின் கரிநாளன்று மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.
தைப்பொங்கலுக்கு மறுநாள் நடக்கும் மஞ்சு விரட்டு நேர்த்திக் கடனுக்காகக் கட்டப்படும் எருதுக்கட்டு ஓய்வுக்காலத்தில் அல்லது விழாக்காலத்தில் பெரிய அளவில் நடத்தப்படும் சல்லிக்கட்டு என்று மூன்று வகையாகப் பிரிக்கும் ஏறுதழுவலை இன்றும் அலங்காநல்லூர் மற்றும் பிற இடங்களிலும் காணலாம்.
இன்று சல்லிக்கட்டு நடத்தும் மரபு தமிழகக் கிராமங்களில் குறைந்து வருகின்றது. இந்த கிராம விளையாட்டை முறைப்படுத்திச் சிறந்த கலையாக மாற்ற வேண்டியது அவசியமாகும். அரசு வழியாகவும், கிராமிய விளையாட்டு மையங்களின் வழியாகவும் இவ்விளையாட்டை உயிர்ப்பிக்க முடியும் என கருதப்படுகிறது.
நன்றி:- வேர்களைத் தேடி

Saturday, March 1, 2014

ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல்

ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது.

இவ்விளையாட்டு,முல்லை நில (ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்தது. முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக நிகழ்த்தப்படுகிறது.

பண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதல் பற்றி இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளை இங்கு நோக்குவோம்.

பழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல்களில் ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாம் நூலிலும் (330-335), பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.

குறிஞ்சி நில மக்களும் முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர். இதனை,

'இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை' (மலை.330-335)

என மலைபடுகடாம் நூல் குறிப்பிடும்.

ஏறுதழுவுதலுக்கு முதல்நாள் அல்லது அன்றைய நாளில் குரவைக்கூத்து நடைபெறும். முதல்நாள் நடந்தால் பெண்கள் ஏறு தழுவும் வீரன் வெற்றிபெற வேண்டிப்பாடுவர். ஏறு தழுவும் நாளின் மாலையில் குரவைக்கூத்து நடைபெற்றால் வெற்றிபெற்ற வீரனின் வெற்றியைப் புகழ்ந்து பாடுவர்.

வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சிலப்பதிகாரம்,

'மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக்
முல்லையம் பூங்குழல் தான்' (சிலம்பு.ஆய்ச்சி. கொளு.8)
என்று குறிப்பிடும்.

கலித்தொகை

கலித்தொகையின் முல்லைக்கலியில் இடபெறும் பகுதியில் மாடுகளின் நிறம், மாடுகளின் வகை, மாடுகளின் வீரம், அதனை அடக்கும் இளைஞர்களின் செயல், பரண்மீது அமர்ந்து ஏறு தழுவு தலைப் பார்க்கும் பெண்களின் பேச்சுகள், பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் இயல்பு யாவும் சிறபாகக் காட்டப்பட்டுள்ளன.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்து விட்ட இவ் ஏறுதழுவுதல் நிகழ்ச்சி அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றிருக்கவேண்டும்.

பிடவம்பூ, செங்காந்தள்பூ, காயாம்பூ உள்ளிட்ட மலர்களை அணிந்த ஆயர்கள் தம் காளைகளை அடக்குபவர்களுக்குத் தம் மகளைத் தருவதாக உறுதியளித்துச் சிவபெருமானின் குந்தாலிப்படை போன்று மாட்டின் கொம்புகளைக் கூர்மையாகச் சீவினர். அவ் எருதுகள் இடிஒலி போல முழக்க மிட்டுத் தொழுவுக்கு வந்தன. அந்த எருதுகளைத் தழுவியவருக்கு அளிப்பதாகச் சொன்ன மகளிர் வரிசையாய் நிற்பர். அல்லது பரண்மீது அமர்ந்து பார்ப்பர்.

ஏறு தழுவதற்கு முன்பாக அத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் நீர்த்துறைகளிலும், ஆலமரத்தின் கீழும், மாமரத்தின் கீழும் உள்ள தெய்வங்களை வணங்கி முறைப்படித் தொழுவில் பாய்ந்து காளைகளை அடக்குவர். அவ்வாறு அடக்க முற்படுபவனின் மார்பைக் காளைகள் குத்திக்கிழிப்பது உண்டு. அக்காட்சி பாரதக் கதையில் திரொளபதையின் கூந்தலைத் தொட்ட துச்சாதனனின் மார்பைப் பிளந்த வீமனைப்போல் இருந்தது என்று ஏறு தழுவும் காட்சி முல்லைக்கலியில் விளக்கப்பட்டுள்ளது.

பல வகை காளை மாடுகள் ஓரிடத்தில் (பட்டி) அடைக்கப்பட்டு, பின்பு மாடுபிடிக்க விடப்படும். அவ்வாறு அடைக்கப்படிருந்த பல மாடுகளின் காட்சி ஒரு குகையில் சிங்கம், குதிரை, ஆண் யானை, முதலை முதலியவற்றை ஒரே இடத்தில் அடைத்தால் ஏற்படும் நிலைபோல பட்டியில் இருந்தது எனச் சங்க இலக்கியப் புலவன் குறிப்பிட்டுள்ளான்.

ஒரு காளைமாடு இளைஞன் ஒருவனைக் கொம்பால் குத்துகிறது. அவன்குடல் சரிந்து வெளி வருகிறது. அவற்றை அவன் எடுத்து வயிற்றில் இடுகின்றான்; வேறொரு காளை மாட்டில் தொத்திக் கிடப்பவன் காளைமாட்டின் மேல் இடப்பட்ட மாலைபோல் இருந்தான் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பலரை மாடுகள் குத்திக் கிழிப்பாதல் மாடுபிடி களம் குருதிக் கறையுடனும் மரண ஓலத்துடன் விளங்கித் தோன்றியுள்ளது. இது துரியோதனன் உள்ளிட்டவரைக் காவுகொண்ட படுகளம் போல் இருந்தது என(104-4) ஒரு பாடல் குறிப்பிடுகிறது.

எனவே நம் முன்னோர்கள் பல் உயிர்களைக் கொல்ல வாய்ப்புள்ள இடமாகவும், பலருக்குக் காயம் முதலியன விளைவிக்கும் இடமாகவும், நிகழ்வாகவும் உள்ளதை நன்கு அறிந்திருந்த சூழலிலும் ஏறு தழுவுதலை வீரக்கலையாகவே ஏற்றுக்கொண்டிருந்தனர்.

'கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே,ஆயமகள்' (கலி.முல்லை.103 63-64)

என ஏறுதழுவும் இளைஞர்களைப் பண்டைத்தமிழ்ப் பெண்கள் விரும்பி மணம் முடித்தமையை முல்லைக்கலி குறிப்பிடுகின்றது.

கொலைத் தொழிலையுடைய காளையை அடக்கும் வலிமையில்லாதவனைப் பண்டைக்கால ஆயமகளிர் மணப்பது இல்லை. எனவே தமிழர்களின் திருமண வாழ்வுடன் தொடர்புடைய ஏறு தழுவுதல் மிகப்பெரிய இனக்குழு அடையாளமாகக் கருதலாம்.

காலப் பழைமையால் பல்வேறு மாற்றங்களுடனும், சமூக நிலைகளுக்கு ஏற்பவும் இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்பட்டாலும் இது தொன்மையானது என்பதிலும், மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதிலும் ஐயமில்லை. தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான ஏறுதழுவுதல் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.

-முனைவர் மு.இளங்கோவன்

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar