"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Wednesday, May 27, 2015

29ஆம் தேதி நெல்லையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:மும்பை யாதவ மகா சபை .மற்றும்.இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்.

இந்திய மக்கள் கல்வி
முன்னேற்றகழகமும ்,மும்பை யாதவ மகா சபையும் , வரும் 29ஆம் தேதி நெல்லையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், போரட்டம் ,நெல்லை இரயில் நிலையம் முன்பாக 29 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது ஏனென்றால் நமது சமுதாயத்தை சேர்ந்த ரயில்வேதுறையில் பணிபுரிந்த
சங்கரபாண்டி என்பவர் மேலதிகாரியின் சூழ்ச்சியின் சதியால் மின்சாரம்
பாய்த்து படுகொலைசெய்யப்ப ட்டார் .இன்னும் நாம் தூங்கிகிடந்த நிலமை
போதும் பொங்கிஎழுவோம் இதற்க்கு நீதி கிடைக்க வேண்டும். எத்தனை
குருசாமி யாதவ் அய்யப்பன் யாதவ்  நயினார் யாதவை, நாம் இழந்தது
போதும் இனியும் இழக்கக்கூடாது, நெல்லையில்அனைத் து ஊர்களில்
இருந்தும் திரளான இளைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
இன ஒற்றுமையை பாதுகாக்க  ஆர்ப்பாட்டத்தில ் கலந்துகொள்ளுங்க ள்,

மும்பை யாதவ மகாசபை
.மற்றும்.இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்.

Tuesday, May 26, 2015

அழகுமுத்துகோனின் குருபூஜை விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்டம் யாதவா இளைஞர் பேரவையின் விளம்பரங்கள்

ஆண்ட இனமே! ஆயர் குலமே! அணி திரண்டு வாரீர் மாவீரர் அழகுமுத்துகோனின் குருபூஜை விழாவிற்கு

நாள் : ஜூலை11
இடம் : கட்டாலங்குளம் தூத்துக்குடி மாவட்டம்


அமைப்பு :
புதுக்கோட்டை மாவட்டம் யாதவா இளைஞர் பேரவை

என்றும் சமுதாய பணியில் ஏஆர்.கண்ணன் யாதவ்
தொடர்புக்கு : 9943055190, 9943055191








Monday, May 25, 2015

60-வது ஆண்டு "கேரளா யாதவ சபை - வைரவிழா

60-வது ஆண்டு "கேரளா யாதவ சபை - வைரவிழா" நிகழ்ச்சியை அய்யா கோபாலகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள் அந்த வரலாற்று சிறப்பு மிக்க விழாவில் யாதவர் தன்னுரிமைப் பணியகம் சார்ப்பாக சொ.நீலகண்டன், பா.வரதராஜன், ப.கந்தவேலு, பெரி.கபிலன் மற்றும் இரா.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.


மூன்று நாள் இடைவிடா மழையிலும் வைரவிழாவில் கேரளா மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் மற்றும் நம் சமூக உறவுகள் 5000-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். வைரவிழாவை இளைஞர்கள் மிகச்சிறப்பாக செய்து முடித்தார்கள்.

நன்றி !!!




Saturday, May 16, 2015

தச்சநல்லூரில் படுகொலை செய்யப்பட்ட பொன்னையா யாதவ் குடும்பத்தினருக்கு யாதவ மகாசபை நிதி உதவி

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் படுகொலை செய்யப்பட்ட பொன்னையா யாதவ் குடும்பத்தினருக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் தனது சொந்த நிதியிலிருந்து ஒருலட்சத்து அறுபத்துஓராயிரத்தை (1,61,000) இன்று நெல்லையில் பொன்னையா யாதவ் குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினார் .திருநெல்வேலி மாவட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர் .

Wednesday, April 1, 2015

குழலால் ஈசனை மயக்கிய இடையர்

ஆனாய நாயனார்

(குருபூஜை நட்சத்திரம்: கார்த்திகை  – ஹஸ்தம் )
(நவ. 19)

சோழவளநாட்டு மேன்மழநாட்டில் திருமங்கலம் என்ற மூதூரில் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார். அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர்; மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும் சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேணாதவர்; தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர்.
.
பசுக்களைச் சேர்த்து, அகன்ற புல்வெளியிற் கொண்டு சென்று, அச்சமும், நோயும் அணுகாமற் காத்து, அவை விரும்பிய நல்ல புல்லும், நன்னீரும் ஊட்டிப் பெருகுமாறு காத்து வருவார். இளங்கன்றுகள், பால்மறை தாயிளம் பசு, கறவைப்பசு, சினைப்பசு, புனிற்றுப்பசு, விடைக்குலம் என்பனவாக அவற்றை வெவ்வேறாக பகுத்துக் காவல் புரிவார். ஏவலாளர்கள் அவர் எண்ணிய வண்ணம் பணிவிடை செய்வர். தாம் பசுக்களை மேயவிட்டு, புல்லாங்குழலிலே பெருமானாரது அஞ்செழுத்தைப் பொருளாகக் கொண்ட கீதமிசைத்து இன்புற்றிருபபர்.
.
இப்படி நியதியாக ஒழுகுபவர், ஒருநாள் தமது குடுமியிற் கண்ணி செருகி, கண்டோர் மனம் கவர திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச் சாத்தி, கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச் சாத்தி, அதனைத் திருமேனியிலும் மார்பிலும் பூசி, முல்லை மாலை அணிந்து, இடையில் மரவுரி உடுத்து, கையினில் மென்கோலும் வேய்ங்குழலும் விளங்கக் கொண்டு, கோவலரும் ஆவினமும் சூழப் பசுக்களைக் காக்கச் சென்றார்.
.
சென்ற அவர் அங்கு மாலை தொடுத்தது போன்ற பூங்கொத்துக்களும், புரிசடை போல் தொங்கும் கனிகளும் நிறைந்த ஒரு கொன்றையினைக் கண்டார். அது மனத்துள்ளே எப்பொழுதும் கண்டுகொண்டுருந்த கொன்றை மாலை சூடிய சிவபெருமானைப் போல அவருக்குத் தோன்றவே, அதனை எதிர்நோக்கி நின்று உருகினார். ஒன்றுபட்ட சிந்தையில் ஊன்றிய அன்பு தம்மை உடையவர்பால் மடைதிறந்த நீர்போல் பெருகிற்று. அன்பு உள்ளூறிப் பொங்கிய அமுத இசைக்குழல் ஓசையில் சிவபெருமானது திருவைந்தெழுத்தினையும் உள்ளுறையாக அமைத்து, எல்லா உயிர்களும் எலும்புங் கரையும்படி வாசிக்கத் தொடங்கினார்.
.
நூல் விதிப்படி அமைந்த வங்கியம் என்னும் வேய்ங்குழல் தனித் துறையில், ஆனாயார் மணி அதரம் பொருந்தவைத்து, ஏழிசை முறைப்படி இசை இலக்கணம் எல்லாம் அமையச் செய்து, திருவைந்தெழுத்தை உள்ளுறையாகக் கொண்ட வேய்ங்குழல் இசை ஒலியை எம்மருங்கும் பரப்பினார். அது கற்பகப்பூந்தேனும் தேவாவமுதமும் கலந்து வார்ப்பது போல எல்லா உயிர்களுக்குள்ளும் புகுந்து உருக்கிற்று.
.
மடிமுட்டி பால் குடித்து நின்ற பசுக்கன்றுகள் பால் நுரையுடன் அவர் பக்கத்தில் வந்து கூடின. எருதுக் கூட்டங்களும் காட்டுவிலங்குகளும் இசைவயப்பட்டுத் தம் உணவு மறந்து மயிர்சிலித்து வந்து சேர்ந்தன. ஆடும் மயிலினமும் மற்றைய பறவை இனமும் தம்மை மறந்து நிறைந்த உள்ளமோடு பறந்து வந்து சேர்ந்தன. ஏவல்புரி கோவலரும் தமது தொழில் செய்வதை மறந்து நின்றனர்.
.
நலிவாரும், மெலிவாரும், தம்மியல்பு மறந்து இசையுணர்வினாலாகிய உணர்ச்சி ஒன்றேயாகி நயத்தலினால், உயிர்வகைகள் தத்தமது பகைமையை மறந்து, ஒன்று சேர்ந்து வந்து கூடின. காற்றும் அசையா, மரமும் சலியா, மலைவீழ் அருவிகளும் காட்டாறும் பாய்ந்தோடா, வான்முகிலும் ஆழ்கடலும் அசையா, இவ்வாறு நிற்பனவும், இயங்குவனவும் ஆகிய எல்லாம் இசைமயமாகி ஐம்புலனும் அந்தக் கரணமும் ஒன்றாயின.
.
ஆனாயர் இசைத்த குழலிசையானது, வையத்தை நிறைத்தது; வானத்தையும் தன் வசமாக்கிற்று. இதற்கெல்லாம் மேலாக இறைவரது திருச்செவியின் அருகணையவும் பெருகிற்று. சிவபெருமான் இடப வாகனத்தின்மேல் உமையம்மையாருடன் எழுந்தருளி எதிர்நின்று காட்சி தந்தனர்.
.
அக்குழல் வாசனையை என்றும் கேட்பதற்கு இந்நின்ற நிலையே பூமழை பொழிய, முனிவர்கள் துதிக்கக் குழல் வாசித்துக்கொண்டே அந்நின்ற நிலையோடு ஆனாயநாயனார் அரனாரின் அருகு அணைந்தார்.
.
“அலைமலிந்த புனல் ஆனாயற் கடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் பாடுகிறார் சுந்தரர். இசையால் இறைவனை அடைய முடியும் என்பதற்கான சான்று நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப்படும் ஆனாய நாயனார்.

Tuesday, March 31, 2015

திருமந்திரம் தந்த திருமூலவரின் கதை!

திருவாவடுதுறை! இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவனின் பெயர் பசுபதியார். சிவ வாகனமான ச்நந்தியின் அருளைப் பெற்றவர்களில் சுந்தரநாதர் இவருக்கு அகத்தியரைக் கண்டு அவருடன் சில நாட்கள் தங்க விருப்பம் ஏற்பட அகத்தியரைக் காண புறப்பட்டார். அவர் செல்லும் வழியில் திருவாவடுதுறையில் உள்ள பசுபதிநாதரை வணங்கி சில காலம் அங்கேயே தங்கி, அங்குள்ள பிற தலங்களையும் தரிசிக்க நனைத்து காவிரியாற்றின் கரை வழியாக போய்க்கொண்டிருந்தார். அங்கு சாத்தனூரைச் சேர்ந்த இடையர் குல மூலன் என்பவன் பசுக்களை மேய்த்து கொண்டிருந்தான். இவன் அன்போடு மாடுகளை மேய்த்து அதன் மூலம் நல்ல வருமானம் பெற்று குடும்பத்தை நடத்தி வந்தான். அன்றும் மூலன் பசுக்களை மேய்த்துக்கொண்டிருக்கும்போது அவனது வாழ்நாள் ¬முடிந்து விட திடீரென மூலன் இறந்து விட்டான். இதைக்கண்ட இவன் அன்புடன் மேய்த்த பசுக்கள் எல்லாம் இவனைப் பிரிந்த துக்கத்தில் கதறி இறந்த மூலனின் உடலை நாக்கால் நக்கி அங்குமிங்கும் சுற்றித்திரிந்தன. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரநாதர் மூலனின் பிரிவால் அனைத்து பசுக்களும் பட்டினி கிடந்து உயிரை விட்டுவிடும் என நினைத்தார். எப்படியாவது பசுக்களில் உயிரைக்காப்பாற்ற வேண்டும் என உறுதி பூண்டார். கூடுவிட்டு கூடுபாயும் வித்தையைக் கற்றிருந்த தவசியார் மூலன் உடலுக்குள் தம் உயிரைப் புகுத்தினார்.

அவ்வளவுதான். மூலன் உறங்குபவன்போல் கண்விழித்து திருமூலராய் எழுந்தான்.இதனைக் கண்ட பசுக்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. திருமூலராகிய சித்தருக்கு சந்தோஷம் தாங்க ¬டியவில்லை. பின்னர் பசுக்களையெல்லாம் அதற்குரிய இடத்தில் சேர்த்துவிட்டு தான் மட்டும் வீட்டிற்கு செல்லாமல் மூலனின் வீட்டு நிலையை தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். மூலனுக்கோ திருமணம் ஆகி இருந்தது. என்னசெய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது மூலனின் மனைவி அவன் வீடு வர தாமதமானதால் அவனை தேடி வந்தும் விட்டாள். மூலனிடம் தாமதத்திற்கான காரணம் கேட்டாள். மூலனோ மவுனம் சாதித்தார். இதனால் வருத்தமடைந்த அவள் திருமூலரின் கையைப்பிடித்து வீட்டிற்கு அழைத்தாள். பதறிப்போன திருமூலர் அவளிடம் இனிமேல் நான் உன் வீட்டிற்கு வரமாட்டேன். உனக்கும் எனக்கும் இனி எந்த உறவும் கிடையாது எனவே நீ சிவனை வழிபட்டு அமைதி அடைய வேண்டும் என்று கூறியதோடு பக்கத்திலிருந்து மடத்திற்கு சென்று தியானத்தில் ஆழ்ந்தார். கவலையுடன் வீடு திரும்பிய அவள் மறுநாள் தன் சுற்றத்தாருடன் திருமூலரை சந்திக்க சென்றாள். அங்கு நிஷ்டையில் இருந்த அவரின் முகத்தில் தெய்வ சக்தி ஜொலித்தது. இதைக்கண்ட அனைவரும் திகைத்தனர். இருந்தாலும் அந்த பெண்ணிற்காக திருமூலரிடம் வாதாடினர். எந்த பலனும் இல்லை.

அதன் பின் தான் திருமூலர் ¬முனிவர் என்பதையும் அவருடன் வாழ்வது முடியாத காரியம் என்பதையும் தெளிவாக அந்த பெண்ணிடம் சுற்றத்தார் தெரிவித்தனர். இதைக்கேட்ட அந்தப்பெண் அழுது புலம்பி பின் திருமூலரை வணங்கிவிட்டு தன் இருப்பிடம் சேர்ந்தாள். சிறிது நேரத்தில் யோகநிலை கலைந்த திருமூலர் மறைத்து வைத்திருந்த பழைய திருமேனியை தேடினார். கிடைக்கவில்லை. இறைவன் அருளிய ஆகமப் பொருளை தமிழிலே வகுத்து உலகிற்கு உணர்த்தவே சிவன் தன் உடலை மறைத்துவிட்டார் என்பதை தன் ஞான திருஷ்டியால் திருமூலர் உணர்ந்தார். உடனே இறைவனின் கட்டளையை நிறைவேற்றிட திருவாவடுதுறை பசுபதிநாதரை வணங்கி கோயில் மதிலுக்கு மேற்கு பக்கமாக அமைந்துள்ள அரசமரத்தடியில் அமர்ந்து சிவயோகம் செய்ய ஆரம்பித்தார். சிவயோகத்தில் நிலைத்துநின்று இதய கமலத்தில் எழுந்தருளிய எம்பெருமானுடன் ஒன்றினார். இங்குதான் மூவாயிரம் மந்திரங்கள் அடங்கிய திருமந்திரத்தை இயற்றினார். சிவயோக நுணுக்கங்களை விளக்கமாகக்கூறும் திருமந்திரம் ஓர் அற்புதமான அறநூல்! இப்புனிதமான திருமந்திரத் திரு¬றைக்கு நிகராக வேறு திருமுறைகளே இல்லை.

இடையர்கள் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள்

இடையர்கள் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள்
ஓர் இடையன் பாலைக் கொடுத்து அதற்கு ஈடாய் தானியத்தைப் பெற்றுக்கொண்டதை முதுகூத்தனாரின் குறுந்தொகைச் செய்யுள் விளக்குகிறது.


"பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாருடை இடையன்'' (குறு.221:3-4)

இடைச்சியர் நெய்யைப் பண்டமாற்று செய்யாமல், காசுக்கு விற்று அக்காசுகளைச் சேமித்து, குறிப்பிட்ட தொகை சேர்ந்த பின்னர் அக்காசுகளைக் கொடுத்துப் பசுவையும், எருமையையும் விலைக்கு வாங்கினர் என்பதை, பெரும்பாணாற்றுப்படை தெரிவிக்கிறது (பெரும்பாண்.164-166)

ஆயர்களின் உணவு குறித்து தமிழ் இலக்கியப் பதிவுகள்

ஆயர் உணவு

முல்லை நிலத்தில் வாழ்பவர்கள் ஆயர் ஆவார். காடும் காடு சார்ந்த நிலத்தில் வாழும் ஆயராகிய இடையர்கள் ஆடுமாடுகளைச் செல்வமாகக் கொண்டவர்கள். இவர்களுடைய உணவு காடுகளாகிய புன்செய் நிலத்தில் விளையும் தானியங்களே ஆகும். நண்டுக்குஞ்சுகளைப் போலக் காணப்படும் தினைச்சோறும் காலும் அவர்கள் உண்ணும் உணவாகும். இவ்வுணவைத் தாமும் உண்டு தம் விருந்தினருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர் என்பதை,

“மடிவாய்க் கோவலர் குடிவயின் சேப்பின்
இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவீர்” (166-168)

-என்ற பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது.
ஆடுகள் மேய்த்து வந்த ஆயர்கள் பாலுணவை அதிகம் உண்டனர். அவர்ளின் இருப்பிடத்திற்கு வந்தவர்களுக்கு பசும்பாலை உண்பதற்காக்க் கொடுத்தனர். இதனை,

“வேறுபுலம் படர்ந்த ஏறுடையினத்த
வளைஆன் தீம்பால் மிளைசூழ் கோவலர்
வளையோர் உவப்பத் தருவனர் சொரிதலின்
பலம பெறுநசையொடு பதிவயின் தீர்ந்தநும்
புலமபுசேண் அகலப் புதுவிர் ஆகுவிர்” (408-412)

-மலைபடுகடாம் குறிப்பிடுகின்றது. இவ்வரிகளில் ஆயர்பெருமக்களின் அன்புள்ளத்தைக் காணலாம். மேலும் அவர்கள் இரவில் பாலையும் பாற்சோற்றையுதம் உண்பார்கள். விருந்தினர்களுக்கும் கொடுப்பர் என்பதை,

“கல்லென் கடத்திடைக கடலின் இரைக்கும்
பல்யாட்டு இனநிரை எல்லினிர் புகினே
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவீர்” (415-417)

-மலைபடுகடாம் மொழிகின்றது.

நன்றி
இடையர் விழுதுகள்

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar