"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Wednesday, October 14, 2015

ஆயர் குல ஆராய்ச்சியாளர் : நெல்லை மாவட்டம் களக்காட்டை அருணாசலகுமார்

இவர்  கண்டுபிடிப்புகளை நிருபிக்க வாய்ப்பு ஏற்படுத்த தர வேண்டுகிறோம்.
முடிந்தவர்கள் உதவவும். 
இணையத்தில் பகிரவும்

From
            S. Arunachala Kumar yadav
            69/25 Kottai Yathavar Main Street
            Kalakad – 627501, Tirunelveli Dist.
            Tamilnadu, India Cell: 9865181457
            Email: balakf@gmail.com


    Respected ,
            Good Morning, I am one of the scientist I have researched 22 research that is space research is very very important. A heavy fuel storage on the space first my research explanation and formula next sample of space fuel and another than supply of world people my research is valuable of one. Please request of consider my letter. Supply of the world all people in fuel storage on the space. My research is confirmed it. My research explanation and formula consulting for you a new world record and world people main problem solve of my research, request please co-operation with me your’s any step appreciate it and follow my research use in all people.

Repeatly please help for me
Thank You,
I am waiting for your’s valuable reply,
FOR HELP ME.

                                                                                                               Yours faithfully
Place: Kalakad ,tirunelveli,tamilnadu,INDIA                                   S. Arunachala Kumar yadav 
                                                                                                               Cell: 9865181457
















சோலார், காற்றாலை மூலம் கூடுதல் மின்உற்பத்தி : பட்டதாரி வாலிபர் கண்டுபிடிப்பு:

சோலார் மற்றும் காற்றாலைகள் மூலம் கூடுதலாக மின்சாரம் தயாரிக்க முடியும் என களக்காட்டை சேர்ந்த பட்டதாரி வாலிபர் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்தவர் அருணாசலகுமார்(40). சமூகவியல் முதுகலை பட்டதாரியான இவர் நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டு பிடித் துள்ளேன். விஞ்ஞானி ஐசக் நியூட்டன், பூமிக்கு புவிஈர்ப்பு விசை உண்டு என்று கண்டுபிடித்தார். அந்த விசைமட்டுமல்ல, ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினையும் இருக்கிறது என்பதை நான் கண்டறிந்தேன். பம்பரத்தை சுழலவிடுவது, நாணயத்தை சம தளத்தில் சுழலவிடுவது போன்ற செயல்களுக்கு இருவிதமான விசை தேவைப்படுகிறது என்பதை என்னால் நிரூபிக்க முடியும். 


மேலும் ஏற்கனவே காற்றாலை, சோலார் ஆகியவற்றில் இருந்து தற்போது பெறப் படும் மின்சார அளவைவிட அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் முறை உள்ளிட்ட 9 விதமான புதிய அறிவியல் ஆய்வு களை கண்டறிந்துள்ளேன். விண்வெளி நிகழ்வு தொடர்பான 6 புதிய கண்டு பிடிப்புகள் என்னி டம் உள்ளது.


இதுதொடர்பாக நாசா விஞ்ஞானிகளுக்கு நான் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அவர்கள், கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக இணையதளம் மூலம் என்னிடம் தொடர்பில் உள்ளனர். எனது அறிவியல் கண்டுபிடிப்புகளை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் போன்ற பெரிய விஞ்ஞானிகள் முன்னிலையில் நிகழ்த்தி காட்ட தயாராக உள்ளேன். அதற்கான வாய்ப்புகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி தரவேண்டும் என்றார்.

இவர்  கண்டுபிடிப்புகளை நிருபிக்க வாய்ப்பு ஏற்படுத்த தர வேண்டுகிறோம்.
முடிந்தவர்கள் உதவவும். 
இணையத்தில் பகிரவும்

கல்வெட்டை தெய்வமாக வழிபடும் கிராமத்தினர்: பாரம்பரிய நடைபயணத்தில் ருசிகர தகவல்


கி.பி. 14-ம் நூற்றாண்டை சேர் ந்த பழங்கால கல்வெட்டை கிராம மக்கள் தெய்வமாக வழிபட்டு வருவதாக பாரம்பரிய நடை பயணத்தில் தெரிவிக்கப்பட்டது.

தானம் அறக்கட்டளை சார்பில் மதுரை அருகே யா.கொடிக்குளம் கிராமத்தில் பாரம்பரிய நடைபயண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பேராசிரியர் வெங்கட்ராமன் கூறியது: மண் சார்ந்த மரபின் வெளிப்பாடாக நாட்டுப்புறத் தெய்வங்கள் திகழ்கின்றன. வெள்ளைச்சாமி, கருப்புச்சாமி, அய்யனார், வீரணன் என பல பெயர்களால் இன்றளவும் மக்கள் வழிபட்டு வருகின்றனர். யா. கொடிக்குளத்தில் அமைந்துள்ள பகுதி தூங்காவனம் என்றும், அழகிய மணவாளன் திருநந்தவனம் என்றும் அழைக்கப்பட்டுள்ளதை இங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கரையில் அமைந்துள்ள வேதநாராயணப் பெருமாள் கோயிலில் கி.பி. 1308-ம் ஆண்டு குலசேகர பாண்டியனின் அதிகாரி சுந்தரபாண்டிய சோழக் கோனார் என்பவர் திருப்பணி மேற்கொண்டதாக, திருமோகூர் காளமேக பெருமாள் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இங்குள்ள இலுப்பையூற்று கிணறுதான் கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்றார்.

ஒருங்கிணைப்பாளர் பாரதி கூறியது: சிவன் கோயிலோடு குலசேகரன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டை கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர். இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்த பொய்கை பகுதியை பாதுகாப்பதில் தீவிர பங்காற்றி வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்றார்.

Tuesday, October 6, 2015

திருநெல்வேலியில் யாதவர் பண்பாட்டுக் கழகம் சார்பில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை



திருநெல்வேலியில் யாதவர் பண்பாட்டுக் கழகம் சார்பில் திங்கள்கிழமை மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

யாதவர் பண்பாட்டுக் கழக செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் எஸ். சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் உயர்கல்வி பயிலும் மாணவிகள் பி. இசக்கியம்மாள், ஏ. ராஜவேணி ஆகியோருக்கு தலா ரூ. 10 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

தென்மண்டல யாதவ முன்னேற்றச் சங்கத் தலைவர் கே. ராமகிருஷ்ணன், அரிமா வானமாமலை, அமைப்பின் நிர்வாகிகள் காந்திராஜன், விநாயகம், எஸ்.ஆர். வெங்கடாசலம், வேலுதாஸ், இசக்கிமுத்துதாஸ், வேலு, பால்துரை, பண்டாரம், சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சங்க பொன்விழாவை சிறப்பாக நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலர் டி. ராமசாமி வரவேற்றார். பொருளாளர் கே. பாவநாசம் அறிக்கை வாசித்தார். துணைத் தலைவர் சுப்பையா நன்றி கூறினார்.

Friday, October 2, 2015

கரந்தைத்திணை

ஆநிரைகளைக் கவர்தல் தான் போருக்குத் தொடக்கமாக அமைகின்றது. ஆநிரை கவர்வோர் செயலை ஆநிரையை மீட்போர் மிகக் கடுமையாக எதிர்த்துப் போரிடுவர்.

பகைவன் நாட்டைக் கைப்பற்றவோ, அவ்வரசனின் மகளைப் பெண் கேட்டு, அவன் தர மறுக்கும்போதோ, போர் நடத்தப்பெறுதல் பெரும்பான்மை நிகழ்வாக இருக்கும். சில நேரங்களில் இகழ்ந்து பேசியதாலும் இகழ்ச்சிக்கு ஆட்பட்டவன் போர்தொடுத்தலும் நடைபெற்றுள்ளது.

புறத்திணைகள் போர்ப் பிரிவுகளைக் கூறினாலும் அவற்றிற்குரிய துறைகள் போரின் சிறு சிறு நிகழ்வுகளைக் கூறுவன ஆகும்.

போருக்கு அடிப்படைக் காரணம் உலகப் பொருள்கள் மேல் ஆசையும், பெண்ணாசையுமே ஆகும். புறத்திணைகளில் ஒன்றானகாஞ்சித் திணை உலக நிலையாமையை எடுத்துரைக்கிறது. வாழ்வில் ஏற்படும் பல்வேறு அனுபவங்களையும் இது எடுத்துக்கூறுகின்றது. ஆசைகளால் பயன் இல்லை என்கிறது இது.

போர் தொடங்குவதில் இருந்து போர் முடிந்து வெற்றி பெற்றோ, தோல்வியுற்றோ வரும்வரை ஓர் ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் தான் போர் நிகழ்விற்கும் ஓர் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களில் உள்ளபுறநானூறு, பதிற்றுப்பத்து ஆகியவையும், பத்துப்பாட்டில் உள்ளஆற்றுப்படை இலக்கியங்களும் மதுரைக் காஞ்சியும் மேற்கண்ட புற இலக்கணப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டே இயற்றப்பட்டுள்ளன.

வெட்சித்திணை:



பழைய காலத்தில் பகை அரசனிடம் போர்செய்ய நினைக்கும் ஒருவன் போரின் முதல் கட்டமாகப் பகைஅரசனது பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்வான். இதுவெட்சித்திணை எனப்படும். வெட்சி வீரன் வெட்சிப் பூச் சூடி,போருக்குச் செல்வான்.


கரந்தைத்திணை: பகை அரசன் கவர்ந்து சென்ற பசுக்கூட்டங்களை அவற்றிற்கு உரியவன் மீட்டுவரச் செய்யும் போர்,கரந்தைத்திணை எனப்படும். கரந்தை வீரன் கரந்தைப் பூச் சூடி,போருக்குச் செல்வான்.

ஆநிரை மீட்கச் செல்லல்

வெட்சி வீரர்கள் கவர்ந்து சென்ற தமது ஆநிரையைக் கரந்தை வீரர் மீட்டு வருதல் பொருட்டுச் செல்வதைப் பற்றிக் கரந்தை அரவம், அதரிடைச் செலவு என்னும் இரு துறைகள் கூறுகின்றன(அதா் - வழி).


கரந்தை அரவம்

பறிகொடுத்த ஆநிரைகளை மீட்பதற்காக, மன்னனின் ஆணைப்படி மறவர் கூடுகின்றனர். அப்போது எழும் முழக்கம் ஆதலின் கரந்தை அரவம்எனப்பட்டது. அரவம் - ஒலி; ஓசை.

கொளுவின் பொருளும் கொளுவும்
தமது ஆநிரைகளை வெட்சியார் கைப்பற்றிய செய்தியை அரசன் பறையறைந்து தெரிவித்தான். அதனைக் கேட்டவுடனேயே கரந்தையார் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையை மேலும் தொடராமல் அப்படியே போட்டுவிட்டு விரைந்து ஓரிடத்தில் குழுமினர். குழுமிய அதனைக் கூறுவதுகரந்தை அரவம் எனப்பெறும்.

நிரைகோள் கேட்டுச் செய்தொழில் ஒழிய

விரைவனர் குழூஉம் வகைஉரைத் தன்று.
எடுத்துக்காட்டு வெண்பா:

கால்ஆர் கழலார்; கடும்சிலையார்; கைக்கொண்ட

வேலார்; வெருவந்த தோற்றத்தார்; - காலன்

கிளர்ந்தாலும் போல்வார்; கிணைப்பூசல் கேட்டே

உளர்ந்தார்; நிரைப்பெயர்வும் உண்டு.




வெண்பாவின் பொருள்

கரந்தை மறவர்கள், தமது காலிலே வீரக்கழலை உடையவர்கள்; கையிலே, கொடுமையை வெளிப்படுத்தும் வில்லை உடையவர்கள்; வேலினையும் கொண்டவர்கள்; தம்மைக் கண்டவரை அஞ்சவைக்கும் தோற்றப் பொலிவை உடையவர்கள்; கூற்றுவனாகிய எமன் வெகுண்டது போன்ற சினத்தை உடையவர்கள். இவர்கள், ‘பசுநிரையை வெட்சிமறவர் கவர்ந்து சென்றனர்’ என்ற செய்தியை அறிவிக்கும் தடாரியின் ஓசையைக் கேட்டதும் போருக்கு எழுந்தனர். ஆதலால், இவர்கள் வெட்சியார் கவர்ந்து சென்ற பசுவின் திரளை மீட்கக் கூடும்.

துறைப் பொருத்தம்

இதனால், நிரை மீட்கும் போரில் ஒரு பகுதியை உரைத்தமை புலனாகின்றது.


அதரிடைச் செலவு


அதர் - வழி; செலவு - செல்லுதல். நிரை மீட்சியில் இறங்கிய கரந்தையார், வெட்சி மறவர்கள் நிரையுடன் செல்லும் வழியிடைச் செல்வது பற்றிக் கூறுவதால், அதரிடைச் செலவு எனப் பெற்றது.


கொளுவின் பொருளும் கொளுவும்

தம்மால் போற்றப்படாத வெட்சி மறவர் தாம் கவர்ந்து சென்ற ஆநிரையோடும் போன வழியில் கரந்தையார் அவற்றை மீட்கும் பொருட்டுச் சென்றதைச் சொல்வது, அதரிடைச் செலவு என்னும் துறையாகும்.

ஆற்றார் ஒழியக் கூற்றெனச் சினைஇப்

போற்றார் போகிய நெறியிடை ஏகின்று

Saturday, September 5, 2015

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் நரிவிழா கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா(05.09.2015)

யாதவ சொந்தங்களுக்கு வணக்கம்
பரமக்குடி வட்டம் நரிவிழா கிராமத்தில்
நடைபெற்ற ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவில்
கோகுலம் அறக்கட்டளை நரிவிழா தோழர்கள் சார்பாக குழந்தைகளுக்கு நோட்டு பத்தகம் வழங்கப்பட்டது
இதற்க்கான ஏற்ப்பாடுகலை ம.மோகன்ஜீ யாதவ் கு.திருஜீ யாதவ் தலமையில் செய்யபட்டது
உறுப்பினர்கள்:
மு.சேதுராஜ் யாதவ்
க.குருஜீ யாதவ்
ஆ.ஜனாஜீ யாதவ்
இ.அக்கைக்குமார் யாதவ்
இவர்க்ளுக்கு நன்றி
என்றும் சமுதாய பணியில்
ம.மோகன்ஜீ யாதவ்(நரிவிழா)
இனையதள பொருப்பாளர்
கோகுலம் அறக்கட்டளை தோழர்கள்
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி
மற்றும்
கோகுல யாதவ இளைஞர் சங்கம்
கோகுல இளம் உள்ளங்கள்
முல்லை மகளிர் மன்றம்
நரிவிழா








Tuesday, September 1, 2015

கோகுலம் அறக்கட்டளை சார்பகா மாவீரன் அழகுமுத்துக்கோன் இசை வெளீயிடு






கோகுலம் அறக்கட்டளை சார்பாக 30.08.2015 அன்று மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் அவர்களின் பாடல் வெளியிட்டு விழா சிறப்பாக நடைபெற்றது இதில் காலை 8 மணியளவில் கட்டாளங்குளத்தில் மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அனிவித்து மறியாதை செய்யபட்டது பின்பு கோவில்பட்டி ரோவா பிளாசா ஹோட்டலில் 11 மணியளவில் பாடல் வெளியிடபட்டது இதற்கு சிறப்பு விருந்தினராகா க் K.கண்ணாயிரம் யாதவ் பரமக்குடி சுபாஸ் அய்யா அவர்கள் மாவீரன் அழகு முத்துக்கோன் வரலாற்று ஆசிரியர். மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் வாரிசுதாரர் வணஜா அம்மா. மணிவண்ணன் அவர்கள் யாதவ இளைஞர் மாக சபை தமிழ்நாடு. மற்றும் கோகுலம் அறக்கட்டளை தோழர்கள்,நிர்வாகிகள் முன்னிலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் கோகுலம் அறக்கட்டளை இயக்குனர் திரு வெங்கிவரன் நிகழ்ச்சியை முடித்துவைத்தார்

இவண்.
 JRK.மூர்த்தியார்யாதவ்
 நிறுவன தலைவர்
மோகன்ஜுயாதவ்
இனையதள பொருப்பாளர்
கோகுலம் அறக்கட்டளை-தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar