"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Wednesday, September 28, 2016

ராமானுஜரின் திவ்யப் பிரபந்த ஈடுபாடு

ராமானுஜர் சமயக் கருத்துகளைக் கூற ஏற்ற மொழியாக இருந்த காரணத்தால், வடமொழியில் ஒன்பது நூல்களை இயற்றினார். ஆனால் தமிழ் நூல்கள் எதற்கும் விளக்கவுரை எழுதவில்லை. இதனால் இவருக்குத் தமிழ்ப் புலமை குறைவாக இருக்குமோ என்று கருதுபவரும் உண்டு.

இவர் இயற்றிய தனியன்கள்: (நூலை விட்டு தனியே இருப்பது தனியன்)




வாழி பரகாலன் வாழி கலிகன்றி

வாழி குறையலூர் வாழ்குவந்தன் வாழியரோ

மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள், மங்கையர் கோன்

தூயோன் சுடர் மான வேல்’

--- உடையவர் இயற்றிய பெரிய திருமொழித் தனியன்.

தம்மை ஒரு தலைவியாகக் கருதிப் பாடிய பெருமாள் திருமொழித் தனியன்:

‘இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே

தன்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்

சிலை சேர் நுதலியர்வேள் சேரலர் கோன் எங்கள்

குலசேகரன் என்றே கூறு’

‘சீரார் திரு வெழுகூற்றிருக்கை யென்னும் செந்தமிழால்

ஆராவமுதன் குடந்தைப் பிரான் தன் அடியிணைக் கீழ்

ஏரார் மறைப்பொருள் எல்லாம் எடுத்திவ்வுலகுய்யவே

சோராமற் சொன்ன அருள்மாரி பாதம் துணை நமக்கே’

என்கிறது திருவெழுகூற்றிருக்கை தனியன்.

திவ்யப் பிரபந்த ஈடுபாடு

திருப்பாவையில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டினால், ‘திருப்பாவை ஜீயர்’ என்ற பட்டம் பெற்றார். ராமானுஜர் உரை, நயங்களாகவும் ஆட்சிகளாகவும் ஈட்டு உரையில் பல குறிப்புகள் உள்ளன. ஒரு நாள் உலாவச் சென்றவர் பாதியிலேயே திரும்பிவிட்டார். திருமடத்திலிருந்த எம்பார் கதவைத் திறந்த படி, ‘ திருமாலிருஞ் சோலை மலைத் திருவாய்மொழி திருவுள்ளத்தில் ஓடுகிறது போலும்?” என்று வினவ, இவரும் ‘ஆம்; அப்படியே’ என்று கூறினார்.

தம் அரிய சீடர் கூரத்தாழ்வான் பரமபதித்தபோது, உடையவர் அவரது பிரிவைத் தாங்காமல், (பெரியாழ்வார் திருமொழிப்பாசுரத்தைப்பாடி) ‘ஒரு மகள் தன்னை உடையேன்’ என்றும், ‘உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல் வளர்ந்தேன்’ என்றும், ‘செங்கண்மால் தான் கொண்டு போனான்’ என்றும் அருளிச் செய்தார் என்று பிரசித்தமிறே’ என்பது மணவாள மாமுனிகளின் உரைக் குறிப்பு. மேலும் இவர் திவ்யப் பிரபந்தப் பாசுரத் தொடர்களுக்கு நுட்பமான உரைகளை உரைத்துள்ளார்.

‘வான் திகழும் சோலை’, என்று தொடங்கும் திருவாய்மொழித் தனியனில், ‘தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன், மொய்ம்யில் வளர்த்த இதத் தாய் இராமானுஜன்’ என்று கூறப்பட்டுள்ளது. திருவாய்மொழியை இவர் எவ்வாறு வளர்த்தார்? எனின், வியாக்கியானங்கள் தோன்ற நியமித்தார். ‘திருத்தலங்களில் இன்னின்ன சமயங்களில் இன்னின்ன பாசுரங்களை சேவிக்க வேண்டும்’ என்று கட்டளை வகுத்தார்.

ஸ்ரீ பாஷ்யம் வரைந்தபோது, ‘பாஷியக்காரர் இது கொண்டு சூத்திர வாக்கியங்கள் ஒருங்க விடுவர்’ என்னும் ஆசாரிய இருதய சூத்திரப்படி ஸ்ரீபாஷியத்தின் நிதியான பொருட்களை ஆழ்வாருடைய திருவாய்மொழியைக் கொண்டு நிர்ணயித்து ஒருங்கவிட்டார். இங்ஙனம் பலவகையிலும் தமிழ்மறையின் ஏற்றத்திற்கு எம்பெருமானார் பாடுபட்டதால்,

“மாறன் உரை செய் தமிழ்மறை வளர்த்தோன் வாழியே” என்று வாழித் திருநாமப்பாடலில் மணவாள மாமுனிகள் குறிப்பிட்டார். மேலும் அவர் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து அவர் மேல், ‘இராமாநுச நூற்றந்தாதி’ பாடிய திருவரங்கத்தமுதனார் தம் நூலில்,‘சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அறநெறியாவும் தெரிந்தவன்’ (44) என்றும், ‘உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந்தொறும் திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும் மாமலராள் புணர்ந்த பொன்மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும் குணம்திகழ் கொண்டல் குலக்கொழுந்து இராமானுஜன்’ (60) என்றும் போற்றிப் பாடியுள்ளார்.

திருவாய்மொழிக்கு ஒரு தனியன் பாடிய அனந்தாழ்வான் என்பவர், ‘ஏய்ந்த பெருங் கீர்த்தி இராமாநுச முனி தன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெருஞ்சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற’ என்று உடையவரின் திருவடிகளை வேண்டுகிறார்.

பெரிய திருமொழிக்கு ஒரு தனியன் பாடிய எம்பார் என்பவரும்,

‘எங்கள் கதியே இராமாநுச முனியே

சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்குபுகழ்

மங்கையர் குகான் ஈந்த மறையாயிர மனைத்தும்

தங்கு மனம் நீ யெனக்குத் தா’ என்று உடையவரை முன்னிலைப்படுத்தி விண்ணப்பிக்கிறார். அரையர் சேவை நடைபெற ஊக்கமளித்தார்.

இவ்வகையில் உடையவரின் பணிகள் அமையாமல் இருந்திருப்பின் நாதமுனிகளின் காலத்திற்கு முன் இருந்த நிலையிலேயே திவ்யப் பிரபந்தங்கள் அமைந்திருக்கும். அந்நிலை நேரா வண்ணம் இவர் பலவகையில் திவ்யப் பிரபந்தங்களுக்கு ஏற்றமளித்துப் பாதுகாத்தார்.

Thursday, May 19, 2016

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்கள்

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்கள்:
  1. முதுகுளத்தூர்- திரு.மலேசியா பாண்டியன்(காங்கிரஸ் )
  2. திருப்பத்தூர் - திரு.கே ஆர் பெரியகருப்பன்(திமுக)

திரு.மலேசியா பாண்டியன்

திரு.கே ஆர் பெரியகருப்பன்

Saturday, May 14, 2016

அதிமுகவை வீழ்த்துவதே எங்கள் லட்சியம்:தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை

மதுரையில் தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘யாதவ மக்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகளின் தலைவர் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன். இவருக்கு சட்டமன்ற தேர்தலில் சீட் வழங்காமல் அதிமுக புறக்கணித்துள்ளது. அவரை புறக்கணித்த அதிமுகவை ஒட்டுமொத்த யாதவ சமுதாய மக்களும் புறக்கணிப்போம். ஒவ்வொரு தொகுதியிலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யாதவ சமுதாய வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக வாக்களித்து பாடம் புகட்டுவார்கள். சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை வீழ்த்துவதே எங்கள் லட்சியம்,’’ என்றார்.



Tuesday, April 26, 2016

தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சிதம்பரத்தில் தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி சார்பில் 36 வேட்பாளர்களைக் கொண்ட முதல்கட்ட பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவர் என்.இளங்கோயாதவ் சனிக்கிழமை வெளியிட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 50 தொகுதிகளில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறோம். வருகிற ஏப்.26ஆம் தேதி, 14 பேர் கொண்ட 2ஆவது பட்டியலை வெளியிட உள்ளோம். மே 8இல் திருவண்ணாமலையில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் தேசிய துணைத் தலைவர் கிரன்மெய்நந்தா எம்.பி., தேசியச் செயலர்கள் ஜோ.ஆண்டனி, ராஜேஷ் தீட்சித் ஆகியோர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகின்றனர்.

மே 11,12 தேதிகளில் மதுரை மற்றும் திருவண்ணாமலையில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அகில இந்தியத் தலைவர் முலாயம்சிங் யாதவ், உ.பி. முதல்வர் அகிலேஷ்யாதவ் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர் என்றார் அவர்.

முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்:

  1. மதுரை (கிழக்கு)- எம்.கண்ணன்யாதவ்
  2. மேலூர்- எஸ்.அழகர்சாமியாதவ்
  3. ராஜபாளையம்- ஆர்.மகேஷ்குமார்
  4. திருச்சி- என்.எம்.நீலமேகம்யாதவ்
  5. அம்பத்தூர்- எம்.விஜயகுமாரன்
  6. நெல்லை- நெல்லை எஸ்.இமாம்
  7. பட்டுக்கோட்டை- எம்.முஸ்தபா
  8. திருவையாறு- டி.தன்ராஜ்யாதவ்
  9. புதுக்கோட்டை- எம்.ராம்ராஜ்யாதவ்
  10.  விராலிமலை- ஆர்.கண்ணன்யாதவ்
  11. பல்லடம்- மாலி சதீஷ்குமார் யாதவ்
  12. சூலூர்- பொன்.மனோகரன் யாதவ்
  13. திருவண்ணாமலை- ஆதி.வெங்கடேசன் யாதவ்
  14. கலசபாக்கம்- ஆர்.பிரதீஷ்குமார்
  15. செங்கம் (தனி)- பி.கிருஷ்ணவேணி
  16.  கீழ்பென்னாத்தூர்- பி.சம்பத்குமார்
  17. வந்தவாசி (தனி)- எம்.ராமமூர்த்தி
  18. போளூர்- எம்.சுகுணா
  19. செய்யாறு- ஜான்கென்னடி
  20. ஆரணி- எம்.ஜானகிராமன்
  21. அணைக்கட்டு- பி.சிவக்குமார்யாதவ்
  22. வேலூர்- கே.ரமேஷ்யாதவ்
  23. காட்பாடி- கே.எல்.சண்முகம்யாதவ்
  24. செஞ்சி- ஏழுமலையாதவ்
  25. விக்கரவாண்டி- ஜே.ரவிச்சந்திரன்
  26. போடி- வி.நாகஜோதி
  27. ஆண்டிப்பட்டி- ஜி.கே.மீனாட்சிசுந்தரம்
  28. பெரியகுளம் (தனி)- பி.ஜெயச்சந்திரன்
  29. கம்பம்- பி.திருசிங்கம்யாதவ்
  30. திருப்போளூர்- ஐ.ஆனந்த் எழிலரசு
  31. சோழிங்கநல்லூர்- எம்.மகேந்திரன்
  32. தாம்பரம்- எஸ்.தனசேகர்
  33. திருவள்ளூர்- எம்.தெய்வசிகாமணி யாதவ்
  34. ஆத்தூர்- என்.முருகேசன்
  35. கும்பகோணம்- டி.சந்திரகுமார்
  36. விழுப்புரம்- என்.ராமகிருஷ்ணன்

Friday, April 22, 2016

ஜனதா கட்சியுடன் கூட்டணி: கோகுல மக்கள் கட்சிக்கு 32 தொகுதிகள் ஒதுக்கீடு


சரத்யாதவ், நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், மத சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜெபமணி ஜனதா போன்ற ஜனதா கட்சிகளை ஒன்றிணைத்து புதிய கூட்டணி தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனதா முன்னணி என உருவாக்கப்பட்ட இந்த கூட்டணியில் கோகுல மக்கள் கட்சியும் சேர்ந்துள்ளது.


சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணியில் கோகுல மக்கள் கட்சிக்கு 32 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியலை கட்சியின் நிறுவன தலைவர் எம்.வி. சேகர் வெளியிட்டார்.

இந்த கட்சிக்கு ‘புல்லாங் குழல்’ சின்னம் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:-

கும்மிடிப்பூண்டி, கொளத்தூர், ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், வேளச்சேரி, சோளிங்கநல்லூர், ஆலந்தூர், சோளிங்கர், அணைக்கட்டு.

பர்கூர், திருவண்ணாமலை, கீழ் பென்னாத்தூர், போளூர், ஆரணி, செய்யாறு, மைலம், திருப்பூர் வடக்கு, கவுண்டம்பாளையம், அரவாக்குறிச்சி, கரூர்.

போராவூரணி, விராலி மலை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, கம்பம், திருவாடனை, பாளையங்கோட்டை, நாங்குநேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar